Just In
- 1 min ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 53 min ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 3 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 4 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- News மகளிர் உரிமை தொகை திட்டத்தில்.. வருகிறது மிகப்பெரிய விதி மாற்றம்? பெண்கள் எதிர்பார்த்த முக்கிய சலுகை
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்! விஷயத்தை கேள்விப்பட்டு புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்
நாமக்கல் உணவக உரிமையாளர் செய்த சபதத்திற்காக, காரைக்குடி மக்கள் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
கொரோனா வைரஸ், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தற்போது வாகன பயன்பாடு குறைந்துள்ளது. ஒரு சிலர் பல மாதங்களாக வாகனங்களை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இப்படி நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் வாகனங்களில், கூடு கட்டி வசிப்பதை பறவைகள் வழக்கமாக கொண்டுள்ளன.
இதன்படி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் ஸ்கூட்டரில், சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியது. இதன் காரணமாக சுமார் 3 மாதங்களாக அவர் ஸ்கூட்டரை பயன்படுத்தாமல் இருந்து வந்தார். சிட்டுக்குருவிக்காக வழக்கறிஞர் ஒருவர் ஸ்கூட்டரை 3 மாதங்களாக தியாகம் செய்த தகவல், கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதற்கு அடுத்தபடியாக துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரிலும் சமீபத்தில் பறவை ஒன்று கூடு கட்டியது. எனவே பறவைக்கு எவ்விதமான தொந்தரவும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அந்த காரை சுற்றிலும் துபாய் பட்டத்து இளவரசர் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினார்.
மேலும் அந்த காருக்கு அருகே யாரும் செல்லக்கூடாது என அதிரடியாக உத்தரவும் பிறப்பித்தார். இதேபோல் தமிழகத்தில் மீண்டும் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. கரிச்சான் குருவி அடைகாப்பதற்காக உணவக உரிமையாளர் ஒருவர் தனது ஸ்கூட்டரை தியாகம் செய்துள்ளார். காரைக்குடியில் நடைபெற்றுள்ள இச்சம்பவமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோபால் என்பவரின் ஸ்கூட்டரில்தான் கரிச்சான் குருவி கூடு கட்டியுள்ளது. 37 வயதாகும் இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும், காரைக்குடியில் உணவகம் ஒன்றை திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த உணவகத்தை நண்பர்களுடன் சேர்ந்து திறக்க கோபால் முடிவு செய்துள்ளார்.
இதனால் காரைக்குடி ராம் நகர் அருகே இருக்கும் உதயம் நகர் என்னும் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளார். ஊரடங்கு காலத்தில் வாகனங்களை இயக்குவதற்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்த விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் இயக்கப்பட்ட வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் மட்டும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காவல் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையாலும், கொரோனா வைரஸ் அச்சத்தாலும் வாகன பயன்பாடு முற்றிலுமாக குறைந்து போயிருந்தது. இதன்படி கோபாலும் தன்னுடைய ஸ்கூட்டரை அதிகம் பயன்படுத்தவில்லை.
வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தனது ஸ்கூட்டரை பயன்படுத்துவது கோபாலின் வழக்கம் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் அதிகம் பயன்படுத்தப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அதன் முன் பகுதியில் கரிச்சான் குருவி கூடு கட்டியது. இதை பார்த்த கோபாலுக்கு கரிச்சான் குருவியின் கூட்டை கலைப்பதற்கு மனம் வரவில்லை. எனவே அதனை அப்படியே விட்டு விட்டார்.
மேலும் தனது ஸ்கூட்டரில் கரிச்சான் குருவி கட்டிய கூட்டின் மேற்புறத்தில் துணி ஒன்றையும் அவர் கட்டினார். மற்ற பறவைகளால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அவர் இதனை செய்துள்ளார். இதுதவிர தினமும் குருவிக்கு தண்ணீரும் வைத்து வருகிறார். இதற்கு இடையே அந்த குருவி மூன்று முட்டைகளை இட்டு அடை காத்து வந்தது.
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் மூன்று முட்டைகளில் இருந்தும் கரிச்சான் குருவி குஞ்சுகளை பொறித்தது. குருவி கூடு கட்டிய காரணத்தால் கடந்த ஒன்றரை மாதமாக கோபால் தனது ஸ்கூட்டரை பயன்படுத்தாமல் இருந்து வருகிறார். கடைகளுக்கு செல்வது உள்ளிட்ட பணிகளுக்கு அவர் நடந்து செல்வதை பழக்கமாக்கி கொண்டுள்ளார்.
இதை கேள்விப்பட்ட காரைக்குடி பகுதி மக்கள் கோபாலை மனதார பாராட்டி வருகின்றனர். குருவி குஞ்சுகள் சிறகுகள் முளைத்து பறக்கும் வரை ஸ்கூட்டரை எடுக்கப்போவதில்லை என கோபால் சபதம் ஏற்றுள்ளார். அதன்பிறகுதான் அவர் ஸ்கூட்டரை எடுக்க திட்டமிட்டுள்ளார். நம்மால் இன்றைய சூழலில் வாகனங்கள் இல்லாமல் நிச்சயம் இருக்கவே முடியாது.
நடந்து செல்லக்கூடிய தொலைவில் உள்ள கடைகளுக்கு செல்வதற்கு கூட வாகனங்களை பயன்படுத்தி நாம் பழகி விட்டோம். அப்படி இருக்கையில் குருவிகளுக்காக தனது ஸ்கூட்டரை தியாகம் செய்துள்ள கோபால் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான். இந்த நிகழ்வு குறித்து இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!