Just In
- 17 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து தமிழக அதிகாரி ஒருவர் விளக்கும் வீடியோ ஒன்று, சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியதை இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.
ஆனால் இந்தியாவில் வாகன ஓட்டிகள் பலர் இன்னமும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை. குடிபோதையிலும், அதிவேகத்திலும், செல்போனில் பேசிக்கொண்டும், தலை கவசம் அணியாமலும் பலர் தொடர்ந்து வாகனங்களை இயக்கி கொண்டுதான் உள்ளனர். சீட் பெல்ட் அணியாமல் கார்களில் பயணம் செய்வதும் இந்தியாவில் பொதுவான ஒரு போக்குவரத்து விதிமுறை மீறலாக உள்ளது.
இன்றைய அதிநவீன கார்களில் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் வந்து விட்டன. இதில், சீட் பெல்ட்கள் மிகவும் முக்கியமானவை. கார் விபத்தில் சிக்கும்போது சீட் பெல்ட் அணியாத பயணிகள் பல்வேறு இடங்களில் மோதி படுகாயம் அடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. ஆனால் சீட் பெல்ட் அணிந்திருந்தால், அது உங்களை இருக்கையுடன் தாங்கி பிடித்து விடும்.
எனவே கார் தலை கீழாக உருண்டாலும் கூட, உங்கள் உடலில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை சீட் பெல்ட் வெகுவாக குறைத்து விடுகிறது. சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதால், இந்தியாவில் கார்களில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஓட்டுனர் மற்றும் முன் பக்க பயணி ஆகியோர் மட்டும் சீட் பெல்ட் அணிந்தால் போதும் என சிலர் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான எண்ணம். பின் இருக்கை பயணிகள் உள்பட காரில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். ஆனால் பலர் இந்த விதிமுறையை முறையாக பின்பற்றுவதில்லை என்பதுடன், காவல் துறையினரும் இந்த விதியை முறையாக அமல்படுத்துவதில்லை.
நீங்கள் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதை தவிர்ப்பவர் என்றால், உங்களுக்காகவே ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து இந்த வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ள தகவல்கள் பலரையும் கவர்ந்துள்ளதால், சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
குறிப்பாக பின் இருக்கை பயணிகளும் ஏன் சீட் பெல்ட் அணிய வேண்டும்? என்பதை அந்த அதிகாரி இந்த வீடியோவில் விளக்கியுள்ளார். பின் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணியாவிட்டால், விபத்தின்போது நடக்கும் அபாயங்களையும் அவர் எடுத்துரைத்துள்ளார். அத்துடன் விபத்தின்போது ஏர்பேக் பயணிகளை காப்பாற்றுவதில், சீட் பெல்ட்டிற்கு இருக்கும் பங்கு குறித்தும் அவர் பேசியுள்ளார். இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
தமிழகத்தில் தற்போது எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எக்ஸ்ட்ரா பம்பர்களை பொருத்துவதால் பாதசாரிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அத்துடன் விபத்தின்போது ஏர் பேக்குகள் சரியான நேரத்தில் விரிவடைவதிலும் எக்ஸ்ட்ரா பம்பர் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஆனால் வாகன ஓட்டிகள் பலருக்கு எக்ஸ்ட்ரா பம்பர்களின் அபாயம் என்னவென்று தெரியாமல் இருந்தது. எனினும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பிறகு எக்ஸ்ட்ரா பம்பர்களால் ஏற்படும் ஆபத்துக்களை வாகன ஓட்டிகள் உணர்ந்து கொண்டனர். அந்த வகையில் இந்த வீடியோவை பார்த்த பிறகு, கார்களில் பயணிக்கும் அனைவரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிவார்கள் என நம்பலாம்.
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!