Just In
- 14 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 41 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 57 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சூப்பரான காரியத்தை செய்தார்... தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு குவியும் பாராட்டு! எதற்காக தெரியுமா?
தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோரின் மரணத்திற்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததே முக்கியமான காரணமாக உள்ளது. விபத்துக்களில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்தால், அவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் இந்தியாவில் இதனை செய்ய பெரும்பாலும் பலர் முன்வருவது கிடையாது. சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவினால், கோர்ட், கேஸ் என அலைய வேண்டியது வருமே என்ற பயம்தான் இதற்கு பிரதான காரணமாக உள்ளது. ஆனால் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு தயங்காமல் உதவி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களை எந்த விதத்திலும் துன்புறுத்த கூடாது என போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் கூட பெரும்பாலானோருக்கு இன்னமும் தயக்கம் இருந்து கொண்டேதான் உள்ளது. ஆனால் மறுபக்கம் அமைச்சர், முதல்வர்கள் போன்றவர்கள் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இதன் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. அத்துடன் பொதுமக்களுக்கு முன் உதாரணமாகவும் அவர்கள் மாறுகின்றனர். இந்த சூழலில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ததன் மூலம் தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நேற்று (அக்டோபர் 7) சாலை விபத்து ஒன்று நடைபெற்றது. ஆனந்த கிருஷ்ணன் என்பவர் தனது மனைவி பேபி மற்றும் மகளுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து அரங்கேறியது. இவர்கள் மூவரும் ஒத்தக்குதிரை-தாசம்பாளையம் பகுதிக்கு இடையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த வாகனம் ஒன்று டூவீலர் மீது மோதியது.
அந்த வாகனத்தின் அடையாளம் தெரியவரவில்லை. ஆனந்த கிருஷ்ணன் குடும்பம் பயணம் செய்த டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதன் காரணமாக மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், அமைச்சர் செங்கோட்டையன் தனது காரில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். விபத்தில் சிக்கியவர்களை பார்த்த உடன் காரை நிறுத்தும்படி தனது டிரைவருக்கு அவர் உத்தரவிட்டார்.
பின்னர் காரில் இருந்து இறங்கிய அமைச்சர் செங்கோட்டையன், விபத்தில் சிக்கிய மூன்று பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தார். அத்துடன் அவர்கள் மூவரையும் தனது பாதுகாப்பு வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் மூவரும் கோபி அரசு மருத்துவமனைக்கு கூட்டி செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கோபி அரசு மருத்துவமனையின் மருத்துவர்களையும் அமைச்சர் செங்கோட்டையன் தொடர்பு கொண்டார். அவர்கள் மூவருக்கும் சிறப்பான சிகிச்சையை வழங்கும்படி அப்போது அவர் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ததன் காரணமாக அமைச்சர் செங்கோட்டையனுக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதேபோல் நீங்களும் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு தாராளமாக உதவி செய்யலாம். இத்தகைய நிகழ்வுகளை முன்னுதாரணமாக கொண்டு ஒரு உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவிகளை இனி தயங்காமல் செய்யுங்கள்.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!