Just In
- 3 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 3 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 3 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 8 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சூப்பரான காரியத்தை செய்தார்... தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு குவியும் பாராட்டு! எதற்காக தெரியுமா?
தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோரின் மரணத்திற்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததே முக்கியமான காரணமாக உள்ளது. விபத்துக்களில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்தால், அவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் இந்தியாவில் இதனை செய்ய பெரும்பாலும் பலர் முன்வருவது கிடையாது. சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவினால், கோர்ட், கேஸ் என அலைய வேண்டியது வருமே என்ற பயம்தான் இதற்கு பிரதான காரணமாக உள்ளது. ஆனால் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு தயங்காமல் உதவி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களை எந்த விதத்திலும் துன்புறுத்த கூடாது என போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் கூட பெரும்பாலானோருக்கு இன்னமும் தயக்கம் இருந்து கொண்டேதான் உள்ளது. ஆனால் மறுபக்கம் அமைச்சர், முதல்வர்கள் போன்றவர்கள் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இதன் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. அத்துடன் பொதுமக்களுக்கு முன் உதாரணமாகவும் அவர்கள் மாறுகின்றனர். இந்த சூழலில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ததன் மூலம் தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நேற்று (அக்டோபர் 7) சாலை விபத்து ஒன்று நடைபெற்றது. ஆனந்த கிருஷ்ணன் என்பவர் தனது மனைவி பேபி மற்றும் மகளுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து அரங்கேறியது. இவர்கள் மூவரும் ஒத்தக்குதிரை-தாசம்பாளையம் பகுதிக்கு இடையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த வாகனம் ஒன்று டூவீலர் மீது மோதியது.
அந்த வாகனத்தின் அடையாளம் தெரியவரவில்லை. ஆனந்த கிருஷ்ணன் குடும்பம் பயணம் செய்த டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதன் காரணமாக மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், அமைச்சர் செங்கோட்டையன் தனது காரில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். விபத்தில் சிக்கியவர்களை பார்த்த உடன் காரை நிறுத்தும்படி தனது டிரைவருக்கு அவர் உத்தரவிட்டார்.
பின்னர் காரில் இருந்து இறங்கிய அமைச்சர் செங்கோட்டையன், விபத்தில் சிக்கிய மூன்று பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தார். அத்துடன் அவர்கள் மூவரையும் தனது பாதுகாப்பு வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் மூவரும் கோபி அரசு மருத்துவமனைக்கு கூட்டி செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கோபி அரசு மருத்துவமனையின் மருத்துவர்களையும் அமைச்சர் செங்கோட்டையன் தொடர்பு கொண்டார். அவர்கள் மூவருக்கும் சிறப்பான சிகிச்சையை வழங்கும்படி அப்போது அவர் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ததன் காரணமாக அமைச்சர் செங்கோட்டையனுக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதேபோல் நீங்களும் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு தாராளமாக உதவி செய்யலாம். இத்தகைய நிகழ்வுகளை முன்னுதாரணமாக கொண்டு ஒரு உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவிகளை இனி தயங்காமல் செய்யுங்கள்.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?