Just In
- 50 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உயிருக்கு போராடிய இந்து... முஸ்லீம் இளைஞர் செய்த காரியத்தால் மக்கள் நெகிழ்ச்சி... இதுதான் தமிழ்நாடு
இந்து நோயாளியின் உயிரை காப்பாற்றிய முஸ்லீம் இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை போல், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் கடவுளுக்கு இணையானவர்கள். இந்திய சாலைகளில் சாதாரணமாக ஒரு வாகனத்தை பாதுகாப்பாக இயக்குவதே மிகவும் கடினம். ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மற்றும் மிகவும் குறுகலான சாலைகளில் கூட ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அதிவேகமாகவும், பாதுகாப்பாகவும் சென்று நோயாளிகளின் உயிரை காப்பாற்றுகின்றனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மிக துரிதமாக செயல்பட்டு நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து, அவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவங்கள் கடந்த காலங்களில் பல முறை நடைபெற்றுள்ளன. இந்த வகையில் தமிழகத்தில் தற்போது ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. இதற்காக அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வாழ்க்கை எனும் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவருக்கு 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டன. எனவே திருவாரூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் வினோத்தின் உடல் நிலை சமீபத்தில் மோசமடைந்ததாக தெரிகிறது. இதனால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்ல வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். திருவாரூரில் இருந்து புதுச்சேரி சுமார் 150 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. சாதாரணமாக சென்றால், சுமார் 4 மணி நேரம் ஆகும்.
ஆனால் 3 மணி நேரத்திற்கு உள்ளாக அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சவாலான பணியை ஏற்றுக்கொள்வதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அல்மூமின் முன்வந்தார். வேகமாகவும், அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் ஆம்புலன்ஸை ஓட்டி செல்ல வேண்டும் என்ற நிலையில், அந்த பணியை அல்மூமின் கச்சிதமாக செய்து முடித்தார்.
திருவாரூரில் இருந்து புறப்பட்ட அடுத்த இரண்டே மணி நேரத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை ஆம்புலன்ஸ் சென்றடைந்தது. தமுமுக (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்) ஆம்புலன்ஸ் மூலமாக வினோத் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதற்காக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அல்மூமினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நாம் வாகனங்களில் சென்று கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ்கள் மிக அவசரமாக வந்தால், அதற்கு நாம் உரிய முறையில் வழிவிடுவது அவசியம். ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்தால், அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். அதற்காகதான் ஓட்டுனர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து ஆம்புலன்களை அதிவேகத்தில் ஓட்டி செல்கின்றனர். அவர்கள் வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காகவே, போக்குவரத்து சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்தாலும் நிற்க தேவையில்லை என்பது போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதை நாமும் புரிந்து கொண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம். பொறுப்பு உள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமைகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் ஒரு சிலர் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடுவது இல்லை. அப்படி நடந்து கொண்ட வாகன ஓட்டிகளின் காணொளிகள் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளன.
ஆம்புலன்ஸ் சுமந்து செல்வது நமக்கு விருப்பமான நபராக கூட இருக்கலாம் என்பதை இப்படிப்பட்ட நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள். திருவாரூர் நிகழ்வு தொடர்பாக நியூஸ்7 செய்தி வெளியிட்டுள்ளது.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!