Just In
- 19 min ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 58 min ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 3 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 4 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
Don't Miss!
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உயிரை பணயம் வைத்து மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே பாராட்டுது
தஞ்சையில் இருந்து மதுரைக்கு மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டி சென்ற டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்தியாவில் உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. அதுவும் தமிழகத்தில். சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம்பெண் ஒருவரின் கல்லீரல் மற்றொருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் உறுதுணையாக இருந்துள்ளார். பொதுவாக இந்தியாவில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர கால வாகனங்களுக்கு வழிவிடுவது தொடர்பாக மக்களுக்கு போதிய அளவில் விழிப்புணர்வு இல்லை. அவசர கால வாகனங்கள் செல்வதற்கு, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சில சமயங்களில் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
ஆனால் இந்த சம்பவத்தில் பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். அத்துடன் போக்குவரத்து காவல் துறையினரும், உரிய முன்னேற்பாடுகளை கச்சிதமாக செய்தனர். இதன் காரணமாக ஆம்புலன்ஸ் விரைவாக சென்று, கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தஞ்சையில் சமீபத்தில் சாலை விபத்து ஒன்றில் சிக்கிய 25 வயது இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரத்திற்கு மத்தியிலும் அவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க அவரது பெற்றோர் முன்வந்தனர். அந்த இளம்பெண்ணின் கல்லீரல் வேறு ஒரு நோயாளிக்கு பொருத்தமாக இருந்தது. அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே கல்லீரலை மதுரைக்கு கொண்டு செல்லும் பணிகள் வேகம் எடுத்தன. தஞ்சையில் இருந்து மதுரைக்கு சுமார் 190 கிலோ மீட்டர்கள். கல்லீரலை ஆம்புலன்ஸ் மூலம் சாலை மார்க்கமாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. எனவே போக்குவரத்து போலீசார் காலம் தாழ்த்தாமல் உடனடியாக முன்னேற்பாடு பணிகளை செய்தனர்.
இதன் காரணமாக 190 கிலோ மீட்டர் தூரத்தை ஆம்புலன்ஸ் வெறும் 1 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் கடந்தது. ஆம்புலன்ஸில் பத்திரமாக கொண்டு வரப்பட்ட கல்லீரல், அறுவை சிகிச்சையின் மூலம் அந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த ஆம்புலன்ஸை சுப்ரமணியன் என்ற டிரைவர் ஓட்டினார்.
அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஏனெனில் அவர் 140 கிலோ மீட்டர்கள் வேகத்தில் ஆம்புலன்ஸை இயக்கி, கல்லீரலை வெற்றிகரமாக மதுரை கொண்டு வந்து சேர்த்துள்ளார். இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் சுப்ரமணியன் கூறுகையில், ''ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆம்புலன்ஸை மிகவும் கவனமாக ஓட்டினேன்.
சூழ்நிலையை புரிந்து கொண்டு, ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கினர். போலீசாரும் தங்கள் பங்கிற்கு போக்குவரத்தை திறம்பட கையாண்டனர்'' என்றார். ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்கள் விரைவாக செல்வதற்கு உதவி செய்வது என்பது அனைவரின் கடமை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இதனால் வேகமாக செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு எக்காரணத்தை கொண்டும் இடையூறு ஏற்படுத்த கூடாது. ஆனாலும் ஒரு சிலர் உரிய விழிப்புணர்வு இல்லாமல், அவசர கால வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டுதான் உள்ளனர். அத்தகைய நபர்கள் மீது தற்போது போலீசார் கடும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.