Just In
- 4 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 4 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 6 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 7 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெட்ரோல் விலை உயர்வு.. மோடிக்கு தக்க பாடம் புகட்டிய தமிழக இளைஞர்கள்.. நாடே கொண்டாடுகிறது
கடலூர் அருகே நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கப்பட்டது.
கடலூர் அருகே நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டல் அடிக்கும் விதமாக, குறும்புக்கார நண்பர்கள் செய்த இந்த செயல், நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்த சுவாரசிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய வெகு ஜன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. வெறுமனே கையை கட்டி கொண்டு, வேடிக்கை பார்த்து வருகிறது மத்திய அரசு.
இதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கு எதிரான அலை நாடு முழுவதும் வீச தொடங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் கிண்டலடிக்கும் மீம்ஸ்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.
தற்போது விற்கும் விலைக்கு, பெட்ரோல் மற்றும் டீசலை, சாமானிய மக்களால் வாங்கவே முடியாது என்பதுதான் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டு. அது உண்மையும் கூட. இதனை மையப்படுத்திதான் சமூக வலைதளங்களில் அதிக அளவிலான மீம்ஸ்கள் உலா வருகின்றன.
இந்த சூழலில், தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒரு படி மேலே போய் விட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வையும், மத்திய அரசையும் இதை விட வேறு யாராலும் கிண்டல் அடிக்க முடியாது. அவர்கள் செய்த அந்த ருசிகரமான சம்பவம் குறித்த சுவாரசிய தகவல்களை இனி பார்க்கலாம்.
கடலூர் மாவட்டம் குமராட்சியில், இளஞ்செழியன்-கனிமொழி ஆகியோரின் திருமணம், நேற்று (செப்.16) நடைபெற்றது. மணமகன் இளஞ்செழியனின் நண்பர்கள் சிலர், திருமணத்திற்கு வந்திருந்தனர். அவர்களின் கையில், 5 லிட்டர் பெட்ரோல் இருந்தது.
நேராக மேடைக்கு ஏறிய இளஞ்செழியனின் நண்பர்கள், 5 லிட்டர் பெட்ரோலையும் திருமண பரிசாக மணமக்களுக்கு வழங்கினர். மணமக்களுக்கு பெட்ரோலை திருமண பரிசாக வழங்கியவர்களில் பிரபு என்ற மாணவரும் ஒருவர். இவர் சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார்.
இதுகுறித்து பிரபு கூறுகையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வெகு வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே நான் உள்பட இளஞ்செழியனின் நண்பர்கள், மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக வழங்க முடிவு செய்தோம். பெட்ரோல் விலை உயர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் எங்கள் நோக்கம் என்றார்.
இதில் பிரபு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் (Democratic Youth Federation of India-DYFI) உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறும்புக்கார இளைஞர்களின் குசும்பான செயல், தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து மணமக்களின் தோழியான தீபா என்பவர் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் விலை உயர்வானது, சாமானிய மக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை வெளிக்காட்ட விரும்பினோம். எங்களின் பரிசை மணமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்'' என்றார்.
முன்னதாக திருமணத்திற்கு பெட்ரோல், டீசலை பரிசாக வழங்கலாம் என்பது போன்ற மீம்ஸ்கள் உலா வந்து கொண்டிருந்தன. தற்போது அது உண்மையாகியுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தை மையமாக வைத்தும், மீஸ்கள் வர தொடங்கி விட்டன. தமிழ்நாட்டுக்காரங்களுக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்திதான்.
சென்னையில் இன்றைய (செப்.17) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 85.31 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை 78 ரூபாய். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததே, பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் இன்னும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்படவில்லை. இதனால் மத்திய, மாநில அரசுகள், பெட்ரோல், டீசலுக்கு பல்வேறு வரிகளை விதித்து வருகின்றன. அதாவது பெட்ரோல், டீசலின் உண்மையான விலையில் பாதியை, வரிகளுக்காகவே கொடுக்க வேண்டியுள்ளது.
எனவே பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் அதற்கும் மத்திய அரசு செவி சாய்க்க மறுக்கிறது. எனவேதான் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான அலை, நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!