Just In
- 28 min ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 2 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 3 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 5 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
Don't Miss!
- News சென்னைக்கு வெளியே போறீங்களா? வாகன ஓட்டிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.. போக்குவரத்தே மாற போகுது
- Movies ஒரே காரில் கமலும் சிம்ரனும்?.. அப்புறம்தான் கௌதமி?.. கண்டபடியெல்லாம் சொன்ன பிரபலம்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
இது விவசாயிகளின் உயிரை காக்கும்... உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழக இன்ஜினியர்களின் கண்டுபிடிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் பூச்சி மருந்து அடிக்கும் போது 5 விவசாயிகள் பலியாகினர். இனி இது போன்ற சம்பவத்தில் விவசாயிகள் பலியை தடுக்க இன்ஜினியரிங் மாணவர்கள் புதிய ஹெலி ஸ்பிரேயிங் கருவியை உருவாக்கியுள்ளனர
பெரம்பலூர் மாவட்டத்தில் பூச்சி மருந்து அடிக்கும் போது 5 விவசாயிகள் பலியாகினர். இனி இது போன்ற சம்பவத்தில் விவசாயிகள் பலியை தடுக்க இன்ஜினியரிங் மாணவர்கள் புதிய ஹெலி ஸ்பிரேயிங் கருவியை உருவாக்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே படிக்கலாம் வாருங்கள்.
இன்று இளைஞர்கள் மத்தியில் விவசாயம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட துவங்கியுள்ளது. பல இளைஞர்கள் விவசாயத்தை செய்ய ஆவலாக முன் வந்துள்ளனர்.
இன்றைய இளைஞர்களுக்கு தொழிற்நுட்பம் குறித்த அறிவு அதிகமாக இருப்பதால் அவர்கள் விவசாயத்தில் தங்களது தொழிற்நுட்ப அறிவை செலுத்தி புதிய விதமான தொழிற்நுட்ப கருவிகளை செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு சான்றாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரிகள் இருவர் தங்களுக்கு பணி கிடைக்காவிட்டாலும் தாங்களாக தங்களது இன்ஜினியரிங் திறனை வைத்து பூச்சி மருத்து தெளிக்கும் அதி நவீன இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது விவசாயிகளுக்கு மிகுந்த பலன் அளிக்கிறது.
செல்வகுமார், சுரேஷ் ஆகிய இரண்டு இன்ஜினியரிங் பட்டதாரிகள் உருவாக்கிய இந்த கருவிக்கு ஹெலி ஸ்பிரேயர் என்று பெயரிட்டுள்ளனர். இந்த ஹெலி ஸ்பிரேயர் என்பது ட்ரோனில் பறந்து கொண்டே பயிர்களில் பூச்சி மருந்தை தெளிக்கும்.
பெரம்பலூர் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் கிராமத்தில் மக்காச்சோளம் பயிருக்கு இந்த கருவியை கொண்டு பூச்சி மருத்து தெளிக்கப்பட்டது. இந்த செய்தி தற்போது விவசாயிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. பல விவசாயிகள் இந்த ரக கருவியை கொண்டு பூச்சி மருந்து தெளிக்க விருப்பப்பட்டு வருகின்றனர்.
இந்த ஹெலி ஸ்பிரேயர் கருவி 14 கிலோ எடை கொண்டது. இதைகொண்டு ஒரு முறையில் சுமார் 10 லிட்டர் பூச்சி மருந்தை தெளிக்க முடியும். சுமார் ஒரு மணி நேரத்தில் 6-8 ஏக்கர் பரப்பளவு வரை மருந்து தெளிக்க முடிகிறது.
இந்த கருவியை வைத்து மருந்து தெளிக்க இந்த கருவியை வடிவமைத்த செல்வகுமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவருமே நேரில் வந்து இந்த கருவியை கொண்டு பூச்சி மருத்தை பயிர்களில் தெளித்து தருகின்றனர்.
இதற்காக அவர்கள் குறைவான பணத்தையே பெறுகின்றனர். ஏக்கருக்கு சுமார் ரூ.600 வீதம் இந்த பூச்சி மருந்து தெளிப்பதற்காக வாங்குகின்றனர்.
இந்த ஹெலி ஸ்பிரேயர் கருவியில் இந்த இன்ஜினியரிங் பட்டதாரிகள் உருவாக்கிய மென்பொருள் ஏற்றப்பட்டுள்ளது. அந்த மென்பொருளில் எவ்வளவு பரப்பில் மருந்து அளிக்க வேண்டும், எவ்வளவு மருந்தை பயிர்களில் தெளிக்க வேண்டும், எந்த வடிவத்தில் நிலப்பரப்பு இருக்கிறது என்று வடிவமைத்தால் அதற்கு ஏற்ற வகையில் இந்த ஹெலி ஸ்பிரேயர்கள் செயல்படும்.
மேலும் இந்த ஹெலி ஸ்பிரேயரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் மட்டுமே இயக்க முடியும். சில கி.மீ. வரை இந்த ரிமோட் கண்ட்ரோலர்கள் செயல்படும் என்பதால் எளிதாக இருந்த இடத்தில் இருந்தே எவ்வளவு ஏக்கர் நிலம் இருந்தாலும் எளிதாக இந்த கருவி கொண்டு மருந்து தெளிக்க முடியும்.
சேலம் மாவட்ட இளைஞர்கள் தயாரித்த இந்த ஹெலி ஸ்பிரேயர் குறித்து கேள்விப்பட்ட பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் உடனடியாக அந்த இளைஞர்களை அழைத்து அதை முதன் முறையாக தங்களது வயல்களில் தெளித்து பார்த்தனர். இதற்கு பின்னால் ஒரு பெரும் சோக கதையே உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரம்பலூர் மாவட்டத்தில் வீரிய ரக பூச்சி மருந்தை தெளித்த 5 விவசாயிகள் பூச்சி மருந்து தெளிப்பு பணியின் போது பூச்சி மருந்தின் நெடி தாங்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு 5 விவசாயிகளும் பரிதாபமாக பலியாகினர்.
இந்த சம்பவம் அந்த மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருவதாகவும் இதற்கு தீர்வு கிடைக்காமல் அவர்கள் திண்டாடியதாகவும் கூறப்படுகிறது.
அப்படி இருக்கையில்தான் சேலம் மாவட்ட இன்ஜினியரிங் பட்டதாரிகள் செய்த இந்த ஹெலி ஸ்பிரேயர் பற்றி கேள்விப்பட்ட இம்மாவட்ட மக்கள் இதை முதலில் சோதித்துள்ளனர். தற்போது இது வெற்றிகரமாக வேலை செய்வதால் இதை மற்ற விவசாயிகளும் தங்கள் நிலத்தில் பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
இன்றைய இளைஞர்கள் தங்களுக்குள் திறமை இருந்தும் வேலை கிடைக்காவிட்டாலும் தங்கள் திறமையை இப்படியாக பயன்படும் வகையில் செய்து அதை ஒரு தொழிலாக செய்து வர முயல்வது நிச்சயம் வரவேற்க்க வேண்டியது. இது போன்ற இளைஞர்கள் இருப்பதால் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
Source : PuthiyaThalimurai