Just In
- 33 min ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 1 hr ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 3 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 4 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
Don't Miss!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- News 370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எந்த கட்டுப்பாடும் இல்ல... முழு திறனுடன் இயங்கலாம்... கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு?..
வாகன உற்பத்தி நிறுவனங்கள் முழு திறனுடன் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் நாட்டையே உலுக்கியெடுத்துவிட்டது. குறிப்பாக, தமிழகம், மும்பை, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் இரண்டாம் அலை பரவலால் மிகக் கடுமையான சேதத்தைச் சந்தித்திருக்கின்றன. வைரஸ் பரவல் நாளுக்கு புதிய உச்சத்தை எட்டியதனால் முழு ஊரடங்கை இந்த மாநிலங்கள் அறிவித்தன.
தமிழகமும் தளர்வுகளற்ற முழு முடக்கத்தை அறிவத்தது. அத்தியாவசிய பொருட்களை விற்பனைச் செய்யும் கடைகளுக்குகூட மாநிலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இத்தகைய கடும் கெடுபிடி காரணமாக மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்து நிறுவனங்களும் மிகக் கடுமையாக பாதித்தன.
குறிப்பாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிகக் கடுமையான பின் விளைவுகளைச் சந்தித்தன. தமிழகத்தை மையமாகக் கொண்டு ராயல் என்பீல்டு, ரெனால்ட்-நிஸான், டைம்லர், ஹூண்டாய் மற்றும் ஃபோர்டு என பல்வேறு நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
அவை, தமிழகத்தில் நிலவிய தளர்வுகளற்ற முழு பொது முடக்கத்தின் காரணமாக கணிசமான நாட்கள் இழுத்து மூடம் நிலைக்கு தள்ளப்பட்டன. இந்த நிலையை அடுத்து சிறப்பு பெறப்பட்டு மீண்டும் நிறுவனங்கள் கணிசமான ஊழியர்களுடன் உற்பத்தி பணியைத் தொடங்கின.
இருப்பினும், முழு பணியாட்கள் பணிபுரிய அனுமதிக்காத காரணத்தினால் உற்பத்தி பணிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் வாகன உற்பத்தி நிறுவனங்கள் முழு திறனுடன் செயல்பட தமிழக அரசு அனுமதிக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கார்அண்ட்பைக் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டிருக்கும் செய்தியில், "தமிழகத்தின் தலைநகர் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கு 100 சதவீத திறனில் இயங்க அரசு அனுமதித்திருப்பதாக" தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற அரசு அனுமதி வழங்கி வந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சிறப்பு அனுமதியின்கீழ் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் 7 இருக்கைகள் வசதிக் கொண்ட அல்கஸார் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கான உற்பத்தி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால் ஸ்ரீபெரம்புதூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் நூறு சதவீத திறனுடன் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளது.
அதேசமயம், ஃபோர்டு நிறுவனம் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு வகுத்த கொரோனா விதிகளுக்கு உட்பட்டு இயங்கி வருவதாக தெரிவித்துள்ளது. நிஸான் நிறுவனமும் இதே பாணியில் செயல்பட்டு வருவதாக கூறியிருக்கின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுகுறித்த கேள்விக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. இந்த நிறுவனம் சென்னையை அடுத்துள்ள கசடிமங்களம் பகுதியில் இயங்கி வருகின்றது.