Just In
- 2 hrs ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 3 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 4 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 4 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
Don't Miss!
- Movies Actor Vijay: விஜய்யுடன் GOAT படத்தில் நடிக்கும் தோனி?.. கேரள ரசிகர்கள் செய்த சிறப்பான சம்பவம்!
- News இப்பவும் நாமதான் ‘டாப்’ல இருக்கணும்.. தோழமை கட்சிக்காக டார்கெட் வைத்து களத்தில் இறங்கிய ஐ.பெரியசாமி!
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
எந்த கட்டுப்பாடும் இல்ல... முழு திறனுடன் இயங்கலாம்... கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு?..
வாகன உற்பத்தி நிறுவனங்கள் முழு திறனுடன் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் நாட்டையே உலுக்கியெடுத்துவிட்டது. குறிப்பாக, தமிழகம், மும்பை, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் இரண்டாம் அலை பரவலால் மிகக் கடுமையான சேதத்தைச் சந்தித்திருக்கின்றன. வைரஸ் பரவல் நாளுக்கு புதிய உச்சத்தை எட்டியதனால் முழு ஊரடங்கை இந்த மாநிலங்கள் அறிவித்தன.
தமிழகமும் தளர்வுகளற்ற முழு முடக்கத்தை அறிவத்தது. அத்தியாவசிய பொருட்களை விற்பனைச் செய்யும் கடைகளுக்குகூட மாநிலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இத்தகைய கடும் கெடுபிடி காரணமாக மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்து நிறுவனங்களும் மிகக் கடுமையாக பாதித்தன.
குறிப்பாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிகக் கடுமையான பின் விளைவுகளைச் சந்தித்தன. தமிழகத்தை மையமாகக் கொண்டு ராயல் என்பீல்டு, ரெனால்ட்-நிஸான், டைம்லர், ஹூண்டாய் மற்றும் ஃபோர்டு என பல்வேறு நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
அவை, தமிழகத்தில் நிலவிய தளர்வுகளற்ற முழு பொது முடக்கத்தின் காரணமாக கணிசமான நாட்கள் இழுத்து மூடம் நிலைக்கு தள்ளப்பட்டன. இந்த நிலையை அடுத்து சிறப்பு பெறப்பட்டு மீண்டும் நிறுவனங்கள் கணிசமான ஊழியர்களுடன் உற்பத்தி பணியைத் தொடங்கின.
இருப்பினும், முழு பணியாட்கள் பணிபுரிய அனுமதிக்காத காரணத்தினால் உற்பத்தி பணிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் வாகன உற்பத்தி நிறுவனங்கள் முழு திறனுடன் செயல்பட தமிழக அரசு அனுமதிக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கார்அண்ட்பைக் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டிருக்கும் செய்தியில், "தமிழகத்தின் தலைநகர் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கு 100 சதவீத திறனில் இயங்க அரசு அனுமதித்திருப்பதாக" தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற அரசு அனுமதி வழங்கி வந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சிறப்பு அனுமதியின்கீழ் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் 7 இருக்கைகள் வசதிக் கொண்ட அல்கஸார் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கான உற்பத்தி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால் ஸ்ரீபெரம்புதூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் நூறு சதவீத திறனுடன் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளது.
அதேசமயம், ஃபோர்டு நிறுவனம் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு வகுத்த கொரோனா விதிகளுக்கு உட்பட்டு இயங்கி வருவதாக தெரிவித்துள்ளது. நிஸான் நிறுவனமும் இதே பாணியில் செயல்பட்டு வருவதாக கூறியிருக்கின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுகுறித்த கேள்விக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. இந்த நிறுவனம் சென்னையை அடுத்துள்ள கசடிமங்களம் பகுதியில் இயங்கி வருகின்றது.