Just In
- 38 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Movies Baakiyalakshmi: பளார்.. என்னா அடி.. ஜெனி காலில் விழுந்து சரணடைந்த செழியன்!
- News இறங்கிய வேகத்திலேயே ஏறிய சின்ன வெங்காயம்.. கோயம்பேட்டில் இஞ்சி பாருங்க.. சென்னையில் காய்கறிகள் விலை
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
குடியரசு தின விழா அணிவகுப்பில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் குடியரசு தினம் நேற்று (ஜனவரி 26) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இதற்கான விழாவில், இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் போராட்டம், கொரோனா அச்சுறுத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் இந்த விழாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஆம், குடியரசு தின விழாவின் கண்கவர் அணிவகுப்பில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் பங்கேற்றுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அணிவகுப்பில் பங்கேற்றதை கீழே உள்ள வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் வாகனத்தில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வைக்கப்பட்டிருந்தது. 'உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்' என்ற மத்திய அரசின் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அந்த திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி பவனி வந்தது.
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு ஆகும். இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி திகழ்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஏற்கனவே விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் சவாலான விலையில், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் விற்பனைக்கு வந்த காரணத்தால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அத்துடன் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டியாக எந்த மாடலும் இல்லை.
ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனையில் சவால் அளித்தாலும், அவை நேரடி போட்டி கிடையாது. ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வந்த பின், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.
டாடா நிறுவனத்தை போல், மஹிந்திரா நிறுவனமும் தனது ஐசி இன்ஜின் எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது கேமரா கண்களில் சிக்கியுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை தூண்டியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி நடப்பாண்டு விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களை களமிறக்கும் பணிகளில் தற்போது மஹிந்திரா நிறுவனம் தீவிரமாக உள்ளது. இந்த 2 புதிய மாடல்களுக்கு பிறகு எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்