Just In
- 1 hr ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 2 hrs ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 2 hrs ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 3 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க மத்திய அரசு செய்யும் செம ட்ரிக்! என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், மத்திய அரசின் திட்டம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால், உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளிலும் முக்கியமான தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டன. மேலும் ஏராளமான முன்னணி நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதன் விளைவால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களும் மற்றும் தனி நபர்களும் மட்டுமல்லாது, அரசாங்கங்களும் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள, அதிகமான தொகையை மத்திய, மாநில அரசுகள் தற்போது செலவிட வேண்டியுள்ளது. நிவாரண பணிகள் மற்றும் சலுகைகளை வழங்குவதற்கு அதிகப்படியான நிதி தேவைப்படும் நிலையில், வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளும் தடுமாறும் சூழல் உருவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய நிதி நெருக்கடிகள் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்துவதற்கு மத்திய அரசு தற்போது திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு, லிட்டருக்கு 3 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலால் வரியை எப்போது உயர்த்துவது? என்பது தொடர்பான இறுதி முடிவு மிக விரைவில் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் இதன் பலன் இந்திய மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த மாதம் சுமார் 45 அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது தற்போது 40 டாலர்களாக குறைந்துள்ளது. ஆனால் மத்திய அரசு அதிகப்படியான வரிகளை விதிப்பதால், இதன் உண்மையான பலனை இந்திய மக்கள் அனுபவிக்கவில்லை. சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் மீது அதிக வரியை விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் சுமார் 70 சதவீதத்தை நாம் வரியாக செலுத்தி வருகிறோம். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி கலால் வரி உயர்த்தப்பட்டால், இது 75-80 சதவீதமாக உயரலாம். ஆனால் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தினாலும், சில்லறை விலையில் அது எதிரொலிக்குமா? என்பது சந்தேகம்தான்.
அதாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால், சில்லறை விலை மாறாமல் இருக்கலாம். அல்லது சற்றே உயரலாம். ஏற்கனவே கூறியதை போல், கச்சா எண்ணெய் விலை தற்போது மிகவும் குறைவாக உள்ளது. எனவே மத்திய அரசு மனது வைத்து, வரிகளை உயர்த்தாமல் இருந்தாலோ அல்லது குறைத்தாலோ அதன் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
அதாவது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலை வெகுவாக குறையும். ஆனால் மத்திய அரசு வரிகளை உயர்த்தி கொண்டே இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும், அதன் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. அதாவது தொடர்ந்து அதிகப்படியான விலையில் பெட்ரோல், டீசலை வாங்க வேண்டிய சூழல் காணப்படுகிறது.
வருவாயை பெருக்கி கொள்வதற்கு, மத்திய அரசு பின்பற்றும் யுக்தி இது. இதனால் பாதிக்கப்பட்டு வருவது என்னவோ வாகன ஓட்டிகள்தான். ஏற்கனவே அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசலை வாங்கி வரும் நிலையில், கலால் வரியை மேலும் உயர்த்த திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல், வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?