Just In
- 37 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பைத்தான்-5 ஏவுகணையுடன் வலிமையை கூட்டிக் கொண்ட தேஜஸ் போர் விமானம்!
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் பைத்தான்-5 ஏவுகணையை இணைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தேஜஸ் போர் விமானத்தின் வலிமை மேலும் கூடி இருக்கிறது.
தேஜஸ் போர் விமானத்தில் டெர்பி வகை ஏவுகணை ஏற்கனவே இணைக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் டெர்பி ஏவுகணை பார்வைக்கு அப்பால் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கியது.
இந்த நிலையில், தேஜஸ் போர் விமானத்தின் வலிமையை அதிகரிக்கும் விதமாக மற்றுமொரு ஏவுகணை இணைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டு தயாரிப்பான 5வது தலைமுறை பைத்தான்-5 ஏவுகணை இப்போது தேஜஸ் போர் விமானத்தில் இணைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேஜஸ் போர் விமானத்தில் பைத்தான்-5 ஏவுகணையை பொருத்தி சோதனைகள் நடத்தப்பட்டன. கடினமான சூழல்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மிகவும் திருப்திகரமாகவும், 100 சதவீதம் துல்லியமாகவும் அமைந்ததையடுத்து, தேஜஸ் போர் விமானத்தில் பைத்தான்-5 ஏவுகணையை இணைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பைத்தான்-5 ஏவுகணையானது வானில் இருந்து வான் இலக்கை அழிக்கும் திறன் கொண்டது. சோதனைகளின்போது, திட்டமிட்டபடி, தேஜஸ் போர் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்ட பைத்தான்-5 ஏவுகணை இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது.
விமான தொழில்நுட்ப மேம்பாட்டு முகமை(ADA), மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிஸ் லிமிடேட் (HAL) மற்றும் இந்திய விமானப்படை (IAF) விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் கூட்டு முயற்சியில் இந்த சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு, தேஜஸ் போர் விமானத்தில் பைத்தான்-5 ஏவுகணை சேர்க்கப்பட்டுள்ளது.
பைத்தான்-5 ஏவுகணையை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபெனஅஸ் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ஏவுகணை 3.1 மீட்டர் நீளமும், 6.3 அங்குல விட்டமும் கொண்டது.
இந்த ஏவுகணை 20 கிமீ தொலைவில் இருக்கும் வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறனை பெற்றிருக்கிறது. இந்த ஏவுகணை பயன்படும். மேக்-4 என்ற வேகத்தில் இலக்கை நோக்கி பாய்ந்து செல்லும் திறன் படைத்தது.
இந்த ஏவுகணையின் முகப்பில் 11 கிலோ எடையுடைய வெடிபொருள் பொருத்தப்பட்டு இருக்கும். உலகின் சிறந்த வானில் இருந்து வான் இலக்கை துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2006ம் ஆண்டு லெபனான் போரின்போது எஃப்-16 போர் விமானத்தில் வைத்து இந்த பைத்தான் ஏவுகணை வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
தேஜஸ் போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் மற்றொரு ஏவுகணையான டெர்பி கூட பைத்தான்-4 ஏவுகணையின் அடிப்படையில் அதிக தூரம் பாய்ந்து செல்லும் திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக உருவாக்கப்பட்டது. ஆனால், இது தனி வகையில் வேறு பெயரில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, பார்வை தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கையும் தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தது.