Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Movies டிரான்ஸ்பரண்ட் சேலை.. அட்டகாசமாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- News கடும் வெயில்.. வெப்ப அலை.. வாக்களிக்க போகிறீர்களா? அதிகாரிகள் சொன்ன முக்கிய அறிவுரை!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
சீனாவில் டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள அன்டர்க்ரவுண்டு கராஜில், டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் தயாரித்து வரும் முன்னணி எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக மாடல் 3 திகழ்கிறது. தற்போது இந்த எலெக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் இந்தியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் மாடல் 3 எலெக்ட்ரிக் காரைதான் டெஸ்லா நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஷாங்காய் நகரில் டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரில் தீப்பற்றிய சம்பவம் நேற்று முன் தினம் (ஜனவரி 19ம் தேதி) இரவு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதி ஒன்றின் அன்டர்க்ரவுண்டு கராஜில் நிறுத்தப்பட்டிருந்த சமயத்தில் டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரில் தீப்பற்றியுள்ளது. காருக்கு கீழே ஏற்பட்ட மோதல் காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எப்படி தீப்பற்றியது? என்பது தொடர்பாக தற்போது வரை உறுதியாக தகவல் வெளியாகவில்லை.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அன்டர்க்ரவுண்டு கராஜின் நுழைவுவாயிலுக்கு நெருக்கமாக இந்த டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் நிறுத்தப்பட்டிருந்தது. ஷாங்காயில் உள்ள தொழிற்சாலையில் டெஸ்லா நிறுவனம் மாடல் 3 எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது.
ஆனால் தீப்பற்றிய மாடல் 3 எலெக்ட்ரிக் கார், ஷாங்காயில் உற்பத்தி செய்யப்பட்டதா? அல்லது இறக்குமதி செய்யப்பட்ட வெர்ஷனா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் சீனாவில் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் தீப்பற்றி எரிவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாகவும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
சீனாவில் உற்பத்தியை தொடங்குவதற்கு முன்னதாக, மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் கார்களை டெஸ்லா நிறுவனம் சீனாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்து கொண்டிருந்தது. இதில், ஒரு மாடஸ் எஸ் எலெக்ட்ரிக் கார் கடந்த 2019ம் ஆண்டு தீப்பிடித்தது. ஷாங்காயில் தற்போது டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரில் தீப்பிடித்திருக்கும் சம்பவம் தொடர்பாக சிஎன்பிசி செய்தி வெளியிட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் கார்களை விற்பனை செய்து வந்தாலும், இந்தியாவில் இன்னும் வர்த்தகத்தை தொடங்கவில்லை. ஆனால் இந்திய சந்தையில் டெஸ்லா கார்களின் விற்பனை நடப்பாண்டு தொடங்கப்படவுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் விலை குறைவான கார் என்பதால், மாடல் 3 எலெக்ட்ரிக் கார்தான் இந்திய சந்தையில் முதலில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் வருகையை இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் நடைபெற்றுள்ள தீ விபத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அரிதாக நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால் டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதை மறுக்க முடியாது.
Note: Images used are for representational purpose only.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!