Just In
- 12 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஸ்டைலுக்காக மட்டும் அல்ல! உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா? இதை கேள்விபட்டதே இல்லயே!
உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கப்படுகிறது? என்பதற்கான பிரம்மிக்க வைக்கும் காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
விமானங்கள் வானத்தில் அதிக நேரம் பறக்க கூடியவை. 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, விமானத்தின் வெளிப்புற அழகை யாரும் கண்டு ரசிக்க போவதில்லை. எனவே விமானங்களுக்கு பெயிண்ட் தேவையற்றது என ஒரு சிலர் நினைக்கலாம். ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது. உண்மையில் விமானங்களுக்கு பெயிண்ட் மிகவும் அவசியம்.
அழகு என்ற பொதுவான காரணத்திற்காக மட்டுமல்லாது, வேறு ஒரு சில முக்கியமான காரணங்களுக்காகவும் விமானங்களுக்கு பெயிண்ட் மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அந்த சுவாரஸ்யமான அறிவியல் காரணங்கள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள் செய்திக்குள் செல்லலாம்.
வெப்பம், புற ஊதா கதிர்களை துரத்தி அடிக்க!
வெப்பம் மற்றும் புற ஊதா கதிர்கள் (UV - Ultraviolet Light) ஆகிய இரண்டையும் விரட்டுவதுதான், விமானங்கள் பெயிண்ட் செய்யப்படுவதற்கான மிக முக்கியமான காரணம். வெப்பம் மற்றும் புற ஊதா கதிர்கள் என இரண்டாலும் விமானங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அவை விமானங்களுக்கு பாதுகாப்பு இல்லாதவை.
உண்மையில் தரையில் இருப்பதை காட்டிலும், 30 ஆயிரம் அடி உயரத்தில் புற ஊதா கதிர்கள் 2 மடங்கு அதிக வலிமையாக இருக்கும். வெப்பம் மற்றும் புற ஊதா கதிர்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டால், விமானத்தின் ஏர் ஃப்ரேமில் (Airframe) பாதிப்புகள் ஏற்படலாம். இதை தவிர்ப்பதற்காகவே விமானங்களுக்கு பெயிண்ட் அடிக்கப்படுகிறது.
விமானங்களை நன்றாக கவனித்தால் உங்களுக்கு மற்றொரு விஷயம் தெரியவரும். உலகில் பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில்தான் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும். விமானங்கள் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுவதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமான காரணத்தை மட்டும் இங்கே கூறுகிறோம்.
கருப்பு மற்றும் இதர அடர்த்தியான வண்ணங்களுடன் ஒப்பிடும்போது வெள்ளை நிறம்தான் வெப்பம் மற்றும் புற ஊதா கதிர்களை துரத்தும் திறனை மிகவும் அதிகமாக பெற்றுள்ளது. உலகில் இருக்கும் பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் காட்சியளிப்பதற்கு இதுவே மிகவும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
வெள்ளையை தவிர வேறு வண்ணங்களில் விமானங்களே இல்லையா? என்ற சந்தேகம் தற்போது உங்களுக்கு வரலாம். இந்த கேள்விக்கு 'இருக்கின்றன' என்பதுதான் பதில். கருப்பு நிறத்தில் கூட விமானங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் வெள்ளை நிற விமானங்களுடன் ஒப்பிடும்போது, மற்ற நிற விமானங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
அரிப்பில் இருந்து பாதுகாக்க!
அரிப்பிற்கு எதிரான பாதுகாப்பை பெயிண்ட் வழங்குகிறது. பொதுவாக விமானங்கள் பல்வேறு வகையான மெட்டீரியல்கள் மூலம் உருவாக்கப்படுகின்றன. ஒரு சில விமானங்கள் ஸ்டீல் ஃப்யூஸலேஜை (Steel Fuselage) கொண்டிருக்கும். வேறு சில விமானங்களோ அலுமினியம் ஃப்யூஸலேஜை (Aluminum Fuselage) பெற்றிருக்கும்.
இங்கே நாங்கள் ஃப்யூஸலேஜ் என்று கூறுவது, விமானத்தின் முக்கிய பகுதியாகும். இன்ஜின்கள், இறக்கைகள் மற்றும் வால் ஆகியவற்றை இது குறிக்காது. உங்களுக்கு இன்னும் தெளிவாக புரியும்படி சொல்வதென்றால், விமானத்தின் உடற்பகுதிதான் ஃப்யூஸலேஜ் என அழைக்கப்படுகிறது. சரி, எப்படி பார்த்தாலும் மெட்டல் (Metal) அல்லது மெட்டல் அலாய் (Metal Alloy) மூலமாகவே விமானங்கள் தயார் ஆகின்றன.
ஈரப்பதத்தால் பாதிக்கப்படும்போது மெட்டல்களும், மெட்டல் அலாய்களும் அரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் பெயிண்ட் இதனை தடுக்கிறது. விமானத்தின் ஃப்யூஸலேஜ் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு இடையே தடையை ஏற்படுத்துவதன் மூலமாக அரிப்பை தடுக்கும் பணியை பெயிண்ட் கச்சிதமாக மேற்கொள்கிறது.
காற்றில் ஈரப்பதம் இருந்தாலும் கூட, அது பெயிண்ட் செய்யப்பட்ட ஃப்யூஸலேஜில்தான் இறங்கும். எனவே பெயிண்ட்டிற்கு அடியில் இருக்கும் மெட்டல் அல்லது மெட்டல் அலாய் உலர்ந்தே காணப்படும். இதன் காரணமாக அது துருப்பிடிக்காது. விமானங்கள் பெயிண்ட் செய்யப்படுவதற்கு இது மற்றொரு மிக முக்கியமான காரணம் ஆகும்.
இவ்வளவு நாட்களாக அழகிற்காக மட்டுமே விமானங்கள் பெயிண்ட் செய்யப்படுகின்றன என பலர் நினைத்து கொண்டிருந்திருக்கலாம். அழகிற்காகவும் விமானங்கள் பெயிண்ட் செய்யப்படுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அழகிற்காக மட்டுமே விமானங்கள் பெயிண்ட் செய்யப்படுவதில்லை. கூடவே வெப்பம், புற ஊதா கதிர்கள் மற்றும் அரிப்பு ஆகியவற்றிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் சேர்த்தே விமானங்கள் பெயிண்ட் செய்யப்படுகின்றன.