Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சாலையை கூட்டி பெருக்கிய போலீஸ்காரர்... காரணத்தை கேட்டதும் எல்லோருக்கும் அப்படி ஒரு ஆச்சரியம்...
போக்குவரத்து காவலர் ஒருவர், சாலையை கூட்டி பெருக்கும் காணொளி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதன் மூலம் சாலை விபத்துக்களால் உலகிலேயே அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற மறுப்பதுதான் இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் வாகன தணிக்கை நடத்தி, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
ஆனால் சில சமயங்களில் போக்குவரத்து காவலர்கள், வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து காவலர்களுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், வாகன ஓட்டிகளின் நன்மைக்காக போக்குவரத்து காவலர் ஒருவர் செய்துள்ள காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் உள்ள டவுன் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் லலித் மோகன். இவர் சமீபத்தில் வழக்கம் போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் துடைப்பத்தால் சாலையை கூட்டி விட்டார். போக்குவரத்து காவலர் சாலையை பெருக்கி விடும் காணொளி சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
குப்பைகள், சிறு சிறு கற்கள் காரணமாக வாகன ஓட்டிகள் சறுக்கி விபத்தில் சிக்கி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அவர் சாலையை கூட்டி விட்டுள்ளார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். இதன் மூலம் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவது தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த செயலுக்காக போக்குவரத்து காவலர் லலித் மோகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் அதே நேரத்தில், இது அவருடைய பணி கிடையாது என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கட்டாக் மாநகராட்சி அதிகாரிகளும், துப்புரவு பணியாளர்களும் தங்கள் பணியை சரியாக செய்யவில்லை என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
இது ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு கருத்துதான். ஆனால் எப்படி இருந்தாலும் கௌரவம் பார்க்காமல் வாகன ஓட்டிகளின் நலனுக்காக சாலையை கூட்டி பெருக்கிய போக்குவரத்து காவலர் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான். இதன் மூலம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக போக்குவரத்து காவலர் லலித் மோகன் மாறியுள்ளார்.
லலித் மோகன் சாலையை கூட்டி பெருக்கும் காணொளி சமூக வலை தளங்களில் பலரையும் சென்றடைந்த நிலையில், இதற்காக அவரை அழைத்து உயர் அதிகாரிகளும் பாராட்டியுள்ளனர். அனைத்து போக்குவரத்து காவலர்களும் இவரை போல் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டால், வாகன ஓட்டிகளுடனான பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்பது உறுதி.