Just In
- 4 min ago ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 3 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
Don't Miss!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சென்னையில் பைக்கில் செல்பவர்களுக்கு மாஞ்சா நூல் வடிவில் வரும் எமன்... இதற்கு முடிவே கிடையாதா?
சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தில் இறுக்கி மூன்று வயதான பிஞ்சு குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு பல்வேறு விதமான ஆபத்துக்களை கடந்துதான் வீடு வந்து சேர வேண்டி இருக்கிறது. இதில், பட்டம் விடுவதற்கு பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் கழுத்தில் இறுக்கி உயிர்களை காவு வாங்கும் அவல நிலை தொடர்ந்து நடக்கிறது.
பொதுவாக கோடை காலம் துவங்கும்போது மாஞ்சா நூல் மூலம் இணைக்கப்பட்ட பட்டங்களை பறக்கவிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், பணத்தாசை, ஏரியா புள்ளிங்கோ பட்டத்திற்காக நடக்கும் போட்டி இவற்றால் எந்நேரமும் இந்த விபரீத விளையாட்டை பலர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
கடுமையான சட்டங்கள், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி இந்த விளையாட்டு ஜரூராக நடந்து வருகிறது. சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தில் இறுக்கி பைக்கில் சென்ற மூன்று வயது பிஞ்சு குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அல்ப சந்தோஷத்திற்கு மீண்டும் ஒரு குழந்தையை மாஞ்சா நூல் அரக்கர்கள் பலிவாங்கி உள்ளனர்.
சென்னை, ஏழுகிணறு பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகன் அபினேஷ்வரனுடன் பைக்கில் உறவுக்காரர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது எங்கிருந்தோ வந்த மாஞ்சா நூல் குழந்தை அபினேஷ்வரன் கழுத்தில் மாட்டி இறுக்கிவிட்டது. நொடிப்பொழுதில் நடந்த இந்த சம்பவத்தில் குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் ஆழமாக வெட்டியதால், ரத்தம் வெளியேறி மயங்கி சரிந்தான்.
இதைக்கண்டு பதறிய பெற்றோர் குழந்தையை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதிக ரத்தப்போக்கு காரணமாக, குழந்தை உயிரிழந்தது. இதுபோன்ற சம்பவங்கள் சென்னையில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி உதவியுடன் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பலரின் ரத்தத்தை குடிக்கும் எமனாக மாறும் இந்த மாஞ்சா நூல் மூலமாக பட்டம் விடுவதை தடுப்பதற்காக போலீசார் மேற்கொண்டு வரும் முயற்சிகள் போதிய பலனளிக்கவில்லை என்றே தெரிகிறது. சிந்தாதிரி பேட்டை, சவுகார் பேட்டை, வண்ணாரப் பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் இந்த மாஞ்சா நூல் தயாரிப்பை சில குடும்பங்கள் குலத்தொழிலாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பட்டம் விடும் போட்டிகளுக்காக நூல் அறுபடாமல் உறுதியாக இருப்பதற்காக பல நச்சுப் பொருட்கள் கலந்த கலவையை நூலின்மீது தடவி மாஞ்சா நூல் உருவாக்கப்படுகிறது. அரோட்டா மாவை காய்ச்சி அதில் ட்யூப்லைட் துகள், கண்ணாடிகளை பொடியாக்கி கலக்கி இந்த மாஞ்சா நூலை தயாரிக்கின்றனர்.
இந்த கலவையில் வஜ்ரம், மயில்துத்தம், சப்பாத்திக் கள்ளி ஆகியவற்றின் சாறும் கலக்கப்பட்டு மாஞ்சா நூல் மீது தடவப்படுகிறது. இதனால்தான், மாஞ்சா நூல் கழுத்தில் இறுக்கி காயம் பட்டால், நச்சுத் தன்மை ரத்தத்தில் கலந்து மரணம் சம்பவிக்கிறது.
சென்னையில் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.500 அபராதம் மற்றும் 6 மாத சிறை உள்ளிட்ட தண்டனை உள்ளிட்டவை இருந்தாலும், இதனை கட்டுப்படுத்த இயலாத அவல நிலை தொடர்கிறது. இந்த விஷயத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி முற்றிலும் ஒழிப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன், கடுமையான தண்டனைகளையும் வரையறுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!