Just In
- 1 hr ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 2 hrs ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 2 hrs ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 3 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த வாகனங்களுக்கு மட்டும் டோல் கட்டணம் இல்லை... இலவசமா போலாம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஆணையம்!!
இந்த வாகனங்கள் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அதிரடி உத்தரவை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகின்றது. இரண்டாம் அலை பரவல் என குறிப்பிடப்படும் இது குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதி-தீவிரத் தன்மையைக் காட்டி வருகின்றது. தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிய தொடங்கியுள்ளன.
இதனால், படுக்கை மற்றும் மருத்துவ உபகரணம் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் தலை விரித்தாட தொடங்கியுள்ளது. பலர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கும் அவலும் நாட்டில் அரங்கேறி வருகின்றது.
இந்த நிலையில், மாநிலங்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க மத்திய அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இத்துடன், சில தனியார் நிறுவனங்களும் தங்களின் தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ச்சியாக விநியோகம் இருக்க வேண்டும் என்பதில் அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஆக்சிஜன் ஏற்றி வரும் அனைத்து டேங்கர்களும் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணமின்றி பயணிக்கலாம் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தங்கு தடையில்லா ஆக்சிஜன் சேவையை வழங்கும் நோக்கில் இவ்வறிப்பை ஆணையம் வெளியிட்டிருக்கின்றது.
மருத்துவ ஆக்சிஜனை ஏற்றி வரும் டேங்கர்கள் அவசர வாகனமாக கருதி இந்த கட்டணமில்லா திட்டத்தை இந்திய தேசிய நெடுசாலை ஆணையம் அறிவித்திருக்கின்றது. அதாவது, மருத்துவ ஆக்சிஜனை ஏற்றி வரும் டேங்கர் லாரியை, உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்களுக்கு இணையாக ஒப்பிட்டு இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், மருத்துவ ஆக்சிஜனை ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் எந்தவொரு தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான டோல்கேட்டிலும் கட்டணம் கட்ட தேவையில்லை. இந்த சிறப்பு திட்டம் அடுத்து வரும் இரண்டு மாதங்கள் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை செல்லும்படியாகும் என ஆணையம் கூறியிருக்கின்றது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த தரமான அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, மருத்துவ ஆக்சிஜனை ஏற்றி வரும் டேங்கர் லாரி டிரைவர்களிடத்திலும் ஆதரவு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த முதல் அலை பரவலின்போது வெண்டிலேட்டர்கள் அதிக தேவைப்படும் சுவாச கருவியாக இருந்தது. தற்போது, ஆக்சிஜன் தேவை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையிலேயே ஆக்சிஜன் ஏற்றி வரும் லாரிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் இலவசமாகக் கடக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!