Just In
- 13 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 32 min ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்த வாகனங்களுக்கு மட்டும் டோல் கட்டணம் இல்லை... இலவசமா போலாம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஆணையம்!!
இந்த வாகனங்கள் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அதிரடி உத்தரவை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகின்றது. இரண்டாம் அலை பரவல் என குறிப்பிடப்படும் இது குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதி-தீவிரத் தன்மையைக் காட்டி வருகின்றது. தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிய தொடங்கியுள்ளன.
இதனால், படுக்கை மற்றும் மருத்துவ உபகரணம் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் தலை விரித்தாட தொடங்கியுள்ளது. பலர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கும் அவலும் நாட்டில் அரங்கேறி வருகின்றது.
இந்த நிலையில், மாநிலங்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க மத்திய அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இத்துடன், சில தனியார் நிறுவனங்களும் தங்களின் தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ச்சியாக விநியோகம் இருக்க வேண்டும் என்பதில் அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஆக்சிஜன் ஏற்றி வரும் அனைத்து டேங்கர்களும் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணமின்றி பயணிக்கலாம் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தங்கு தடையில்லா ஆக்சிஜன் சேவையை வழங்கும் நோக்கில் இவ்வறிப்பை ஆணையம் வெளியிட்டிருக்கின்றது.
மருத்துவ ஆக்சிஜனை ஏற்றி வரும் டேங்கர்கள் அவசர வாகனமாக கருதி இந்த கட்டணமில்லா திட்டத்தை இந்திய தேசிய நெடுசாலை ஆணையம் அறிவித்திருக்கின்றது. அதாவது, மருத்துவ ஆக்சிஜனை ஏற்றி வரும் டேங்கர் லாரியை, உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்களுக்கு இணையாக ஒப்பிட்டு இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், மருத்துவ ஆக்சிஜனை ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் எந்தவொரு தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான டோல்கேட்டிலும் கட்டணம் கட்ட தேவையில்லை. இந்த சிறப்பு திட்டம் அடுத்து வரும் இரண்டு மாதங்கள் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை செல்லும்படியாகும் என ஆணையம் கூறியிருக்கின்றது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த தரமான அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, மருத்துவ ஆக்சிஜனை ஏற்றி வரும் டேங்கர் லாரி டிரைவர்களிடத்திலும் ஆதரவு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த முதல் அலை பரவலின்போது வெண்டிலேட்டர்கள் அதிக தேவைப்படும் சுவாச கருவியாக இருந்தது. தற்போது, ஆக்சிஜன் தேவை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையிலேயே ஆக்சிஜன் ஏற்றி வரும் லாரிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் இலவசமாகக் கடக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!