Just In
- 43 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 54 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் கட்டப்பட்டு வரும் புதிய சுரங்கம்! சுரங்கம் பற்றி அறியவேண்டிய 5 முக்கியமான தகவல்கள் இதோ!
ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்கம் பற்றி அறிந்துக் கொள்ள 5 முக்கிய தகவல்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.
உலகின் நீளமான சுரங்கப்பாதை 'அடல் சுரங்கம்' கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மணாலி-லடாக்கை இணைக்கும் வகையில் சுமார் 8.8 கிமீ தூரம் நீளத்தில் இந்த சுரங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் இதேபோன்று ஓர் புதிய சுரங்கம் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகின்றது. இது ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கம் பற்றிய சுவாரஷ்யமான ஐந்து தகவல்களையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இணைப்பு:
புதிதாக உருவாகி வரும் சுரங்கம் கஷ்மீர் மற்றும் ஜம்முவை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இது பனிஹல் மற்றும் தென் காஷ்மீரின் காஸிகுண்ட் பகுதிகளுக்கு இடையில் அமைய இருக்கின்றது. இது பயன்பாட்டிற்கு வந்தால் தங்கு தடையில்லா போக்குவரத்து உருவாகும்.
இப்போது, கால நிலைக்கு ஏற்ப சில நேரங்களில் பனிஹல் மற்றும் தென் காஷ்மீரை இணைக்கும் பாதை மூட்படுவதுண்டு. ஆனால், புதிய சுரங்கம் பயன்பாட்டிற்கு வந்தால் இந்த நிலை ஏற்படாது. குறிப்பாக, அதிக பனி மற்றும் நிலச்சரிவால் ஏற்படும் தடை முழுமையாக இந்த சுரங்கத்தால் தவிர்க்கப்பட இருக்கின்றது.
Image Courtesy: Basit Zargar/Twitter
பயண நேரம் குறையும்
புதிய சுரங்கம் பயன்பாட்டிற்கு வந்தால் பயண நேரம் பெருமளவில் குறையும் என கூறப்படுகின்றது. அதாவது, ஜம்மு-ஸ்ரீநகர் பயணிக்க 1 முதல் 1.5 மணி நேரங்கள் வரை மட்டுமே எடுத்துக் கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது இருப்பதை விட 16 கிமீ குறையவும் வாய்ப்பு உருவாகும்.
எவ்வளவு செலவில் சுரங்கம் அமைக்கப்பட்டு வருகின்றது?
8.5 கிமீ நீளத்தில் புதிய சுரங்கம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதற்காக ரூ. 2,100 கோடி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் 2011ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மிக விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் இக்கட்டான சூழ்நிலையில் லேசான கால தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. இத்துடன் இன்னும் சில தடங்கல்களும் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
சுமூகமான போக்குவரத்து வசதி:
சுமூகமான போக்குவரத்து வசதிக்காக சுரங்கத்தை கட்டமைப்பு, செயல்பாடு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. சுரங்கப்பாதையின் உள்ளே 124 ஜெட் மின் விசிறிகள், 234 சிசிடிவி கேமிராக்கள் மற்றும் தீ விபத்தை எதிர்க்கும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இடம்பெற இருக்கின்றது.
மேலும், 500 மீட்டர் இடைவெளிக்கு ஒரு முறை ஒரு அவசர கால வெளியேறும் பாதையும் இடம்பெற இருக்கின்றது. ஆகையால், இடையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இந்த அவசர கால பாதைகளின் வாயிலாக பிற வாகனங்களால் சுலபமாக வெளியேற முடியும்.
ஜவஹர் டனலுக்கு 400மீட்டர் கீழே இது அமைகின்றது:
ஜவஹர் டனலுக்கு 400மீட்டர் கீழே புதிய சுரங்க வழி அமைகின்றது. மேலும், இப்புதிய சுரங்கம் கடல் மட்டத்தில் இருந்தது 2,194 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பு: முதல் ஐந்து படங்களை மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.