Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 10 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தவறான பாதையில் வந்த காரை மடக்கிய போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முழு விபரம் உள்ளே...!
தவறான பாதையில் வந்த காரை மடக்கியதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் என்னும் பகுதியில் அந்த மாநிலத்தின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் சாலை இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த முக்கிய சாலையில் நாள்தோறும் ஆயிரம் கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன.
இந்நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பில் விற்பனையாகி வரும் எக்ஸ்யூவி500 என்ற மாடல் கார் தவறான பாதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வேகமாக வந்துள்ளது. அப்போது, அங்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த காரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளார்.
அந்த விசாரணையில், கார் குறித்த அதிர்ச்சி தகவல்கள் அவருக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த காரை அவரது கைப்பேசி மூலம் செல்ஃபி எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.
போக்குவரத்து போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அந்த தகவல் இ-செல்லான் மூலம் அவருக்கு தெரியவந்துள்ளது. இ-செல்லான் என்பது சில வருடங்களுக்கு முன்புதான் நடைமுறையில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
இது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அளிக்கப்படும் அபராதத்தொகை ரசீதாகும். இந்த புதிய நடைமுறையானது, போலீஸாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே ஏற்படும் மோதலை தவிர்க்க கொண்டுவரப்பட்டது. மேலும், போலீஸார் செய்யும் முறைகேட்டினை தவிர்க்கவும் இந்த இ-செல்லான் உதவி வருகிறது.
அந்த வகையில், தவறான பாதையில் வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை போக்குவரத்து போலீஸார் மடக்கியுள்ளார். பின்னர், காரின் பதிவெண்ணைக்கொண்டு இ-செல்லான் மெஷினில் பதிவிட்டுள்ளார். அவ்வாறு, பதிவிடும்போது, அந்த கார் முன்னதாக பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
அவ்வாறு, அந்த கார் மீது இதுவரை 35 ஆயிரத்து 760 ரூபாய் அபராதத் தொகை நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போக்குவரத்து போலீஸார், அவரது ஸ்மார்ட்போன் மூலம் அந்த காருடன் செல்ஃபி எடுத்து சைபராபாத் டிராஃபிக் போலீஸ் என்ற முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டார்.
அவரின் பதிவிற்கு பல்வேறு முகப்புத்தக பயனர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், இதுபோன்று தவறான பாதையில் வரும் வாகனங்கள்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இந்த எக்ஸ்யூவி500 காரை விற்பனைச் செய்துவருகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இதில், பெட்ரோல் வேரியண்டில் 2.2 லிட்டர் எம்ஹவாக் டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் விலை 15.5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி). இதேபோன்று, டீசல் வேரியண்டில், 2.2 லிட்டர் எம்ஹவாக் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 155 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியது. மேலும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த மாடலில் பெட்ரோல் வேரியண்டைக் காட்டிலும் டீசல் வேரியண்ட் தான் அதிகம் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது எக்ஸ்-ஷோரூமில் மும்பை மதிப்பில் ரூ. 17.88 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
Source: Cyberabad Traffic Police
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!