Just In
- 37 min ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 55 min ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 1 hr ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களினால் சாலை போக்குவரத்து மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறது. இதனால் ஏற்படும் நெரிசலை சமாளிப்பது போக்குவரத்து போலீசாருக்கு பெரிய சவாலான விஷயமாக உள்ளது.
நெரிசல் ஒருபுறம் இருக்க, தகுந்த சான்றிதழ், ஹெல்மெட் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பது என போக்குவரத்து போலீசார் அதிகளவிலான பொறுப்புகளை கவனித்து வருகின்றனர். இவர்களுக்கு உறுதுணையாக அரசாங்கமும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
கடுமையான விதிகள் மற்றும் அதிகளவிலான அபராதங்களுடன் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தாலும் இதனால் விதி மீறல்கள் குறைந்தபாடில்லை. இந்த அதிக கட்டணத்தை தவிர்க்காமல் மாறாக அதையும் செலுத்திவிட்டு செல்லும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் வருகிறது.
இத்தகைய அபராதம் எல்லாம் அரசாங்கத்திற்கு வருவாய்தான். ஆனால் இதிலும் சிலர் மோசடி வேலைகளில் ஈடுபட தயங்குவதில்லை. அதாவது அபராதங்களை உடனடியாக செலுத்த இயலாதோர் மற்றும் ஆன்-லைன் மூலமாக பணம் பரிமாற்றம் செய்வோர் இ-செல்லான் அமைப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு செலுத்துவோர்களில்தான் பலர் அபராதத்தை முறைப்படி செலுத்துவதில்லை என்கின்றனர், போக்குவரத்து போலீசார்.
மும்பை நகரத்தில் மட்டும் இவ்வாறு இ-செல்லான் மூலமாக செலுத்தப்படாத தொகை ரூ.80 கோடி அளவில் உள்ளது. இது மும்பை போலீஸை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்க, அபராதம் செலுத்தாதவர்களை கைது செய்ய வாராண்ட்களை பிறப்பிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தை மும்பை போலீசார் நாட உள்ளனர்.
இதுகுறித்து வருகிற டிசம்பர் 1ஆம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கிவிடும் என்றே தெரிகிறது. அனுமதி வழங்கப்பட்டுவிட்டால் அடுத்த மாதம் முதல் மும்பையில் அபராதம் செலுத்தாமல் சென்றால் சிறைத்தண்டனைதான்.
மும்பையில் 2016ல் இ-செல்லான் அமைப்பின் மூலம் அபராதம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த அறிமுக நாளில் இருந்து இதுவரை சுமார் 27 லட்சம் இ-செல்லானிற்கு அபராதம் செலுத்தப்படவில்லை. இதன் மொத்த மதிப்பு தொகைதான் இந்த 80 கோடி ரூபாய். இதில் 9,000 இ-செல்லான்களுக்கான அபராத தொகை ரூ.5,000 ஆகும்.
இவ்வாறு அபராதம் செலுத்தாமல் சென்றவர்களுக்கு போலீஸ் தரப்பில் இருந்து குறுந்தகவல்களும், கடிதங்களும் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இதற்கு சரியாக பதில் அளிப்பவர்கள் மிக சிலரே என்கின்றனர், மும்பை போலீசார்.
மும்பை நகரத்தில் போக்குவரத்து விதி மீறல்களால் இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 100 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது 139 கோடி ரூபாய் வசூலான 2018ஆம் ஆண்டை விட குறைவுதான் என்றாலும் இந்த 80 கோடி ரூபாய் விஷயம்தான் மும்பை போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
இதில் அதிக தொகையை செலுத்தாமல் இருப்பவர் மும்பையை சேர்ந்த ரஹீல் மேத்தா என்கிற தொழிலதிபர்தான். இவர் தனது ஹோண்டா அக்கார்ட், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் போன்ற லக்சரி கார்களில் சுமார் 103 தடவைக்கு மேலாக வேகமாக சென்றதற்காக அபராதத்திற்கு உள்ளாகியுள்ளார். இதன் மொத்த மதிப்பு தொகை ரூ.1.04 லட்சமாகும். ஆனால் இதில் அவர் ஒரு அபராதத்தை கூட செலுத்தவில்லை. இதனால் மும்பை போலீசார் அவரது ஹோண்டா அக்கார்ட் காரை கடந்த ஆண்டு பறிமுதல் செய்தனர்.
ரஹீல் மேத்தா மட்டுமின்றி பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும், அரசியல்வாதிகளும் இந்த இ-செல்லான் மூலம் அபராதம் செலுத்தாதவர்களின் லிஸ்ட்டில் உள்ளனர். இதன் காரணமாகவே மும்பை போலீசார் சிறைத்தண்டனை என்கிற அதிரடியான முடிவுக்கு சென்றுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் மும்பை மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்றவாறுதான் உள்ளன. இதனால் அபராதம் செலுத்தாதவர்களுக்கு சிறைத்தண்டனை என்கிற சட்டம் எதிர்காலத்தில் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
source: Mumbai Mirror
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு