Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 6 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!
இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது. பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்கள் இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. எனவே அவற்றின் பயன்பாட்டை குறைப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
குறிப்பாக பழைய வாகனங்கள்தான் (Old Vehicles), சுற்றுச்சூழலை மிகவும் கடுமையாக மாசுபடுத்துகின்றன. எனவே என்சிஆர் என சுருக்கமாக அழைக்கப்படக்கூடிய டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR- National Capital Region), 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களையும், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களையும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்ஜிடி என அழைக்கப்படும் தேசிய பசுமை தீர்ப்பாயம்தான் (NGT - National Green Tribunal) இந்த தடை உத்தரவை கொண்டு வந்தது.
வெச்சாங்க பாருங்க செக்!
தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்களுக்கும் பதிவு (Registration) புதுப்பிக்கப்படாது. எனவே வயதான பழைய வாகனங்களை அங்கு இயக்க முடியாது. டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருவதன் காரணமாகவே, இத்தகைய கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி, நிறைய பேர் தங்களது பழைய வாகனங்களை சாலையில் ஓட்டி கொண்டுள்ளனர்.
அவர்களுக்கெல்லாம் செக் வைக்கும் வகையில் தற்போது அதிரடியான நடவடிக்கை ஒன்றை போக்குவரத்து காவல் துறையினர் தொடங்கியுள்ளனர். தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின்படி, பதிவு காலாவதியான பிறகும் தொடர்ந்து வாகனங்களை இயக்கி கொண்டுள்ளவர்கள் மீது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டா போக்குவரத்து காவல் துறையினர்தான், அதிரடி நடவடிக்கையையை தொடங்கியுள்ளனர். நொய்டா நகரானது, டெல்லிக்கு அருகே அமைந்துள்ளது. எனவே டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் கீழ் நொய்டா வருகிறது.
இத்தனை கார்களை தூக்க போறாங்களா!
இதன் காரணமாகவே பழைய வாகனங்கள் மீது நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். நொய்டாவில் சுமார் 1.20 லட்சம் கார்களின் பதிவு காலாவதியாகியுள்ளது. அவற்றின் உரிமையாளர்களுக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கார்களை எல்லாம் பறிமுதல் செய்து, ஸ்கிராப் (Scrap) செய்வதற்கு நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஸ்கிராப் செய்வது என்றால், அழிப்பது ஆகும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்!
அத்துடன் சாலைகளிலும், நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த 1.20 லட்சம் கார்களில், 23 கார்கள் உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டு வருபவை ஆகும். அதாவது நீதிமன்றம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் போன்றவற்றில் பணியாற்றி வரும் அதிகாரிகள் இந்த கார்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தங்களது நிலைப்பாட்டை நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் தெளிவுபடுத்தி விட்டனர். உயர் அதிகாரிகள் என்பதால், அவர்களின் கார்களுக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படாது.
கலக்கத்தில் உரிமையாளர்கள்!
இதுபோன்ற எச்சரிக்கையையும் மீறி பழைய வாகனங்களை இயக்கினால் 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன் ஏற்கனவே கூறியபடி கார் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும். நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையால், பழைய வாகனங்களை வைத்திருப்பவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கவே இந்த அதிரடி நடவடிக்கை என நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
பேசாம அதுக்கு மாறிடுவோம்!
எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதான நடவடிக்கை நாடு முழுக்க இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து நிறைய பேர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) மாற தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter), எலெக்ட்ரிக் கார் (Electric Car) என அனைத்து வகையான எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் வேகமாக உயர்ந்து வருகிறது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!