Just In
- 51 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவிற்கே பாடம் எடுத்த தமிழக அரசின் உத்தரவு இதுதான்... அமல்படுத்த போட்டி போடும் மற்ற மாநிலங்கள்
தமிழக அரசு பிறப்பித்த ஒரு அதிரடி உத்தரவை மற்ற மாநிலங்களும் அமல்படுத்த தொடங்கியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவை பொறுத்தவரை சாலை விபத்துக்களினால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். அவர்கள் இரு சக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமல் இயக்குவதே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.
இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஏனோ இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் அதனை கடைபிடிப்பதே இல்லை.
எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களை கட்டாயமாக ஹெல்மெட் அணிய வைக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதிய டூவீலர்களை வாங்குபவர்களுக்கு ஹெல்மெட் வழங்க வேண்டும் என டீலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக காவல் துறையின் டிராபிக் மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர்தான் இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் இது தொடர்பாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய டூவீலர்களை விற்பனை செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு ஹெல்மெட் வழங்குமாறு, தங்கள் அதிகார வரம்பில் செயல்படும் இரு சக்கர வாகன டீலர்களிடம் வலியுறுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து டீலர்களும், புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கவுள்ள வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஹெல்மெட்களை வழங்கவுள்ளனர். இந்த உத்தரவு விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததன் காரணமாக நிகழும் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதை பற்றி சிறிய வீடியோ ஒன்றையும், கர்நாடக மாநிலத்தில் உள்ள இரு சக்கர வாகன டீலர்கள் திரையிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிக்கள் உடனான கூட்டத்தின் போது இதுகுறித்து பேசிய ஏடிஜிபி, டிராபிக் மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் பி எஸ் சாந்து, ''ஹெல்மெட் அணியாததன் காரணமாக தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஏராளமான இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்துக்களில் தலையில் ஏற்படும் காயம் காரணமாக நிகழும் உயிரிழப்புகளை குறைப்பதற்கான எங்களின் பல்வேறு முயற்சிகளின் ஒரு பகுதிதான் இது. இந்த உத்தரவை டீலர்கள் கட்டாயமாக்கினால், அது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை ஊக்குவிப்பதாக இருக்கும்.
அனைத்து மாவட்டங்களிலும், இரு சக்கர வாகன டீலர்கள் உடனான கூட்டத்தை நடத்த வேண்டும் என எஸ்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அப்போது இந்த உத்தரவை டீலர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென தெரிவிக்குமாறும் கூறியுள்ளேன்.
இதுதவிர ஷோரூம் அளவில் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் டீலர்கள் மேற்கொள்ளவுள்ளனர். இதன் காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதுடன், சாலை விபத்துக்களினால் ஏற்படும் எண்ணிக்கை குறையும்'' என்றார்.
கர்நாடக போலீசாரின் இந்த முயற்சி கட்டாயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். முன்னதாக மத்திய மோட்டார் வாகன சட்ட விதி 138 (4) (f) 1989ன் படி, புதிய டூவீலர்களை வாங்குபவர்களுக்கு ஹெல்மெட் வழங்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
இந்த உத்தரவை தமிழக அரசு சமீபத்தில் மிக கடுமையாக அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஹெல்மெட் வழங்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக போக்குவரத்து துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறப்பித்தது.
இதனை அந்தந்த பகுதி ஆர்டிஓக்கள் கண்காணிக்க வேண்டும் எனவும், இது தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை கமிஷனரின் அலுவலகத்தில் மாதந்தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது தமிழகத்தை பின்பற்றி கர்நாடக மாநிலமும் இத்தகையை நடவடிக்கையை எடுத்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் மூலமாக சாலை விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தால் நன்றாக இருக்கும்.
Source: ET Auto
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு