Just In
- 5 min ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 39 min ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 1 hr ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 1 hr ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்பத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Movies இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வேற வழி இல்லாம அந்த முடிவை எடுக்கும் மக்கள்... பஸ்களை அரசு நிப்பாட்டியதால் யாருக்கு லாபம் தெரியுமா?
பேருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால், வேறு ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை போல் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புதிய வாகன பதிவு போன்ற பணிகள் நடைபெறாததால், ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் கிடைக்க வேண்டிய வருவாயை அரசாங்கம் இழந்து வந்தது. ஆனால் தற்போது மற்ற அரசு அலுவலகங்களை போல் ஆர்டிஓ அலுவலகங்களும் இயங்க தொடங்கியுள்ளன.
அத்துடன் வாகன பதிவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் அதற்கு அருகே உள்ள பிம்ப்ரி சின்ச்வாத் ஆர்டிஓ அலுவலகங்களில் கடந்த 2 மாதங்களில், இரு சக்கர வாகனங்களின் பதிவு உயர்ந்துள்ளது. பேருந்து, ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு நிலவும் பற்றாக்குறை இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.
மேலும் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்ற அச்சமும் இதற்கு ஒரு காரணம். இது தொடர்பாக புனே ஆர்டிஓ அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ''கடந்த மார்ச் மாத கடைசியில் இருந்து மே 17ம் தேதி வரையில் ஆர்டிஓ அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.
இதன்பின் கடந்த மே 18ம் தேதி முதல் வாகன பதிவு பணிகள் மீண்டும் தொடங்கின. ஆனால் அப்போது பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் பெரும்பாலானவை ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக வாங்கப்பட்டவை. எனினும் கடந்த ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரண்டு மாதங்களிலும், இரு சக்கர வாகனங்களின் பதிவு உயர்ந்துள்ளது. இது ஊக்கம் அளிப்பதாக உள்ளது'' என்றனர்.
ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரண்டு மாதங்களுக்கு இடையே புனே ஆர்டிஓ அலுவலகத்தில் புதிய இரு சக்கர வாகனங்களின் பதிவு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''கடந்த மே 18ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை சுமார் 4,000 இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
ஆனால் ஜூலை 30ம் தேதி வரை கணக்கிட்டால் பதிவு செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் மேலாக உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் இரு சக்கர வாகனங்களை வாங்குவதை இந்த உயர்வு தெளிவாக குறிக்கிறது'' என்றனர். இதேபோல் பிம்ப்ரி சின்ச்வாத் ஆர்டிஓ அலுவலகத்திலும் பதிவு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ''இரு சக்கர வாகனங்களின் பதிவு உயர்ந்துள்ளதுதான். ஆனால் வாகனங்கள் பதிவு செய்யப்படாமலேயே வைக்கப்பட்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம். எனினும் கடந்த ஜூலை மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வு இருப்பதை காட்டுகிறது'' என்றனர்.
அதே சமயத்தில் கடந்த ஒன்றரை மாத அளவில், புதிய இரு சக்கர வாகனங்களை வாங்குவது தொடர்பான விசாரணைகளும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக டீலர்ஷிப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஒரு இரு சக்கர வாகன டீலர்ஷிப்பின் விற்பனை பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ''அதிக அளவிலான விசாரணைகள் வருகின்றன.
எங்கள் டீலர்ஷிப்பிற்கு வரும் வாடிக்கையாளர்களில் பலர், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை காட்டிலும் சொந்த இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதுதான் மிகவும் பாதுகாப்பானது என்று தெரிவிக்கின்றனர். இன்னும் சிலரோ பேருந்து போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு பற்றாக்குறை இருப்பதால் இரு சக்கர வாகனங்களை வாங்குவதாக கூறுகின்றனர்'' என்றார்.
இதுபோன்ற காரணங்களால், வரும் மாதங்களில் புதிய வாகனங்களின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அத்துடன் தீபாவளி பண்டிகை காலமும் நெருங்கி வருகிறது. இதன் காரணமாகவும் புதிய வாகனங்களின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Note: Images used are for representational purpose only.
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!