Just In
- 25 min ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 2 hrs ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
Don't Miss!
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- News விஜயகாந்த்தை.. ஏக்கத்துடன் தேடுகிறது சென்னை சாலிகிராமம் ரோடு.. அந்த விபூதி எங்கே? கசியுதே நினைவு
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Movies அச்சச்சோ.. தளபதி விஜய்க்கு என்ன ஆச்சு.. கை விரலை கவனிச்சீங்களா?.. ஓட்டுப் போடும் போது சிக்கிடுச்சே!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை... இரு சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம்... எதற்காக தெரியுமா?
இரு சக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு, ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில், 1.13 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் நிறைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால், புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, இந்த அதிரடி நடவடிக்கையை ஒடிசா போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, ஒடிசா மாநிலத்தில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராத தொகைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சர் மாவட்டத்தில் உள்ள அமர்புரா என்னும் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் பன்ஜாரா என்பவர் மீதுதான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராயகடா மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் கேன்களை விற்பனை செய்து கொண்டிருந்தபோது, போக்குவரத்து காவல் துறையினரிடம் பிரகாஷ் பன்ஜாரா சிக்கி கொண்டார். போக்குவரத்து காவல் துறையினர் வழங்கிய அபராத ரசீதின்படி, பிரகாஷ் பன்ஜாரா தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.
அத்துடன் அவரது இரு சக்கர வாகனத்தில் பதிவு எண்ணும் இல்லை. பிரகாஷ் பன்ஜாரா மத்திய பிரதேச மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். ஆனால் தொழில் நிமித்தமாக, இரு சக்கர வாகனத்தின் பதிவு பணிகளை முடிக்காமலேயே அவர் ஒடிசா மாநிலம் ராயகடா பகுதிக்கு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதிவு எண் இல்லாமல் வாகனத்தை இயக்கிய காரணத்திற்காக அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாத காரணத்திற்காக தனியாக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர காப்பீடு இல்லாத காரணத்திற்காக 2,000 ரூபாயும், தலை கவசம் அணியாத காரணத்திற்காக 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பதிவு எண் இல்லாமல் டீலர் இரு சக்கர வாகனத்தை விற்பனை செய்ததற்காக 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக காவல் துறையினர் தற்போது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்களில் சிக்கி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்ற மறுப்பதே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.
எனவே வாகன ஓட்டிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டன. அபராத தொகைகள் மிகவும் கடுமையாக இருப்பதால், அதற்கு பயந்து கொண்டு பலர் தற்போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!