Just In
- 26 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 55 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...
பார்ப்பதற்கே பிரம்மிப்பை ஏற்படுத்தும் அதிசய சம்பவம் ஒன்று சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளது. அது என்னனு தெரிஞ்சா நீங்க கண்டிப்பா அசந்து போய்ருவீங்க.
மலை தொடர்களில் நிலச்சரிவு ஏற்படுவது என்பது வாடிக்கையான விஷயம்தான். கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை சாலைகளில் நிலச்சரிவு போன்ற செய்திகளை நாம் அடிக்கடி கேள்விபட்டிருப்போம். குறிப்பாக மலை காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். எதிர்பாராமல் நிகழும் நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
நிலச்சரிவு ஏற்படுவதற்கு மனித செயல்பாடுகள் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளன. தற்போது மலை பகுதிகளில் அதிகளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக மரங்கள் வெட்டி வீசப்படுகின்றன. மரங்களை கணக்கு வழக்கில்லாமல் வெட்டி வீசுவதால், நிலச்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்து விடுகிறது.
இதன் காரணமாகதான் மலை தொடர்களில் கட்டிடங்களை கட்டுவதற்கு என ஏராளமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலும் யாரும் அதனை சட்டை செய்வதில்லை. ஆனால் மனித செயல்பாடுகள் மட்டுமின்றி இயற்கையும் கூட, நிலச்சரிவுகளுக்கு ஒரு முக்கிய காரணம்தான். கன மழையின்போதும், நில நடுக்கத்தின்போதும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், மலை சாலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து ஸ்கூட்டர் ரைடர் ஒருவர் நூலிழையில் தப்பித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஒரு நொடி தாமதித்திருந்தால், அவர் நிலச்சரிவில் சிக்கி புதையுண்டிருப்பார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தபோதும் அவரது ஸ்கூட்டர் நிலச்சரிவில் புதையுண்டு விட்டது.
MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க
இந்த வீடியோவில் நடுத்தர வயதுடைய ஒரு நபர் ஸ்கூட்டரில் வருவதை நம்மால் காண முடிகிறது. சாலையை நோக்கி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த நபர் ஃப்ரேமிற்குள் வருவதற்கு முன்பாகவே, பாறைகள், கற்கள் மற்றும் மரங்கள் சரிந்து வருவதை நம்மால் வீடியோவில் காண முடிகிறது.
அந்த சமயத்தில் ஸ்கூட்டர் ரைடர் வேகமாக வந்தார். அப்போது மண் சரிந்து முழுவதுமாக சாலைக்கு வந்து விட்டது. ஆனால் வேகமாக வந்த காரணத்தால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவரால் ஸ்கூட்டரை நிறுத்த முடியவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் அந்த நபரும் நிலச்சரிவில் சிக்கி விடுவார் என்றுதான் நினைத்திருப்பார்கள்.
MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் ஸ்கூட்டரை கீழே போட்டு விட்டு, எழுந்து ஓடி வந்து விட்டார். சற்று தாமதம் செய்திருந்தாலும் கூட, அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். ஆனால் நிலச்சரிவுகள் எவ்வளவு வேகமாக நடக்கும் என்பதை இந்த வீடியோவின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இத்தனைக்கும் இது மிகச்சிறிய நிலச்சரிவுதான்.
ஆனால் இதற்கே அந்த சாலையில் போக்குவரத்து தடைபடும் அளவிற்கான சூழல் ஏற்பட்டு விட்டது. அங்கு இருந்த சிறு மரங்கள் மற்றும் தாவரங்கள் வேரோடு பிடுங்கி கொண்டு வந்து விட்டன. எனவே மலை சாலைகளில் பயணம் செய்யும்போது வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. சற்று எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமாக நிலச்சரிவுகளில் சிக்கும் அபாயத்தை தவிர்க்கலாம்.
வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் இருந்தால், சில அறிகுறிகளை வைத்து, நிலச்சரிவு ஏற்படவுள்ளதை முன்கூட்டியே கணிக்க முடியும். சுற்றுப்புறத்தை நீங்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டு வாகனங்களை ஓட்டினால், உங்களால் நிலச்சரிவு ஏற்படவிருப்பதை நிச்சயமாக கணிக்க முடியும். பொதுவாக பாறைகள் மற்றும் சிறிய கற்கள் கீழே விழுவதன் மூலமாகதான் நிலச்சரிவு தொடங்கும்.
இதனால் மழை பெய்து கொண்டிருக்கும் சமயத்தில், பாறைகள் மற்றும் சிறிய கற்கள் சாலையில் விழுந்து கிடப்பதை நீங்கள் கண்டால், எச்சரிக்கையுடன் வாகனத்தை முன்னோக்கி செலுத்துங்கள். அதை விட வாகனத்தை நிறுத்தி விட்டு, சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது? என்பதை பார்ப்பது இன்னும் நல்லது. ஸ்கூட்டர் ரைடர் அதிர்ஷ்டவசமாக தப்பித்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
நிலச்சரிவிற்கு நாம் மேலே கூறியுள்ள அறிகுறிகளை இந்த வீடியோவிலும் நம்மால் காண முடிகிறது. எனவே மலை சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக மழை காலங்களில் பயணிக்கும்போது கண்டிப்பாக கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். ஏனெனில் மழை காலங்களில் நிலச்சரிவுடன், சாலை வழுக்கும் சூழலும் ஏற்படும் என்பதை மனதில் நிறுத்துங்கள்.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?