Just In
- 12 min ago ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 3 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வருகிறது புதிய சட்டம்... இனி குறைவான எரிபொருளுடன் வண்டி ஓட்ட கூடாது! எவ்ளோ அபராதம்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க
இனிமேல் குறைவான எரிபொருளுடன் கார் ஓட்டினால் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நம்மில் பலருக்கும் குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டும் பழக்கம் இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பது முதலாவது காரணம். விலை மிகவும் அதிகம் என்பதால், நம்மிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்ப, ஓரளவிற்கு பெட்ரோல், டீசல் நிரப்பி கொள்கிறோம்.
சில சமயங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப மறந்து விடுகிறோம். அல்லது நேரமின்மை காரணமாக இருக்கும் எரிபொருளை வைத்து கொண்டு தொடர்ந்து பயணம் செய்கிறோம். ஆனால் குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டக்கூடாது என்பதுதான் உண்மை. தொடர்ந்து குறைவான எரிபொருளுடனே காரை ஓட்டி கொண்டிருந்தால், பல்வேறு பாகங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இது உங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தி விடும். இந்த சூழலில், குறைவான எரிபொருளுடன் காரை ஓட்ட கூடாது என அரசாங்கமே உத்தரவிட போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து புதிய சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட இருப்பதாகவும், இந்த உத்தரவை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மிகவும் அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகி கொண்டிருக்கும்போது இதை எப்படி சமாளிக்க போகிறோம்? என்ற அச்சம் உங்களுக்கு வேண்டாம். ஏனெனில் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட இருப்பது இந்தியாவில் அல்ல. இங்கிலாந்தில். அந்த நாட்டின் அரசாங்கம்தான் தற்போது இது தொடர்பாக பரிசீலனை செய்து கொண்டுள்ளது.
கார்களை பொறுத்தவரை, எரிபொருள் குறைவாக இருந்தால் டேஷ்போர்டில் எச்சரிக்கை விளக்கு ஒளிரும். பெரும்பாலான கார்களில் இந்த வசதி உள்ளது. இன்னும் சுமார் 30 கிலோ மீட்டர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்ற சமயத்தில், இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிரும். ஆனால் கார்களை பொறுத்து, இந்த எண்ணிக்கை மாறுபடும்.
இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிர்ந்தாலும் கூட, அதனை பொருட்படுத்தாமல் ஒரு சிலர் தொடர்ந்து பயணம் செய்கின்றனர். எனவே சில சமயங்களில் கார் நடுவழியில் நின்று விடுகிறது. இதன் காரணமாக காரில் பயணம் செய்பவர்களுக்கு நேர விரயமும், தேவையற்ற மன உளைச்சலும் ஏற்படுகிறது. ஆனால் இங்கிலாந்து அரசு இந்த காரணத்திற்காக புதிய சட்டம் குறித்து பரிசீலிக்கவில்லை.
அதற்கு வேறொரு முக்கியமான காரணம் உள்ளது. டிரைவர்கள் சிலர் குறைவான எரிபொருளுடன் பயணம் செய்வதால், சில சமயங்களில் கார் நடுரோட்டில் நின்று விடுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் தேவையில்லாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இது மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் நேர விரயம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
அத்துடன் எரிபொருள் தீர்ந்து நிற்கும் கார் மீது, மற்ற வாகனங்கள் மோதி விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இதன் காரணமாக யாருக்காவது படுகாயங்கள் ஏற்படலாம். உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனை மனதில் கொண்டுதான், புதிய சட்டம் குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இந்த புதிய சட்டம் கூடிய விரைவில் பிறப்பிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், கடும் அபராதங்களும் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் பார்த்தால் சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சம்பந்தப்பட்ட நபரின் ஓட்டுனர் உரிமத்தில் தகுதியிழப்பு புள்ளிகளும் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் எரிபொருள் தீர்ந்து நிற்கும் கார் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டால், அபராத தொகையும், தண்டனையும் இன்னும் கடுமையாக உயரும் எனவும் கூறப்படுகிறது. எனவே வரும் காலங்களில் எரிபொருள் தீர்ந்து கார் நடுரோட்டில் நிற்கும் சூழல் ஏற்படாது என நம்பப்படுகிறது.
இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வரும் இந்த புதிய சட்டம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சட்டம் அமலுக்கு வந்த பின்னர்தான், அதன் நடைமுறைகள் குறித்த விபரங்கள் நமக்கு தெரியவரும். சாலை விபத்துக்களும், போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்படும் என்பதால், இந்த சட்டத்தை கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.
Note: Images used are for representational purpose only.
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!