Just In
- 7 min ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 48 min ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 1 hr ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 4 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- Finance வாரம் 2 நாள் லீவு கதையெல்லாம் மலையேறிவிட்டது.. இனி 6 நாள் வேலை.. சாம்சங் அறிவிப்பால் ஷாக்..!!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Movies Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
இணையத்தில் வைரலான வீடியோ... மொத்தமாக சிக்கிய 12 இளைஞர்கள்!! உபி-யில் நடைபெற்ற சம்பவம்
இந்தியாவை பொறுத்தவரையில் சாலைகளில் சாகசம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் சாகசங்களை செய்யும் வாகன ஓட்டிகளை பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.
அவ்வாறான சாலை சாகச நிகழ்வை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். உத்திர பிரதேசத்தில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
உத்திர பிரதேசத்தில் சாலை கட்டுமான பணிகள் கடந்த சில வருடங்களில் பெரிதும் மேம்பட்டுள்ளன. ஆனால் இதனை தவறாக பயன்படுத்துவோரும் இருக்கதான் செய்கின்றனர். மேலுள்ள வீடியோவில் மூன்று கார்களில் காலியான நெடுஞ்சாலை ஒன்றில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டுள்ளதை பார்க்கலாம்.
இளைஞர்களுக்கு செல்பி மோகம் இன்னமும் குறைந்தபாடில்லை. இந்த வகையில் நெடுஞ்சாலையில் வேகமாக இயங்கி கொண்டிருந்த காரின் மேற்கூரையில் ஏறி சில இளைஞர்கள் செல்பி எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் அதிவேகத்தில் இயங்கி கொண்டிருந்த காரின் மேற்கூரையில் நடனமாடியும் பார்த்துள்ளனர்.
மொத்தமாக 3 கார்களில் எப்படியிருந்தாலும் 12 இளைஞர்கள் இருப்பர். வெறும் 25 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக இந்த வீடியோ இருந்தாலும், இந்த சில வினாடிகளிலேயே இது எத்தகைய குற்றம் செயல் என்பதை நமக்கு புரிய வைத்துவிடுகிறது.
இது தொடர்பான வீடியோக்களும், படங்களும் இணையத்தில் வைரலானது மட்டுமில்லாமல், இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்து புகார்கள் அதிகளவில் வெளிவர துவங்கியதை அடுத்து இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாவிடினும், போலீஸார் இதுகுறித்து விசாரிக்க துவங்கியுள்ளனர்.
வீடியோக்களை வைத்து இளைஞர்களை அடையாளம் காண போலீஸார் தீவிரமாக உள்ளனர். அதேநேரம் கார்களை அவற்றின் பதிவெண் மூலம் கண்டறியவும் போலீஸார் முயற்சித்து வருகின்றனர். வீடியோவில் காரின் பதிவெண்ணை அவ்வளவாக தெளிவாக பார்க்க முடியவில்லை.
இன்னும் சொல்லப்போனால், ஒரு காரில் பதிவெண் பலகையே இல்லை. போலீஸார் தங்களை தேடக்கூடாது என்பதற்காக இளைஞர்கள் அவற்றை நீக்கியிருக்கலாம். ஏனெனில் பொது சாலையில் இவ்வாறான சாகசங்களில் ஈடுப்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இது போன்ற சாலை சாகசங்கள் விபத்தில் சென்று முடிய அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறான ஸ்டண்ட்களை மேற்கொள்வோர் மட்டுமின்றி அருகில் செல்லும் மற்ற வாகனங்களும் பாதிப்படைய கூடும். இணையம் நமது வாழ்வில் பெரும் பங்கு வகிப்பதால் இவ்வாறான சம்பவங்கள் உடனடியாகவும் அதிகளவிலும் நமக்கு தெரியவந்து கொண்டிருக்கின்றன.
போலீஸாரும் சிசிடிவி வீடியோக்களை வைத்தே குற்றவாளிகளை பிடிக்கின்றனர். இத்தகைய குற்றவாளிகள் மீது கடுமையான சட்டத்தை போலீஸார் எடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்.
-
இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?