Just In
- 19 min ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 40 min ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 2 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 2 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Movies Actor Siddharth: ஓகே சொன்ன அதிதி.. திருமணத்தை உறுதி செய்த சித்தார்த்!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இணையத்தில் வைரலான வீடியோ... மொத்தமாக சிக்கிய 12 இளைஞர்கள்!! உபி-யில் நடைபெற்ற சம்பவம்
இந்தியாவை பொறுத்தவரையில் சாலைகளில் சாகசம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் சாகசங்களை செய்யும் வாகன ஓட்டிகளை பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.
அவ்வாறான சாலை சாகச நிகழ்வை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். உத்திர பிரதேசத்தில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
உத்திர பிரதேசத்தில் சாலை கட்டுமான பணிகள் கடந்த சில வருடங்களில் பெரிதும் மேம்பட்டுள்ளன. ஆனால் இதனை தவறாக பயன்படுத்துவோரும் இருக்கதான் செய்கின்றனர். மேலுள்ள வீடியோவில் மூன்று கார்களில் காலியான நெடுஞ்சாலை ஒன்றில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டுள்ளதை பார்க்கலாம்.
இளைஞர்களுக்கு செல்பி மோகம் இன்னமும் குறைந்தபாடில்லை. இந்த வகையில் நெடுஞ்சாலையில் வேகமாக இயங்கி கொண்டிருந்த காரின் மேற்கூரையில் ஏறி சில இளைஞர்கள் செல்பி எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் அதிவேகத்தில் இயங்கி கொண்டிருந்த காரின் மேற்கூரையில் நடனமாடியும் பார்த்துள்ளனர்.
மொத்தமாக 3 கார்களில் எப்படியிருந்தாலும் 12 இளைஞர்கள் இருப்பர். வெறும் 25 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக இந்த வீடியோ இருந்தாலும், இந்த சில வினாடிகளிலேயே இது எத்தகைய குற்றம் செயல் என்பதை நமக்கு புரிய வைத்துவிடுகிறது.
இது தொடர்பான வீடியோக்களும், படங்களும் இணையத்தில் வைரலானது மட்டுமில்லாமல், இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்து புகார்கள் அதிகளவில் வெளிவர துவங்கியதை அடுத்து இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாவிடினும், போலீஸார் இதுகுறித்து விசாரிக்க துவங்கியுள்ளனர்.
வீடியோக்களை வைத்து இளைஞர்களை அடையாளம் காண போலீஸார் தீவிரமாக உள்ளனர். அதேநேரம் கார்களை அவற்றின் பதிவெண் மூலம் கண்டறியவும் போலீஸார் முயற்சித்து வருகின்றனர். வீடியோவில் காரின் பதிவெண்ணை அவ்வளவாக தெளிவாக பார்க்க முடியவில்லை.
இன்னும் சொல்லப்போனால், ஒரு காரில் பதிவெண் பலகையே இல்லை. போலீஸார் தங்களை தேடக்கூடாது என்பதற்காக இளைஞர்கள் அவற்றை நீக்கியிருக்கலாம். ஏனெனில் பொது சாலையில் இவ்வாறான சாகசங்களில் ஈடுப்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இது போன்ற சாலை சாகசங்கள் விபத்தில் சென்று முடிய அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறான ஸ்டண்ட்களை மேற்கொள்வோர் மட்டுமின்றி அருகில் செல்லும் மற்ற வாகனங்களும் பாதிப்படைய கூடும். இணையம் நமது வாழ்வில் பெரும் பங்கு வகிப்பதால் இவ்வாறான சம்பவங்கள் உடனடியாகவும் அதிகளவிலும் நமக்கு தெரியவந்து கொண்டிருக்கின்றன.
போலீஸாரும் சிசிடிவி வீடியோக்களை வைத்தே குற்றவாளிகளை பிடிக்கின்றனர். இத்தகைய குற்றவாளிகள் மீது கடுமையான சட்டத்தை போலீஸார் எடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்.