Just In
- 1 hr ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 1 hr ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 2 hrs ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 3 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Movies Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?
மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் தந்தை பைக் பயணம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த ஒரு சில வாரங்களாக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்திருந்தது.
மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததும் கூட இதற்கு ஒரு காரணம். ஆனால் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே வாகன போக்குவரத்து சீராக தொடங்கியுள்ளது. அத்துடன் மதுக்கடைகளும் திறக்கப்பட்டிருப்பதால், மீண்டும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்துள்ளது.
பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தமிழகத்தில் தற்போது மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசு ஒரு சட்ட போராட்டத்தையே நடத்தியுள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால், கடந்த சில வாரங்களாக 'குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து' என்பது போன்ற செய்திகளை நாம் அதிகம் காணாமல் இருந்தோம்.
எனினும் தற்போது டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள காரணத்தால், அத்தகைய விபத்துக்களும் மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன. இந்த வரிசையில் அரியலூர் அருகே நடைபெற்றுள்ள ஒரு விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திய தந்தையில் அவர் காயமடைந்தது மட்டுமின்றி, அவரது குழந்தைக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள திருமங்கலம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். உறவினர் வீட்டு துக்க காரியத்தில் பங்கேற்பதற்காக செல்வம் நேற்று (மே 19ம் தேதி) இரு சக்கர வாகனத்தில் சென்றார். அங்கு அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் சுயநினைவை இழந்துள்ளார்.
இருந்தாலும் பைக்கை கிளப்பி கொண்டு அவர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் போதையில் திரும்பி வரும்போது தனது மகன் அன்பு அமுதனையும் செல்வம் பைக்கில் அழைத்து சென்றார். அன்பு அமுதனுக்கு ஐந்து வயது மட்டுமே ஆகிறது. முன் பகுதியில் மகனை அமர வைத்து கொண்டு, செல்வம் தாறுமாறாக பைக்கை ஓட்டியுள்ளார்.
எனவே புதுச்சாவடி என்னும் இடத்திற்கு அருகே வந்தபோது, அன்பு அமுதன் எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதனால் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் செல்வம் தொடர்ந்து பைக்கை ஓட்டி சென்றுள்ளார். அவர் அந்தளவிற்கு உச்சகட்ட போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் சிறிது தூரம் சென்றதும் அவரும் விபத்தில் சிக்கினார். வழியில் இருந்து ஒரு முட்புதருக்கு செல்வம் தவறி விழுந்தார். முன்னதாக சாலையில் அன்பு அமுதன் மயங்கி கிடப்பதை கண்ட, அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பாலிமர் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் கீழே காணலாம்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது எவ்வளவு பெரிய தவறு என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், சிந்திக்கும் நிலையையும், முடிவு எடுக்கும் நிலையையும் இழக்கும் நிலை ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு சூழலில் வாகனம் ஓட்டும்போது, விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விடுகின்றன.
எனவே மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள். ஒருவேளை மது அருந்தியிருக்கும்போது நீங்கள் வாகனம் ஓட்டும் சூழல் ஏற்பட்டால், சில வழிமுறைகள் மூலம் அதனை தவிர்க்கலாம். நீங்கள் மது அருந்தியிருந்தால், மது அருந்தாத அதே சமயம் உங்கள் நம்பிக்கைக்கு உரிய ஒருவரிடம் வாகனத்தின் சாவியை கொடுத்து விடுங்கள்.
நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு அவர் உங்களை பத்திரமாக அழைத்து சென்று விடுவார். அப்படி ஒரு வாய்ப்பு இல்லாத பட்சத்தில், நீங்கள் இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக தங்கி விடுங்கள். போதை தெளிந்த பிறகு அங்கிருந்து புறப்படுங்கள். அதேபோல் ஓலா, உபேர் போன்ற கேப்கள் மூலம் பயணம் செய்வதும் ஓரளவிற்கு நன்மை தரும்.
ஆனால் வழியில் நீங்கள் யாருடனும் தகராறு செய்யாமல் இருப்பது மிக அவசியம். இல்லாவிட்டால் நிலைமை இன்னும் சிக்கலாகி விடும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் மது அருந்தாமல் இருப்பது இன்னும் நல்லது. இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதுதான் மிக முக்கியமான காரணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!