Just In
- 33 min ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 2 hrs ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள்! காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்
போலீஸ்காரர்கள் இரண்டு பேர் எல்கேஜி பசங்களை போல் பொது வெளியில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். இதற்கான காரணத்தை கேட்டு மக்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.
பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் அனைத்திலும் தற்போது ஒரு வீடியோ காட்டு தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவில் டொயோட்டா இன்னோவா கார் ஒன்று சாலையோரமாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதை நம்மால் காண முடிகிறது. அதன் அருகே இரு போலீஸ்காரர்கள் சீருடையில் கட்டி புரண்டு சண்டையிட்டு வருகின்றனர்.
அவர்கள் இருவரை தவிர மூன்றாவதாக ஒரு போலீஸ்காரரும் அந்த வீடியோவில் உள்ளார். சண்டையிட்டு கொண்டிருந்த இரண்டு போலீஸ்காரர்களையும் அவர் விலக்கி விட முயன்று கொண்டிருந்ததை போல் தெரிகிறது. அந்த வழியாக சென்ற அனைவரும் போலீஸ்காரர்கள் சீருடையில் சண்டையிட்டு கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர்களில் சிலர் இந்த சண்டையை செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளங்களில் பகிர தொடங்கினர். இதன் எதிரொலியாக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் இந்த வீடியோ சென்றது. எனவே இது தொடர்பான விசாரணையை அவர்கள் உடனடியாக முடுக்கி விட்டனர். இதில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பித்தூர் பகுதியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.
அத்துடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட போலீஸ்காரர்கள் இரண்டு பேரின் பெயர் ராஜேஷ் சிங், சுனில் குமார் என்பதும் தெரியவந்தது. வீடியோ வைரல் ஆனதன் காரணமாக அவர்கள் இரண்டு பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் வைரலாக பரவி வரும் வீடியோவில் மூன்றாவதாக இருந்த போலீஸ்காரர் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான தொடர் விசாரணையில் மேலும் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தன. அவை உங்களுக்கு சிரிப்பையும் வரவழைக்கலாம். அல்லது காவல் துறையினர் இப்படியா நடந்து கொள்வது? என்ற அதிர்ச்சியையும் ஏற்படுத்தலாம். டொயோட்டா இன்னோவா காரின் முன் இருக்கைதான் போலீஸ்காரர்களின் இந்த குடுமிப்பிடி சண்டைக்கு காரணம்!!
டொயோட்டா இன்னோவா காரை பற்றிய அறிமுகமே தேவையில்லை. இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் டொயோட்டா இன்னோவாவும் ஒன்று. வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா இன்னோவா கார் இன்னமும் பிரபலமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் சௌகரியமான இருக்கைகளும் முக்கியமான காரணங்களில் ஒன்று.
இதன் காரணமாகதான் டாக்ஸி ஆபரேட்டர்கள் பலரும் டொயோட்டா இன்னோவா காரை விரும்புகின்றனர். டூர் செல்பவர்களுக்கு ஏற்ற காராக டொயோட்டா இன்னோவா திகழ்ந்து வருகிறது. இதுதவிர இந்தியாவின் பல்வேறு மாநில போலீசாரும் ரோந்து பணிகளுக்கு டொயோட்டா இன்னோவா காரை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், உத்தரபிரதேச மாநில காவல் துறையும் ஒன்று. சம்பவத்தன்று ராஜேஷ் சிங் மற்றும் சுனில் குமார் உள்ளிட்ட போலீசார் வழக்கம் போல டொயோட்டா இன்னோவா காரில் ரோந்து சென்றுள்ளனர். ஆனால் அதன் முன் இருக்கையில் யார் அமர்வது? என்பது தொடர்பாக ராஜேஷ் சிங் மற்றும் சுனில் குமார் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அவர்களுக்கு இடையே வாய் தகராறு மட்டும்தான் இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் தகராறு முற்றி கைகலப்பு வரை சென்று விட்டது. இதன் விளைவாகதான் ஸ்கூல் பசங்களை போல் அவர்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் போலீஸ்காரர்களின் சண்டை வீடியோவை நீங்கள் கீழே ஜாலியாக கண்டு களிக்கலாம்!!
முன் இருக்கையில் யார் அமர்வது? என்பது தொடர்பான தகராறில் காவலர்கள் இரண்டு பேர் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் தற்போது நாடு முழுக்க பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பேசாமல் முன் இருக்கையில் யார் அமர வேண்டும்? பின் இருக்கையில் யார் அமர வேண்டும்? என்பது தொடர்பாக கடுமையான விதிகளை அமலுக்கு கொண்டு வந்து விடலாமா? இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?