Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள்! காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்
போலீஸ்காரர்கள் இரண்டு பேர் எல்கேஜி பசங்களை போல் பொது வெளியில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். இதற்கான காரணத்தை கேட்டு மக்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.
பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் அனைத்திலும் தற்போது ஒரு வீடியோ காட்டு தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவில் டொயோட்டா இன்னோவா கார் ஒன்று சாலையோரமாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதை நம்மால் காண முடிகிறது. அதன் அருகே இரு போலீஸ்காரர்கள் சீருடையில் கட்டி புரண்டு சண்டையிட்டு வருகின்றனர்.
அவர்கள் இருவரை தவிர மூன்றாவதாக ஒரு போலீஸ்காரரும் அந்த வீடியோவில் உள்ளார். சண்டையிட்டு கொண்டிருந்த இரண்டு போலீஸ்காரர்களையும் அவர் விலக்கி விட முயன்று கொண்டிருந்ததை போல் தெரிகிறது. அந்த வழியாக சென்ற அனைவரும் போலீஸ்காரர்கள் சீருடையில் சண்டையிட்டு கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர்களில் சிலர் இந்த சண்டையை செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளங்களில் பகிர தொடங்கினர். இதன் எதிரொலியாக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் இந்த வீடியோ சென்றது. எனவே இது தொடர்பான விசாரணையை அவர்கள் உடனடியாக முடுக்கி விட்டனர். இதில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பித்தூர் பகுதியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.
அத்துடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட போலீஸ்காரர்கள் இரண்டு பேரின் பெயர் ராஜேஷ் சிங், சுனில் குமார் என்பதும் தெரியவந்தது. வீடியோ வைரல் ஆனதன் காரணமாக அவர்கள் இரண்டு பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் வைரலாக பரவி வரும் வீடியோவில் மூன்றாவதாக இருந்த போலீஸ்காரர் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான தொடர் விசாரணையில் மேலும் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தன. அவை உங்களுக்கு சிரிப்பையும் வரவழைக்கலாம். அல்லது காவல் துறையினர் இப்படியா நடந்து கொள்வது? என்ற அதிர்ச்சியையும் ஏற்படுத்தலாம். டொயோட்டா இன்னோவா காரின் முன் இருக்கைதான் போலீஸ்காரர்களின் இந்த குடுமிப்பிடி சண்டைக்கு காரணம்!!
டொயோட்டா இன்னோவா காரை பற்றிய அறிமுகமே தேவையில்லை. இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் டொயோட்டா இன்னோவாவும் ஒன்று. வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா இன்னோவா கார் இன்னமும் பிரபலமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் சௌகரியமான இருக்கைகளும் முக்கியமான காரணங்களில் ஒன்று.
இதன் காரணமாகதான் டாக்ஸி ஆபரேட்டர்கள் பலரும் டொயோட்டா இன்னோவா காரை விரும்புகின்றனர். டூர் செல்பவர்களுக்கு ஏற்ற காராக டொயோட்டா இன்னோவா திகழ்ந்து வருகிறது. இதுதவிர இந்தியாவின் பல்வேறு மாநில போலீசாரும் ரோந்து பணிகளுக்கு டொயோட்டா இன்னோவா காரை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், உத்தரபிரதேச மாநில காவல் துறையும் ஒன்று. சம்பவத்தன்று ராஜேஷ் சிங் மற்றும் சுனில் குமார் உள்ளிட்ட போலீசார் வழக்கம் போல டொயோட்டா இன்னோவா காரில் ரோந்து சென்றுள்ளனர். ஆனால் அதன் முன் இருக்கையில் யார் அமர்வது? என்பது தொடர்பாக ராஜேஷ் சிங் மற்றும் சுனில் குமார் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அவர்களுக்கு இடையே வாய் தகராறு மட்டும்தான் இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் தகராறு முற்றி கைகலப்பு வரை சென்று விட்டது. இதன் விளைவாகதான் ஸ்கூல் பசங்களை போல் அவர்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் போலீஸ்காரர்களின் சண்டை வீடியோவை நீங்கள் கீழே ஜாலியாக கண்டு களிக்கலாம்!!
முன் இருக்கையில் யார் அமர்வது? என்பது தொடர்பான தகராறில் காவலர்கள் இரண்டு பேர் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் தற்போது நாடு முழுக்க பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பேசாமல் முன் இருக்கையில் யார் அமர வேண்டும்? பின் இருக்கையில் யார் அமர வேண்டும்? என்பது தொடர்பாக கடுமையான விதிகளை அமலுக்கு கொண்டு வந்து விடலாமா? இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!