Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பழைய வாகனங்களுக்கு ஸ்கெட்ச்... ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் அதிரடி... ஆடிப்போன உரிமையாளர்கள்...
ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் அதிரடி காட்டியதால், பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் ஆடிப்போயுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் (Regional Transport Office - RTO), மொத்தம் 60,688 வாகனங்களின் பதிவு சான்றிதழ்களை (Registration Certificates - RC) தற்போது தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டியுள்ளது. ஆர்டிஓ அலுவலகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடையவை ஆகும்.
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் பதிவு சான்றிதழை புதுப்பிக்காத காரணத்தால், மேற்கண்ட அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவு சான்றிதழ்களை புதுப்பிக்க வேண்டும் என வாகனங்களுடைய உரிமையாளர்களுக்கு ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தரப்பில் இருந்து பலமுறை நினைவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் பதிவு சான்றிதழ்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு வாகனங்களின் உரிமையாளர்கள் பதிவு சான்றிதழ்களை புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்கவில்லை. எனவே அவர்களின் பதிவு சான்றிதழ்களை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் 6 மாத காலத்திற்கு அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இன்னும் ஆறு மாத காலத்திற்குள் பதிவு சான்றிதழ்களை வாகன உரிமையாளர்கள் புதுப்பிக்க தவறினால், அவை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''விருப்பம் உள்ள வாகன உரிமையாளர்கள், 6 மாத காலத்திற்குள் பதிவு சான்றிதழ்களை புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்க முடியும்.
அவர்கள் அவ்வாறு செய்யும்பட்சத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர்களின் பதிவு சான்றிதழ்கள் மீண்டும் புதுப்பிக்கப்படும். ஆனால் இன்னமும் எங்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல், பதிவு சான்றிதழ்களை புதுப்பிக்க தவறினால், அவை நிரந்தரமாக ரத்து செய்யப்படும். அத்துடன் அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களுடைய வாகனத்தின் பழைய பதிவு சான்றிதழை, ஆர்டிஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பதிவு சான்றிதழை மீண்டும் புதுப்பிக்காத வரை அவர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் இயக்க கூடாது. இந்த எச்சரிக்கையை மீறுகின்ற வகையில், சாலையில் அந்த வாகனங்களை இயக்கினால், அவை பறிமுதல் செய்யப்படும்.
மேலும் மோட்டார் வாகன சட்டப்படி அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர். ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை தற்போது தலைவிரித்தாடி வருவதற்கு பழைய வாகனங்களும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பழைய டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலில் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவை வெளியிடும் புகை, காற்றின் தரத்தை சீர்குலைத்து விடுகிறது. எனவே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் ஊக்குவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.