Just In
- 15 min ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News 7 மணிக்கு வாக்குப்பதிவு 72%.. நள்ளிரவில் அப்டேட் 69%.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் குழப்பம்!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பழைய வாகனங்களுக்கு ஸ்கெட்ச்... ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் அதிரடி... ஆடிப்போன உரிமையாளர்கள்...
ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் அதிரடி காட்டியதால், பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் ஆடிப்போயுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் (Regional Transport Office - RTO), மொத்தம் 60,688 வாகனங்களின் பதிவு சான்றிதழ்களை (Registration Certificates - RC) தற்போது தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டியுள்ளது. ஆர்டிஓ அலுவலகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடையவை ஆகும்.
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் பதிவு சான்றிதழை புதுப்பிக்காத காரணத்தால், மேற்கண்ட அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவு சான்றிதழ்களை புதுப்பிக்க வேண்டும் என வாகனங்களுடைய உரிமையாளர்களுக்கு ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தரப்பில் இருந்து பலமுறை நினைவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் பதிவு சான்றிதழ்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு வாகனங்களின் உரிமையாளர்கள் பதிவு சான்றிதழ்களை புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்கவில்லை. எனவே அவர்களின் பதிவு சான்றிதழ்களை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் 6 மாத காலத்திற்கு அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இன்னும் ஆறு மாத காலத்திற்குள் பதிவு சான்றிதழ்களை வாகன உரிமையாளர்கள் புதுப்பிக்க தவறினால், அவை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''விருப்பம் உள்ள வாகன உரிமையாளர்கள், 6 மாத காலத்திற்குள் பதிவு சான்றிதழ்களை புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்க முடியும்.
அவர்கள் அவ்வாறு செய்யும்பட்சத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர்களின் பதிவு சான்றிதழ்கள் மீண்டும் புதுப்பிக்கப்படும். ஆனால் இன்னமும் எங்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல், பதிவு சான்றிதழ்களை புதுப்பிக்க தவறினால், அவை நிரந்தரமாக ரத்து செய்யப்படும். அத்துடன் அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களுடைய வாகனத்தின் பழைய பதிவு சான்றிதழை, ஆர்டிஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பதிவு சான்றிதழை மீண்டும் புதுப்பிக்காத வரை அவர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் இயக்க கூடாது. இந்த எச்சரிக்கையை மீறுகின்ற வகையில், சாலையில் அந்த வாகனங்களை இயக்கினால், அவை பறிமுதல் செய்யப்படும்.
மேலும் மோட்டார் வாகன சட்டப்படி அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர். ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை தற்போது தலைவிரித்தாடி வருவதற்கு பழைய வாகனங்களும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பழைய டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலில் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவை வெளியிடும் புகை, காற்றின் தரத்தை சீர்குலைத்து விடுகிறது. எனவே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் ஊக்குவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!