Just In
- 29 min ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 37 min ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 3 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 3 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பழைய வாகனங்களுக்கு ஸ்கெட்ச்... ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் அதிரடி... ஆடிப்போன உரிமையாளர்கள்...
ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் அதிரடி காட்டியதால், பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் ஆடிப்போயுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் (Regional Transport Office - RTO), மொத்தம் 60,688 வாகனங்களின் பதிவு சான்றிதழ்களை (Registration Certificates - RC) தற்போது தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டியுள்ளது. ஆர்டிஓ அலுவலகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடையவை ஆகும்.
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் பதிவு சான்றிதழை புதுப்பிக்காத காரணத்தால், மேற்கண்ட அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவு சான்றிதழ்களை புதுப்பிக்க வேண்டும் என வாகனங்களுடைய உரிமையாளர்களுக்கு ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தரப்பில் இருந்து பலமுறை நினைவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் பதிவு சான்றிதழ்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு வாகனங்களின் உரிமையாளர்கள் பதிவு சான்றிதழ்களை புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்கவில்லை. எனவே அவர்களின் பதிவு சான்றிதழ்களை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் 6 மாத காலத்திற்கு அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இன்னும் ஆறு மாத காலத்திற்குள் பதிவு சான்றிதழ்களை வாகன உரிமையாளர்கள் புதுப்பிக்க தவறினால், அவை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''விருப்பம் உள்ள வாகன உரிமையாளர்கள், 6 மாத காலத்திற்குள் பதிவு சான்றிதழ்களை புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்க முடியும்.
அவர்கள் அவ்வாறு செய்யும்பட்சத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர்களின் பதிவு சான்றிதழ்கள் மீண்டும் புதுப்பிக்கப்படும். ஆனால் இன்னமும் எங்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல், பதிவு சான்றிதழ்களை புதுப்பிக்க தவறினால், அவை நிரந்தரமாக ரத்து செய்யப்படும். அத்துடன் அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களுடைய வாகனத்தின் பழைய பதிவு சான்றிதழை, ஆர்டிஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பதிவு சான்றிதழை மீண்டும் புதுப்பிக்காத வரை அவர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் இயக்க கூடாது. இந்த எச்சரிக்கையை மீறுகின்ற வகையில், சாலையில் அந்த வாகனங்களை இயக்கினால், அவை பறிமுதல் செய்யப்படும்.
மேலும் மோட்டார் வாகன சட்டப்படி அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர். ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை தற்போது தலைவிரித்தாடி வருவதற்கு பழைய வாகனங்களும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பழைய டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலில் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவை வெளியிடும் புகை, காற்றின் தரத்தை சீர்குலைத்து விடுகிறது. எனவே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் ஊக்குவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!