Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடுரோட்டில் போட்டு பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்...
இளைஞர் ஒருவர் நடுரோட்டில் போட்டு பைக்கை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராதம் சமீபத்தில் மிக கடுமையாக உயர்த்தப்பட்டது.
கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில்தான் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகையை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் போலீசார் புதிய விதிகளை கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர்.
இதனால் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே சில இடங்களில் கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வருகிறது. புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த புதிதில், அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் ஒருவர் பைக்கை தீ வைத்து கொளுத்தினார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவமும் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட் நகரில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அவர் ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் போலீசார் இந்த நடவடிக்கையால் அந்த இளைஞர் விரக்தியடைந்தார். இதன்பின் அவர் திடீரென தனது பைக்கை சாலையில் போட்டு உடைக்க தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில வினாடிகளுக்கு பின்பாக அவர் தனது பைக்கை சாலையில் போட்டு அதன் மீது அமர்ந்து அழ தொடங்கி விட்டார்.
விரக்தியில் பைக்கை உடைத்த இளைஞரின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களின் வாயிலாக வைரலாக பரவி வருகிறது. தற்போது அந்த இளைஞருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அபராத தொகைகளை உயர்த்தியது தவறு என்பது ஒரு சிலரின் கருத்தாக உள்ளது.
அதே சமயம் விதிமுறைகளின் படி ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலானோர் இதனை பின்பற்றுவதில்லை.
உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்க இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனவேதான் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!