Just In
- 1 hr ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 1 hr ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 2 hrs ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 3 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Movies Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடுரோட்டில் போட்டு பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்...
இளைஞர் ஒருவர் நடுரோட்டில் போட்டு பைக்கை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராதம் சமீபத்தில் மிக கடுமையாக உயர்த்தப்பட்டது.
கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில்தான் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகையை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் போலீசார் புதிய விதிகளை கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர்.
இதனால் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே சில இடங்களில் கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வருகிறது. புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த புதிதில், அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் ஒருவர் பைக்கை தீ வைத்து கொளுத்தினார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவமும் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட் நகரில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அவர் ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் போலீசார் இந்த நடவடிக்கையால் அந்த இளைஞர் விரக்தியடைந்தார். இதன்பின் அவர் திடீரென தனது பைக்கை சாலையில் போட்டு உடைக்க தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில வினாடிகளுக்கு பின்பாக அவர் தனது பைக்கை சாலையில் போட்டு அதன் மீது அமர்ந்து அழ தொடங்கி விட்டார்.
விரக்தியில் பைக்கை உடைத்த இளைஞரின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களின் வாயிலாக வைரலாக பரவி வருகிறது. தற்போது அந்த இளைஞருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அபராத தொகைகளை உயர்த்தியது தவறு என்பது ஒரு சிலரின் கருத்தாக உள்ளது.
அதே சமயம் விதிமுறைகளின் படி ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலானோர் இதனை பின்பற்றுவதில்லை.
உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்க இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனவேதான் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!