Just In
- 4 hrs ago கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- 9 hrs ago 35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
- 11 hrs ago மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- 11 hrs ago டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
Don't Miss!
- Finance நெருங்கிய தேர்தல்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா? இன்றைய ரேட் என்ன?
- News மதுரை தொகுதி: 'மாமதுரை' மண்ணில் மீண்டும் செங்கொடி பறக்கும்? இரட்டை இலை இனி ஒருமுறை துளிர்க்கும்?
- Movies அசிஸ்டன்ட் டைரக்டர் இல்ல..மணமக்களை வாழ்த்துக்கள் ஷங்கர் பேச்சு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே மாபெரும் சாதனை வெற்றி.. ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்கில் புதிய ரெக்கார்டு
- Technology மாஸ் காட்டிய Portronics.. ரூ.1500 விலை.. யாரும் பார்த்திடாத புது டிசைன்.. புது வகை இயர்போன்ஸ்.. என்ன மாடல்?
- Lifestyle வெங்காயம் தக்காளி இல்லாமலே கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
ஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா?
அமெரிக்கா நிலைகுலைந்து போயுள்ள நிலையில், அங்கு கொரோனா வைரஸால் மற்றொரு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது உலகையே உலுக்கி வருகிறது. வல்லரசு என மார்தட்டி கொண்ட நாடுகள் கூட கொரோனா வைரஸால் நிலைகுலைந்து போயுள்ளன. இதற்கு அமெரிக்கா நல்ல உதாரணம். உலகிலேயே கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. கொரோனா வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது? என்பது தெரியாமல், அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து போயுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்காவில் தற்போது மற்றொரு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஊரடங்கால், அமெரிக்காவின் ஒரு சில முக்கிய பகுதிகளில் தற்போது வாகனங்கள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த குற்ற சம்பவங்களை தடுப்பது அமெரிக்க போலீசாருக்கு தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளது. அதேசமயம் திருட்டு சம்பவங்களால் வாகன உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, அமெரிக்காவில் பெரும்பாலானோர் தற்போது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். இதில், ஒரு சிலரின் செடான்கள், எஸ்யூவிகள் மற்றும் பிக்அப் டிரக்குகள் கவனிப்பு இன்றி வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.
அமெரிக்காவில் தற்போது பெரும்பாலான வீதிகள் அமைதியாக காட்சியளிக்கின்றன. வாகன போக்குவரத்து குறைவாகவே இருக்கிறது. இருந்தபோதும் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் மே மாதத்தின் மத்திய பகுதி வரை, நியூயார்க்கில் 63 சதவீதமும், லாஸ் ஏஞ்சல்ஸில் கிட்டத்தட்ட 17 சதவீதமும் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த 2019ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய பகுதிகளில் தற்போது வாகன கொள்ளை சம்பவங்கள் இந்த அளவிற்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் தவிர அமெரிக்காவின் மற்ற பகுதிகளிலும் வாகன திருட்டு தொடர்பான புகார்கள் காவல் நிலையங்களில் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகன திருட்டு இப்படி அதிகரித்து கொண்டிருந்தாலும், அமெரிக்காவில் மற்ற குற்ற சம்பவங்கள் நடப்பது வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரிஸ்க் குறைவான குற்றம் என்பதால்தான், தற்போது வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதில், மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலும் இருக்கிறது.
அமெரிக்காவில் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் பலர், டோரை லாக் செய்யாமல், அப்படியே திறந்து வைத்து விட்டு சென்று விடுகின்றனர். மேலும் சாவியையும் வாகனத்திலேயே விட்டு செல்கின்றனர். இது திருடர்களின் பணியை எளிதாக்கி விடுகிறது. திருடும் எண்ணம் இல்லாதவர்களுக்கு கூட இதை பார்த்தால், திருட்டு எண்ணம் வந்து விடும் என்பதை மறுப்பதற்கில்லை.
இதனால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாகனங்களை திருடும் சம்பவங்களும் அமெரிக்காவில் அதிகளவில் நடக்கின்றன. இதற்கும் ஆதாரம் இருக்கிறது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்ட்டின் நகரில், கடந்த ஏப்ரல் மாதம் கொள்ளையடிக்கப்பட்ட 322 வாகனங்களில், சுமார் 72 சதவீத வாகனங்களின் சாவி அருகிலேயே இருந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''டிரைவர்கள் பலர் தற்போது தங்களது வாகனத்தை பயன்படுத்துவதில்லை. அத்துடன் வாகனத்தை அடிக்கடி 'செக்' செய்வதும் இல்லை. இதனை பயன்படுத்தி கொண்டு, கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். இங்கு க்ரிமினல்கள் பலர் தற்போது வேலையில்லாமல் சுற்றி கொண்டுள்ளனர்.
அவர்களின் கைகளில் அதிக நேரம் இருக்கிறது. அத்துடன் அவர்களுக்கு பணமும் தேவைப்படுகிறது. மேலும் இன்டர்நெட்டும் கூட கொள்ளையர்களுக்கு உதவி செய்கிறது. வாகனங்களை எப்படி கொள்ளையடிப்பது? என்பதை ஒரு சிலர் யூ-டியூப்பில் தேடி தெரிந்து கொள்கின்றனர். இதன் மூலம் வாகன கொள்ளையில் அவர்கள் கை தேர்ந்தவர்களாக மாறி விடுகின்றனர்.
ஒரு சிலர் வெறும் பத்தே வினாடிகளில் வேலையை முடித்து விடுகின்றனர். கொள்ளையர்கள் வாகனங்களில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. சட்டென வேலையை முடித்து கொண்டு கிளம்பி விடுகின்றனர். மேலும் இரவு நேரங்களில்தான் வாகனங்கள் கொள்ளையடிக்கப்படும் என்பதும் இல்லை. பட்டப்பகலிலேயே சிலர் வாகனங்களை கொள்ளையடிக்கின்றனர்'' என்றனர்.
இதே பாணியில் இந்தியாவிலும் கூட வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. இதனால் வாகன உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. நீங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு எங்கே செல்வதாக இருந்தாலும், சாவியை மறக்காமல் கையோடு எடுத்து சென்று விடுங்கள். ஒரு சிலர் சாவியை எடுத்து செல்ல மறந்து விடுகின்றனர்.
சாவியை விட்டு சென்றால், எனது வாகனத்தை கொள்ளையடித்து கொள்ளலாம் என நீங்களே திருடர்களை வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்தது போலாகி விடும். அத்துடன் வாகனம் லாக் செய்யப்பட்டுள்ளதா? என்பதையும் ஒரு முறைக்கு இரு முறை 'செக்' செய்து கொள்ளுங்கள். கார் என்றால், விண்டோ கண்ணாடிகளை மறக்காமல் மேலே ஏற்றி விடவும்.
மேலும் வாகனங்களை பார்க் செய்வதற்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்யுங்கள். மேலும் டிராக்கிங் டிவைஸ்களை பயன்படுத்துவது குறித்தும் நீங்கள் பரிசீலிக்கலாம். என்னதான் எச்சரிக்கையாக இருந்தும் வாகனம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டால், அதனை மீண்டும் கண்டுபிடிப்பதற்கு டிராக்கிங் டிவைஸ்கள் உதவி செய்யும்.
Note: Images used are for representational purpose only.
-
இந்த விஷயத்தில் எல்லாரும் டாடா காரை தான் சூஸ் பண்றாங்க!! மஹிந்திரா, ஹூண்டாய் எல்லாம் எங்கேயோ இருக்கு!
-
தமிழ் படத்துல நடிச்ச இந்த நடிகையை நினைவிருக்கா!.. புடவையை கட்டிகிட்டு பைக்குல வந்து மனசை கொள்ளையடிச்சுட்டாங்க!
-
வந்தே பாரத் ரயிலில் உணவு இல்லாமல் பட்டினியாக பயணித்த குடும்பம்! இப்படியெல்லாம் கூட நடக்குமா?