Just In
- 31 min ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 52 min ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 1 hr ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 1 hr ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Movies சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. காட்டில் செம மழைதான் போங்க
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?
டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் டோல்கேட் கட்டணம் செலுத்த அனைத்து வாகனங்களுக்கும் தற்போது பாஸ்ட்டேக் (FASTag) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்ட்டேக் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதால், மத்திய அரசு பாஸ்ட்டேக்கை கட்டாயம் செய்துள்ளது. ரொக்கமாக பணம் செலுத்தினால், டோல்கேட்களில் வாகனம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சில சமயங்களில், அதுவும் குறிப்பாக வார விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறைகள் தொடங்கும் மற்றும் முடிவடையும் சமயங்களில் வாகனங்கள் மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் பாஸ்ட்டேக் பயன்படுத்தினால், அவ்வாறு நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க முடியும். எனவே வாகன ஓட்டிகளின் நேரம் மிச்சமாகும்.
அத்துடன் காத்திருக்கும் நேரத்தில் வாகனங்கள் தேவை இல்லாமல் ஆன் செய்து வைக்கப்பட்டிருப்பதால், எரிபொருள் வீணாவதும் பாஸ்ட்டேக் மூலமாக தவிர்க்கப்படும். இது சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. மேலும் பாஸ்ட்டேக் மூலமாக காகித பயன்பாடும் குறைக்கப்படுகிறது. இப்படி பாஸ்ட்டேக் மூலம் கிடைக்கும் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
ஆர்எஃப்ஐடி (Radio Frequency Identification - RFID) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு பாஸ்ட்டேக் இயங்குகிறது. ஏற்கனவே ரீசார்ஜ் செய்யப்பட்ட பாஸ்ட்டேக் அட்டையை, உங்கள் வாகனத்தின் முன்பக்க விண்டுஷீல்டில் பொருத்தி கொள்ள வேண்டும். அதனுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து, நீங்கள் டோல்கேட்டை கடக்கும்போது கட்டணம் எடுத்து கொள்ளப்படும்.
தேவைப்படும் நேரங்களில் நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். கடந்த மே மாத தொடக்கம் வரை நாடு முழுவதும் மொத்தம் 1.68 கோடி பாஸ்ட்டேக் அட்டைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது பாஸ்ட்டேக் கட்டாயம் செய்யப்பட்டு விட்டாலும் கூட, பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால் பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்கள், பாஸ்ட்டேக்குகளுக்கான பிரத்யேக லேனில் நுழைந்து விட்டால், இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு அதிரடியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி செல்லாத அல்லது செயல்படாத பாஸ்ட்டேக் அட்டையுடன் வரும் வாகனங்களுக்கும் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ''பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்கள் மற்றும் செல்லாத அல்லது செயல்படாத பாஸ்ட்டேக் அட்டை கொண்ட வாகனங்கள் இனி இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். வாகனத்தின் வகையை பொறுத்து, அதற்கு இணையான இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்'' என்றனர்.
இதற்கான அறிவிப்பு நேற்று (மே 17ம் தேதி) வெளியிடப்பட்டது. எனினும் பாஸ்ட்டேக் மூலமாக ஏராளமான நன்மைகள் இருந்தாலும், காத்திருக்கும் நேரம் குறையவில்லை என்று சில வாகன ஓட்டிகள் புலம்பியதை கடந்த காலங்களில் பார்க்க முடிந்தது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
வாகன இயக்கத்திற்கும், பயணங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், சாலைகளில் வாகன போக்குவரத்து முடங்கி கிடக்கிறது. இதனால் தற்போதைய நிலையில் டோல்கேட்களில் பெரிதாக காத்திருக்க வேண்டிய சூழல் இல்லை. ஆனால் அதற்கு முன்பு பாஸ்ட்டேக் காரணமாக டோல்கேட்களில் காத்திருக்கும் நேரம் உயர்ந்து விட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
-
பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்