Just In
- 36 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 42 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பரிசு கொடுக்க விலையுயர்ந்த காரை வாங்கிய அஜித்தின் ஜோடி நடிகை: யாருக்காக வாங்கினாங்க தெரியுமா...?
அஜித்திற்கு ஜோடியாக நடித்து வரும் பிரபல இந்தி திரைப்பட நடிகை விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் காரை பரிசாக வழங்குவதற்காக வங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
40 வயதைத் தாண்டியும் கதாநாயகியாக நடித்து வரும் வித்யாபாலன் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர், பிங்க் என்னும் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் இவருக்கு இதுவே முதல் படம் ஆகும். இந்த படத்திற்கான காட்சிப் பதிவு தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1980களில் பிறந்தவர்களின் கனவு கன்னியாக வளம் வந்த நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதையை கருவாகக் கொண்டு உருவான 'த டர்டி பிக்சர்' படத்தில், சில்க் சுமிதாவுடைய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, வித்யாபாலனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
இதன் பின்னரே அவர் மிகவும் பிரபலமானார். மேலும், பல்வேறு மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது, அவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு மட்டும் ரூ. 6 கோடிக்கும் மேலாக சம்பளம் பெற்று வருகிறார். நம்ம ஊரில் சில ஹீரோக்களுக்குக்கூட இந்த சம்பளம் கிடையாது.
வித்யா பாலன், 40 வயதைக் கடந்தும் கதாநாயகியாக நடித்து வருவது பலரிடமும் வியப்பை ஏற்படுத்தினாலும், அவரின் துணிச்சல் மற்றும் சிறப்பான நடிப்பே தற்போதுவரை அவர் கதாநாயகியாக நீடிப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. அவர் நடிப்பில் மட்டுமின்றி சொந்த வாழ்க்கையிலும் மிகவும் தைரியமான பெண்ணாக செயல்பட்டு வருகிறார்.
பல இளைஞர்களின் மனதை நடிப்பால் கவர்ந்த வித்யாபாலன், தற்போது அனைவரின் இதயத்திலும் நீங்க இடத்தை பிடிக்கும் விதமாக ஓர் செயலைச் செய்துள்ளார். அந்த வகையில், அவரது தாய் மற்றும் தந்தை மீது அதிகம் பாசம் கொண்ட வித்யாபாலன், அவர்களின் சொகுசான பயணத்திற்காக மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் காரைப் பரிசாக வழங்கியுள்ளார்.
மேலும், இந்த புதிய மாடல் இ-கிளாஸ் சொகுசு காரில், கூடுதலாக தேவைக்கேற்ப சில ஆல்டரேஷன் சொகுசு வசதிகளையும் இணைத்துள்ளார். இதன்காரணமாக, இந்த காரின் விலை மேலும் கூடியுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார், இந்தியாவில் ரூ. 59.12 லட்சம் என்ற விலையில், டெல்லி எக்ஸ்-ஷோரூமில் கிடைக்கின்றது. இது இந்த மாடலின் ஆரம்ப விலையாகும். இதன் ஹை வேரியண்ட் மாடலின் விலை ரூ. 73.21 லட்சமாக இருக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை தான்.
மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷனில் கிடைக்கின்றது. இதில் வித்யாபாலன், அவரின் பெற்றோர்களுக்காக இ63 ஏஎம்ஜி என்ற மாடலைத் தான் வாங்கியுள்ளார். இந்த காரில், 4.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 612 பிஎச்பி பவரையும் 850 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.
முன்னதாகவே கூறியதுபோல், வித்யாபாலன் கூடுதலாக இந்த காரில் சொகுசு மற்றும் நவீன வசதிகளைச் சேர்த்ததன் காரணமாக இந்த காரின் விலை ரூ. 1.50 கோடியாக அதிகரித்துள்ளது. இது சற்று அதிகம் தான். இருப்பினும், வயதானவர்கள் கலைப்பை உணராமல் பயணிக்கம் வகையில் பல்வேறு சொகுசு வசதிகள் இந்த கார் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வித்யாபாலனின் இந்த செயல் தற்போது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், தாய் தந்தை மீது இவ்வளவு பாசம் கொண்டவரா என வித்யாபாலனின் ரசிகர்கள் மெய்சிலிர்த்துபோய் உள்ளனர்.