Just In
- 49 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உயர் அதிகாரிகள் இடமே அதிரடி காட்டிய காவலர்கள்! என்ன செஞ்சாங்க தெரிஞ்சா நீங்களே அசந்துருவீங்க!
உயர் அதிகாரிகள் என தெரிந்தும் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் அரசு உயர்நிலை பணியாளர்கள் தங்களின் வாகனங்களின் மேற்கூரை சைரன் மற்றும் பீகன் எனப்படும் ஒளிரும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி வந்தனர். இந்த கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2017ம் ஆண்டிலேயே முற்று புள்ளி வைத்து விட்டது. அவசர கால வாகனங்களை தவிர வேறு எந்த வாகனங்களில் சைரன்கள் மற்றும் பீகன் மின் விளக்குகள் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை அமல்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, நாட்டின் பிரதமர் தொடங்கி பல முக்கிய அரசு அதிகாரிகள் தங்களின் வாகனங்களின் மேற்கூரையில் இடம் பெற்றிருந்த சைரன்களையும், மின் விளக்குகளையும் அகற்றினர். இருப்பினும், ஒரு சிலர் மட்டும் தற்போதும் இதனை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழும்பிய வண்ணம் இருக்கின்றது.
அத்தகைய வாகனங்கள் மீதே காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க காவல்துறையினரே இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் ஆவார்கள். சைரன்களை பயன்படுத்துவது தங்களுடைய மேல் அதிகாரிகள் என தெரிந்தும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 191 உயரதிகாரிகளின் வாகனங்களில் இருந்து சைரன்கள் அகற்றப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. சுமார் 72 மணி நேரங்களுக்கும் குறைவான நேரத்தில் 191 வாகனங்களில் இருந்து சட்ட விரோத சைரன்கள் அகற்றப்பட்டிருக்கின்றன.
இந்த சம்பவம் மேற்கு வங்க மாநில மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், உயர் அதிகாரிகளே அரசின் விதியை மீறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசு பொறியியளாளர்கள், மாவட்ட நீதித்துறை மாஜிஸ்திரேட், கூடுதல் மாவட்ட நீதிபதிகள், வன அலுவலர்கள், துணை செயலாளர்கள், சுகாதார தலைமை மருத்துவ அதிகாரிகள், அரசு மருத்துவமனை கண்கானிப்பாளர்கள் உள்ளிட்ட பலரின் வாகனத்தில் இருந்து சைரன்கள் அகற்றப்பட்டிருக்கின்றன.
அரசு பணியாளர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் அமைச்சர் ஒருவரும் சட்ட விரோதமாக சைரன்களைப் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரது வாகனத்தில் இருந்து சைரன்கள் அகற்றப்பட்டன.
குடியரசு தலைவருக்கே சைரனை பயன்படுத்த தடை:
சைரன்கள் பயன்படுத்துவதற்கான தடை 2017ம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அமைச்சர்கள், விஐபிக்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு முக்கிய அதிகாரிகள் உட்பட எவரும் சைரன்களை பயன்படுத்தக் கூடாது என்பதே விதியாகும். இந்த விதி குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் இந்திய தலைமை நீதிபதிகள் ஆகியோருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதை பல முக்கிய அதிகாரிகள் கடைபிடித்து வரும் நிலையில் ஒரு சிலர் மட்டும் விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைக் களையெடுக்கும் வகையிலேயே மேற்கு வங்க காவல்துறையினர் செயல்பட்டிருக்கின்றனர். அவசரகால வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைக்கும் வாகனம், காவல்துறை வாகனம் மற்றும் ராணுவ வாகனங்கள் ஆகியவற்றில் மட்டுமே சைரைன் மற்றும் நீலம், சிவப்பு நிறங்கள் அடங்கிய மின் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!