Just In
- 10 min ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 1 hr ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Movies கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்
எலெக்ட்ரிக் வாகனம் திடீரென வெடித்ததில், டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், இந்தியாவில் காற்று மாசுபாடு குறையும். அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறைக்கப்படும்.
இது இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் நன்மைகளை கொடுக்கும். இப்படி பல்வேறு நன்மைகள் இருக்கும் காரணத்தால்தான், எலெக்ட்ரிக் வாகனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட விலை சற்று அதிகம், சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் பொதுமக்களுக்கு இருக்கும் மற்றொரு பிரச்னை, அதன் பாதுகாப்பு குறித்த அச்சம்தான். எலெக்ட்ரிக் வாகனங்கள் சில சமயங்களில் திடீரென தீப்பற்றி எரிகின்றன. இதுகுறித்த செய்திகள் அவ்வப்போது தொடர்ச்சியாக வெளியாகி வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு குறித்த மக்களுக்கு அச்சம் உள்ளது.
அந்த அச்சத்தை அதிகரிக்கும் வகையிலான ஒரு சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில், எலெக்ட்ரிக் ரிக்ஸா ஒன்று திடீரென வெடித்ததில், அதன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா டிரைவருக்கு 26 வயது மட்டுமே ஆகிறது.
மால்டா நகரின் இங்கிலீஷ் பஜார் பகுதியில் இருக்கும் கோரப்பிர்-கிருஷ்ணப்பள்ளி சாலையில் பயணித்து கொண்டிருந்தபோது, அந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா திடீரென வெடித்தது. நேற்று முன் தினம் (ஜூலை 1ம் தேதி) இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கொடூர விபத்தில் எலெக்ட்ரிக் ரிக்ஸாவின் டிரைவரான முகம்மது இல்யஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் கூறுகையில், ''எலெக்ட்ரிக் ரிக்ஸாவின் 4 பேட்டரிகளில், 2 பேட்டரிகள் வெடித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது'' என்றனர். எலெக்ட்ரிக் ரிக்ஸா சாலையில் ஓடி கொண்டிருந்தபோது, திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் சாலையில் திடீரென வெடிப்பதோ அல்லது தீப்பற்றி எரிவதோ இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக உலகின் பல்வேறு பகுதிகளில், எலெக்ட்ரிக் கார்களும், எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களும் இதேபோல் தீக்கிரையாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவத்தில், அந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா பலத்த சேதமடைந்துள்ளது.
அதே சமயம் இது சதி வேலையாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே இச்சம்பவம் குறித்து என்ஐஏ (NIA - National Investigation Agency) விசாரணை நடத்த வேண்டும் என மால்டா (வடக்கு) பாஜக எம்பி காகென் முர்மு வலியுறுத்தியுள்ளார். இதன்பேரில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Note: Images used are for representational purpose only.
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!