Just In
- 13 min ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 37 min ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 3 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
Don't Miss!
- News மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Movies Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர்! கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு சென்ற இளைஞர் ஆட்டை அடித்து தூக்கியதால், கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சாலைகளில் வாகனங்களை ஓட்டுவது என்பது உண்மையிலேயே சவாலான காரியம்தான். இந்திய சாலைகளில் எப்போது? என்ன? நடக்கும் என்பதே தெரியாது. இங்கு உங்கள் வாகனத்தின் முன்பு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் நாய்கள் திடீரென குறுக்கே வரலாம். அத்துடன் சாலையை கடக்கும் மனிதர்கள் சுற்றுப்புறத்தை கவனிக்காமல் திடீரென வாகனத்தின் குறுக்கே வரக்கூடும்.
எனவேதான் இந்திய சாலைகளில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் அபாயகரமான ஒரு விஷயமாக உள்ளது. ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகளோ அல்லது மனிதர்களோ திடீரென குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் இருந்து வாகன ஓட்டிகள் எப்படி தப்பித்தனர்? என்பது தொடர்பான பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் உள்ளன.
இதே பாணியிலான ஒரு வீடியோவையும், அது தொடர்பான தகவல்களையும்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். பைக் ரைடர் ஒருவர் திடீரென குறுக்கே வந்த ஆடு ஒன்றின் மீது மோதி விட்டார். இதனால் ஊர் மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக என்ன நடந்தது? என்பதைதான் நாம் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
Mr speed என்னும் யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், பைக் ரைடர்கள் சிலர் ஒரு குழுவாக, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து பூடான் நோக்கி சென்று கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த குழுவில் இருந்த கிட்டத்தட்ட அனைத்து பைக்குகளும் ஹை-பெர்ஃபார்மென்ஸ் சூப்பர் பைக்குகள்தான்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்ததும், அங்கு சாலை மிகவும் குறுகலாக இருந்ததால், நார்மல் ஸ்பீடில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அத்துடன் அங்கு போலீஸ் செக்போஸ்ட் வேறு ஒன்று இருந்தது. இதனாலும் அவர்கள் வேகத்தை குறைத்துள்ளனர். இந்த குழுவில் ஒரு ரைடர் கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்10ஆர் (Kawasaki Ninja ZX10R) சூப்பர் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஆடு ஒன்று திடீரென கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்10ஆர் பைக்கின் முன்னால் வந்தது. அந்த பைக் ரைடரால் ஆடு மீது மோதுவதை தவிர்க்க முடியவில்லை. எனவே அவர் ஆட்டை அடித்து தூக்கி விட்டதாக தெரிகிறது. இதில், துரதிருஷ்டவசமாக அந்த ஆடு உயிரிழந்து விட்டது. மேலும் அந்த பைக் ரைடரும் கீழே விழுந்தார்.
உடனே அங்கிருந்த கிராம மக்கள் அங்கு ஒன்று கூடி விட்டனர். அவர்கள் அந்த பைக் ரைடருடன் வாக்குவாதம் செய்தனர். அத்துடன் அவர் அதிவேகத்தில் வந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் அந்த குழுவில் இருந்தவர்களோ, கேமரான ஆன் செய்து வைக்கப்பட்டிருப்பதாகவும், நாங்கள் அதிவேகத்தில் பயணம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க அதை காட்ட தயாராக இருப்பதாகவும் கூறினர்.
தற்போது நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் மோட்டார்சைக்கிள் ரைடர்கள், கேமரா பொருத்தப்பட்ட ஹெல்மெட்களைதான் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கெல்லாம் கிராம மக்கள் சமாதானம் அடையவில்லை. ஆடு மீது மோதியதற்காக, அவர் பணம் தர வேண்டும் என அவர்கள் ஆணித்தரமாக வலியுறுத்தினர்.
இப்படி பிரச்னை நடந்து கொண்டிருந்த சமயத்தில் காவல் துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்களிடம் என்ன நடந்தது? என்பதை பைக் ரைடர்கள் எடுத்து கூறினர். இதன்பின் அந்த அதிகாரி பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தம் செய்தார். சிறிது நேரத்தில் பைக் ரைடர், ஆட்டின் உரிமையாளருக்கு பணம் கொடுக்கவே பிரச்னை முடிவுக்கு வந்தது.
இதன்பின்னர் பைக் ரைடர்கள் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். ஆடு உயிரிழந்தது வருத்தமான விஷயம் என்றாலும், அதிர்ஷ்டவசமாக பைக் ரைடர் தப்பித்து விட்டார். அவருக்கோ அல்லது அவரது பைக்கிற்கோ பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. அங்கு கூடிய கிராம மக்கள் இன்னும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தால், சூழ்நிலை மிகவும் மோசமாக மாறியிருக்கும்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த வீடியோவில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயமும் உள்ளது. இந்த குழுவில் உள்ள அனைத்து ரைடர்களும் முறையாக பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துள்ளனர். பைக் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம். இந்திய சாலைகளில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
எனவே நீங்கள் அதிவேகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தால் விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி விடும். இதனால் எப்போதும் மிதமான வேகத்தில் பயணம் செய்யுங்கள். அத்துடன் ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணிந்து கொண்டு பைக் பயணங்களை மேற்கொள்வதும் முக்கியமானது.
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!