Just In
- 56 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 1 hr ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 4 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டேபிள் டாப் விமான ஓடுதளம்... ஆபத்துக்களும், சவால்களும்!
கோழிக்கோடு விமான ஓடுதளத்தில் நடந்த பயங்கர விமான விபத்தில் இரண்டு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக, இதன் ஆபத்தான கட்டமைப்பு கொண்ட இதன் ஓடுதளமே குறிப்பிடப்படுகிறது.
'டேபிள் டாப்' ஓடுதளம் என்று குறிப்பிடப்படும் இந்த வகை விமான ஓடுதளங்கள் ஏற்கனவே பல நூறு உயிர்களை பலி வாங்கியிருப்பதுடன், ஒவ்வொரு முறையும் உயிர்களை காவு வாங்குவதற்கு தயாராகவே இருப்பது போன்ற கட்டமைப்பை வெளிவரத் துவங்கி இருக்கின்றன.
மங்களூர், கோழிக்கோடு மற்றும் மிஸோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய், சிக்கிம் மாநிலத்தில் உள்ள பாக்யாங், ஹரியானாவில் குலு ஆகிய விமான நிலையங்களும் டேபிள் டாப் வகையிலானதாக உள்ளன. இதில், மங்களூரில் உள்ள விமான நிலையத்தில் 2010ம் ஆண்டு ஓடுபாதையிலிருந்து விலகி சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர்.
பொதுவாக மழை நேரங்களில் சாதாரண விமான ஓடுபாதைகளில் விமானத்தை தரை இறக்குவது விமானிகளுக்கு மிக சவாலான பணியாக இருக்கும். ஓடுபாதையை கணிப்பதற்கு போதிய பார்வை திறன் இல்லாத நிலை, ஓடுபாதையில் மழை நீரால் ஏற்படும் வழுக்கும் தன்மை உள்ளிட்டவற்றை கணித்து மிக கவனமாக தரை இறக்க வேண்டி இருக்கிறது.
இதுபோன்ற பல்வேறு சவாலான சூழல் நிலவிய நேரத்தில்தான் துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரை இறங்கியபோது மோசமான விபத்தில் சிக்கிவிட்டது. விமானத்தை தரை இறக்குவதற்கு தீவிர முயற்சி செய்து திட்டமிட்டே விமானி தரை இறக்கி இருக்கிறார்.
ஆனால், விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளின் திட்டங்கள், கணிப்புகளை பொய்யாக்கி விமானம் துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கிவிட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த விபத்துக்கு அடிப்படை காரணமாக, டேபிள் டாப் வகை ஓடுதளமே கூறப்படுகிறது.
சாதாரண ஓடுதளங்களில் ஒருவேளை விமானங்கள் தவறி, ஓடுதளத்தைவிட்டு வெளியேறினால் கூட அருகில் இருக்கும் விசாலமான புல்வெளி பகுதியில் சென்று நின்றுவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால், டேபிள் டாப் வகை ஓடுதளங்களில் இந்த வாய்ப்பு அறவே கிடையாது.
டேபிள் டாப் வகை ஓடுதளங்கள் மலைக் குன்றுகள் நிறைந்த பகுதி அல்லது மேடான நிலப்பகுதியின் மீது அமைக்கப்படுகிறது. இதனால், விமான ஓடுபாதை துவங்கும் இடத்திலும், முடியும் இடத்திலும் பள்ளமான பகுதி அல்லது பெரும் பள்ளத்தாக்கு கொண்டதாக இருக்கின்றன. கோழிக்கோடு விமான ஓடுபாதையானது 2,860 மீட்டர் நீளம் கொண்டது.
உயரமான மேடை போன்று அமைக்கப்பட்டு இருக்கும் இந்த விமான ஓடுதளத்தை சுற்றி 35 ஆடி ஆழமான பகுதியை கொண்டுள்ளது. இதனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி சென்று முடிவில் உள்ள 35 அடி ஆழ பகுதியில் விழுந்ததுடன் அங்கிருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்தில் சிக்கிவிட்டது. இதில், விமானம் இரண்டு துண்டாக உடைந்ததுடன், 18 பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது.
மிக சரியான இடத்தில் தரை இறக்கி, குறிப்பிட்ட இடத்திற்குள் விமானத்தை நிறுத்தினால் மட்டுமே விபத்தில்லாமல் பயணிகளை பத்திரமாக கொண்டு வந்து சேர்க்க முடியும். கோழிக்கோடு விமான ஓடுபாதையில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போயிங் 737-800 விமானத்திற்கு குறைந்தபட்சம் 1,800 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதை தேவை.
ஆனால், போதிய நீளம் கொண்டதாக இருந்தாலும், மழை காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கிச் சென்று விபத்தில் சிக்கியதாகவே கருதப்படுகிறது. ஏனெனில், இந்த விமானத்தை இயக்கிய விமானிகள் மிகுந்த அனுபவசாலிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், மோசமான தட்பவெப்ப நிலைகளில் இதுபோன்ற விமான ஓடுபாதைகள் ஆபத்துக்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன.
கோழிக்கோடு விமான ஓடுபாதை ஆபத்தானது, விமானங்களை இயக்குவதை நிறுத்த வேண்டும் என்று ஏற்கனவே விமான பாதுகாப்புத் துறை வல்லுனர்கள் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த கருத்துக்களை மீறீ இயக்கப்பட்ட நிலையில், நேற்று மோசமான இந்த விமான விபத்தை இந்த ஓடுபாதை சந்தித்துள்ளதுடன், பல உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. இனியாவது, இதுபோன்ற விமான நிலையங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், பயன்பாட்டை நிறுத்தி, பாதுகாப்பான இடத்தில் ஓடுபாதை கட்டமைப்புடன் விமான நிலையங்களை நிறுவுவது அவசியமாகிறது. நகரிலிருந்து சில மணிநேர கூடுதல் பயணித்தாலும், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகிறது.
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!