Just In
- 1 hr ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 2 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 3 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 3 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
Don't Miss!
- Movies நிர்வாணமாக நிற்பதில் என்ன கஷ்டம்?.. ஆடுஜீவிதம் ஆடியோ லான்ச்சில் லேடி ஆங்க்கருக்கு மோகன்லால் பதிலடி
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- News அதிமுக வேண்டாம்? பாமக முடிவுக்கு என்ன காரணம்? மொத்த டேட்டா இதோ!
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
தெர்மாகோல் கதை எல்லாம் இல்லை... சாலையின் குறுக்கே ரப்பர் டியூப் ஏன் போடப்படுகிறது தெரியுமா?
வெளிநாடுகளில் சாலைகளில் போக்குவரத்தைக் கணக்கிடச் சாலைகளில் கருப்பு ட்யூப் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. இது எப்படி வேலை செய்கிறது என்ன விதமான தகவல்களை எல்லாம் இந்த கருவி செய்யும்? முழு தகவல்களைக் கீழே காணுங்கள்
இந்தியாவில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகிக்கொண்டே செல்கிறது. பெருநகரங்களில் எல்லாம் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருக்கிறது. குறிப்பாகக் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மிகவும் அதிகமான அளவு போக்குவரத்து நெருக்கடி இருக்கிறது. இந்த போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும் என்றால் ஒவ்வொரு ரோட்டிலும் எவ்வளவு போக்குவரத்து நடக்கிறது என்ற தெளிவான புரிதல் வேண்டும். அப்படி என்றால் ஒவ்வொரு பகுதியிலும் டிராபிக் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆய்வு குறிப்பிட்ட ரோட்டில் எந்த நேரத்தில் அதிகமான டிராபிக் இருக்கிறது. எந்த ரக வாகனங்கள் அதிகம் பயணிக்கின்றன. எவ்வளவு வேகத்தில் பயணிக்கின்றன. உள்ளிட்ட தகவல்கள் வேண்டும்.
இந்தியாவில் போக்குவரத்தைக் கணக்கிட 2 வகையான டெக்னிக்கைதான் பயன்படுத்துகிறார்கள். ஒன்று மேனுவல் டெக்னிக் மற்றொன்று ஆட்டோமெட்டிக் டெக்னிக், மேனுவல் டெக்னிக்கை பொருத்தவரை குறிப்பிட்ட ரோட்டில் கணக்கெடுப்பவர்கள் அமர வைக்கப்பட்ட சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பார்கள்.
இரண்டாவது முறை ஆட்டோமெட்டிக் டெக்னிக் அதிகமான போக்குவரத்து நெருக்கடி உள்ள சாலைகளில் இப்படி ஆட்களை நிறுத்தி வைத்து மேனுவலாக கணக்கெடுப்பது என்பது கடினம். இந்தமாதரியான இடங்களில் ஆட்டோமெட்டிக் கேராக்கள் பொருத்தப்பட்டு டிராபிக் கண்காணிக்கப்படும். இதில் எந்த முறை சுலபமாக இருக்கும் என்பதைப் பொருத்து அதைப் பின்பற்றுவார்கள்.
ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் சாலை போக்குவரத்தை துல்லியமாக்கக் கணக்கெடுக்கும் கருவி ஒன்று இருக்கிறது. அது சாலை போக்குவரத்தில் உள்ள முக்கியமாகப் பல தகவல்கள் தானியங்கியாக துல்லியமாக்கக் கணக்கெடுக்கிறது. இதைப் பற்றித் தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.
இந்த கருவிக்குப் பெயர் pneumatic road tube. இதுசாலையின் நடுவே குறுக்காகப் போடப்படுகிறது. சாலையில் இரு புறங்களிலும் இந்த டியூப் ஒரு கருவியுடன் இணைக்கப்படுகிறது. இப்பொழுது இந்த டியூப்பில்வாகனங்கள் ஏறுி செல்லும் போது எத்தனை வாகனங்கள் ஏறிச் செல்கிறது என்பதை இந்த டியூபின் அழுத்தத்தை வைத்து பக்கவாட்டில் இருக்கும் கருவி கணக்கிடும்.
இதில் இரண்டு வகையான கணக்கிட்டு முறை இருக்கிறது. சாலையில் ஒரே ஒரு ட்யூப் மட்டும் இருந்தால் சாலையில் எத்தனை வாகனங்கள் செல்கிறது? முதல் வாகனத்திற்குள் அடுத்த வாகனத்திற்கும் உள்ள நேர இடைவெளி எவ்வளவு? என்ற இந்த இரண்டு தகவல்கள் மட்டுமே கிடைக்கும். இதுவே இரண்டு ட்யூப் போட்டுக் கணக்கெடுக்கும் முறையில் எத்தனை வீல் கொண்ட வாகனங்கள் எத்தனை எண்ணிக்கையில் பயணிக்கிறது? மல்டி ஆக்ஸில் வாகனங்கள் எத்தனை? எந்த திசையிலிருந்து அதிகமாக வாகனங்கள் பயணிக்கிறது? எவ்வளவு வேகத்தில் வாகனங்கள் பயணிக்கிறது உள்ளிட்ட தகவல்களைப் பெறும்.
இந்த தொழிற்நுட்பம் இந்தியாவில் பெரு நகரங்களில் மட்டும் இருப்பதாகக் கூறப்படுகிறது. சில சாலைகளில் நிரந்தரமாகக் கணக்கெடுக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். சில சாலைகளில் தற்காலிகமாகப் பொருத்தப்படும். இது அந்த கணக்கெடுப்பிற்கான தேவைகளைப் பொருத்து இந்த கணக்கீடு நடைபெறும்.
இந்த கணக்கீட்டை வைத்து சாலையில் டிராபிக்கிற்கு ஏற்ப சாலையின் வசதி மேம்பாடு மற்றும் மாற்றுச் சாலை வசதி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். மேனுவல் மற்றும் கேமரா மூலம் கணக்கெடுக்கப்படும் முறையில் போதுமான அளவு துல்லியம் இருக்காது. ஆனால் இந்த கருப்பு ட்யூப் மூலம் கணக்கெடுக்கும் முறையில் துல்லியமான கணக்கீடு முறை இருக்கும்.
இந்தியாவிலும் இந்த தொழிற்நுட்பம் வெகு சில இடங்களிலேயே பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான இடத்தில் மேனுவல் கணக்கீட்டு முறை தான் பின்பற்றப்படுகிறது. இந்த கருவியை வைத்து சாலை டிராபிக்களை கணக்கெடுத்தால் சாலை போக்குவரத்தை மேம்படுத்த சிறப்பாக உதவும்
-
சோப்பு டப்பாக்களுக்கு பாடம் நடத்தும் டாடா கார்... விலை இவ்ளோதானா... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...
-
இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா! சேர் போட்டு ராயல் என்பீல்டு பைக்கில் ஏறிய மூதாட்டி! காரணத்தை கேட்டதும் ஆச்சரியம்
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!