Just In
- 57 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அதிர வைக்கும் சம்பவம்... வாழை பழம் ஏற்றி சென்ற கப்பல்கள் மட்டும் நடுக்கடலில் மாயமான மர்மம் இதுதான்
துரதிருஷ்டம் எனக்கருதி, கப்பல்களில் வாழை பழம் எடுத்து செல்வதை பலர் தவிர்க்கின்றனர். இதற்கான அதிர வைக்கும் காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
விடுமுறை நாட்களை உல்லாச கப்பல்களில் ஆடம்பரமாக செலவிடும் கலாச்சாரம் தற்போது பிரபலமாகி கொண்டே வருகிறது. உல்லாச கப்பல்களில் கிடைக்கும் ஆடம்பரமான வாழ்க்கை சுற்றுலா பயணிகளை சுண்டியிழுக்கிறது. கடல் மார்க்கமாக சென்று உலகின் பல்வேறு நாடுகளை கண்டு களிக்கும் வாய்ப்பை உல்லாச கப்பல்கள் வழங்குகின்றன.
எனவே ஆடம்பரமான பயணங்களை மேற்கொள்ள விரும்புபவர்கள் மட்டுமல்லாது, கடல் வழி பயணங்களை மேற்கொள்ள விரும்புபவர்கள் மத்தியிலும் உல்லாச கப்பல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் உல்லாச கப்பல் பயணங்கள் காஸ்ட்லியான விஷயம் என்பதால், அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.
அதே சமயம் உல்லாச கப்பல் பயணங்களில் பல்வேறு ஆபத்துக்களும் நிறைந்துள்ளன. உல்லாச கப்பல்கள் மது விருந்துகளுக்கு பெயர் பெற்றவை. இவ்வாறான கொண்டாட்டங்களின்போது போதை தலைக்கேறி விடுவதால், ஒரு சிலர் கடலில் விழுந்து மாயமாகி விடுகின்றனர். என்னதான் முயற்சி செய்தாலும் கூட, இவர்களில் பலரை கண்டுபிடிக்க முடிவதில்லை.
உடல் கூட கிடைப்பதில்லை என்பது வேதனையான விஷயம். மேலும் உல்லாச கப்பல்களில் வாழை பழத்தின் வடிவில் மற்றொரு ஆபத்தும் இருப்பதாக நம்பப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பலரும் விரும்ப கூடிய ஒரு பழமாக வாழை பழம் இருக்கிறது. எனவே உல்லாச கப்பல்களில் பயணம் செய்யும் பலர் வாழை பழங்களை தங்கள் லக்கேஜில் எடுத்து செல்லலாம் என நினைக்கின்றனர்.
ஆனால் தப்பி தவறி கூட வாழை பழங்களை உல்லாச கப்பல்களில் எடுத்து செல்ல வேண்டாம் என ஒரு சிலர் எச்சரிக்கை விடுக்கின்றனர். வாழை பழங்கள் துரதிருஷ்டவசமாக கருதப்படுவதே இதற்கு காரணம். இந்த எச்சரிக்கையை மீறி வாழை பழங்களை எடுத்து சென்றால், பெரும் ஆபத்து ஏற்படும் என பலராலும் இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது.
ஆனால் உண்மையில் இது ஒரு மூட நம்பிக்கை மட்டுமே. நமது ஊர் மக்கள் மட்டுமே மூட நம்பிக்கைகளை நம்புவார்கள் என எண்ணி கொண்டிருந்தவர்களுக்கு, உல்லாச கப்பல்களிலும் மூட நம்பிக்கையா? என்ற ஆச்சரியம் ஏற்படுவது இயல்பானதுதான். இதன் பின்னணியை தெரிந்து கொள்ள சில நூறு ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.
உலகின் பெரும்பாலான சரக்கு போக்குவரத்து கப்பல்கள் மூலமாகதான் நடைபெறுகிறது. விமானங்கள் மற்றும் ரயில்கள் கண்டறியப்படுவதற்கு முன்பிருந்தே கப்பல்கள் மூலமாகதான் சரக்கு போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த வகையில் கடந்த 1700ம் ஆண்டுகளில், வாழை பழங்களை ஏற்றி சென்ற சில கப்பல்கள் கடலில் உடைந்து போயின.
மேலும் சில கப்பல்கள் கடலில் மாயமாகின. இதனால்தான் வாழை பழங்களை துரதிருஷ்டவசமானவையாக கருதும் பழக்கம் வந்தது. ஆனால் இது ஒரு மூட நம்பிக்கை மட்டுமே. அதாவது வாழை பழம் பழுக்கும்போது எத்திலீனை வெளியேற்றும். இதனால் வாழை பழங்களுக்கு அருகில் இருக்கும் மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் எளிதில் அழுகி விட கூடிய அபாயம் இருந்தது.
உண்மையில் வாழை பழங்களை ஏற்றி சென்ற கப்பல்களில் இதுதான் நடந்திருக்க கூடும். இதன் விளைவாக அந்த கப்பல்களில் பயணம் செய்தவர்களுக்கு தாங்க முடியாத பசி ஏற்பட்டு, அதன் காரணமாக ஏதேனும் விபரீதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவேதான் தற்போதும் உல்லாச கப்பல்களில் பயணிக்கும்போது வாழை பழங்களை எடுத்து செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.
ஆனால் இன்றைய நவீன உலகத்தில் இதற்கெல்லாம் ஒருவர் அச்சப்பட வேண்டியது கிடையாது. ஏனெனில் தற்போது உள்ள நவீன சுகாதார, பாதுகாப்பு விதிகள் மற்றும் சிறப்பான உணவு சேமிப்பு முறைகள் இந்த அச்சங்களை ஒன்றும் இல்லாததாக்குகின்றன. ஆனால் என்னதான் இருந்தாலும், கடல் பயணங்களை மேற்கொள்ளும்போது வாழை பழங்களை தவிர்ப்பவர்கள் இன்றும் இருக்கவே செய்கின்றனர்.
மீனவர்கள் பலர் இன்றளவும் கூட தங்கள் கப்பல்களில் வாழை பழங்களை எடுத்து செல்வது கிடையாது. அவர்கள் இன்னமும் கூட வாழை பழங்களை துரதிருஷ்டவசமானதாகவே நினைத்து கொண்டுள்ளனர். வாழை பழங்கள் மட்டுமல்லாது, பெண்களையும் துரதிருஷ்டவசமானவர்களாக கருதும் பழக்கமும் நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் துரதிருஷ்டத்தை கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள் என்று இன்றளவும் பலரால் நம்பப்படுகிறது. மாலுமிகளின் கவனத்தை பெண்கள் சிதறடித்து விடுவார்கள் என்பதால், மாலுமிகள் தங்கள் கடமைகளில் இருந்து தவறி விடக்கூடும் எனவும், இதன் விளைவாக துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நேரலாம் என்றும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.