Just In
- 23 min ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 45 min ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 2 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 2 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Movies Actor Siddharth: ஓகே சொன்ன அதிதி.. திருமணத்தை உறுதி செய்த சித்தார்த்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!
சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகருக்கு உலகின் நீண்ட தொலைவுக்கான இடைநில்லா விமான சேவை மீண்டும் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த விமான சேவையில் ஏர்பஸ் ஏ350-900ULR விமானம் பயன்படுத்தப்பட
சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகருக்கு உலகின் நீண்ட தொலைவுக்கான இடைநில்லா விமான சேவை மீண்டும் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த விமான சேவை குறித்த செய்திகளை படித்திருப்பீர்கள். ஆனால், இந்த விமானத்தின் பயணம், இந்த பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட விமானத்தின் தொழில்நுட்ப சிறப்புகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சிங்கப்பூர் - நியூயார்க் இடையே 15,344 கிமீ தூரத்திற்கு இந்த இடைநில்லாமல் செல்லும் நான் ஸ்டாப் விமானம் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் சேவையை துவங்கி இருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து செல்லும் பயணிகள் பிராங்க்ஃபர்ட் சென்று அங்கு அமெரிக்காவிற்கு விமானம் மாறிச் செல்வது வழக்கம். ஆனால், இந்த நேரடி விமானம் மூலமாக 5 முதல் 6 மணிநேரம் குறைவு என்பது மிக முக்கிய விஷயம்.
பொதுவாக இதுபோன்ற நீண்ட தூர தடங்களில் 4 எஞ்சின்கள் கொண்ட விமானங்கள் பயன்படுத்தப்படும். ஏற்கனவே, இந்த தடத்தில் ஏர்பஸ் நிறுவனத்தின் 4 எஞ்சின்கள் கொண்ட A-340-500 என்ற விமானம்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்த தடத்தில், இரண்டு எஞ்சின்கள் கொண்ட A350 விமானம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விமானத்தை இயக்குவதற்கு பார்க்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்று, பாதுகாப்பு வரலாறு. இந்த விமானத்தில்தொழில்நுட்பக் கோளாறுகளால் அவசரமாக தரை இறக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை பெரிய அளவிலான விபத்தில் சிக்கி, பயணித்தோர் ஒருவர் கூட உயிரிழந்த சம்பவங்கள் இல்லை. இந்த விமானத்தை கையில் எடுக்க இதுதான் முக்கிய விஷயம்.
நான் ஸ்டாப் விமானத்தை இயக்குவதில் ஆக முக்கிய விஷயமாக கருதப்படுவது எரிபொருள் அளவு. அவசர சமயங்களில் இலக்காக கொண்டு செல்லும் நகரத்தின் விமான நிலையங்களில் தரை இறக்குவதில் தடங்கல் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு செல்வதற்கான எரிபொருள் ரிசர்வில் இருக்க வேண்டும்.
எனவே, ஆசியாவிலிருந்து செல்லும் விமானங்கள் ஏதேனும் ஒரு ஐரோப்பிய நாட்டில் இறங்கி, பெட்ரோல் நிரப்பி விட்டு பயணத்தை தொடரும். ஆனால், இந்த ஏ-350 -900 Ultra Long Range(ULR) என்ற விமான மாடல் இந்த சேவையில் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண ஏர்பஸ் ஏ-350 விமானத்தில் 1,41,000 லிட்டர் எரிபொருள் நிரப்ப முடியும். ஆனால், இந்த விமானத்தில் 1,65,000 லிட்டர் எரிபொருள் நிரப்ப முடியும்.
இதன்மூலமாக, 19 மணிநேரம் வரை இடைநில்லாமல் பறப்பதற்கு தேவையான எரிபொருளும், ரிசர்வ் எரிபொருளும் இந்த விமானத்தில் நிரப்பிக் கொள்ள முடிகிறது. இதன்மூலமாக, அவசர சமயத்தில் இலக்கு வைக்கப்பட்ட விமான நிலையத்தில் இறங்க முடியாவிட்டாலும், அருகிலுள்ள விமான நிலையம் வரை செல்ல முடியும். மொத்தமாக 111 டன் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.
17 மணி 52 நிமிடங்களில் முதல் பயணத்தை இந்த விமானம் நிறைவு செய்தது. இந்த விமானம் முதல் பயணத்தில் நியூயார்க் விமான நிலையத்தை அடைந்தபோது, 8 டன் எரிபொருள் மீதமிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ340 விமானத்தை இயக்கியபோது 2,20,000 லிட்டர் எரிபொருள் செலவானது.
ஆனால், இந்த விமானம் 25 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தர வல்லது என்பதும், குறைவான மாசு உமிழ்வு கொண்டது. அதேநேரத்தில், நியூயார்க் நகரிலிருந்து சிங்கப்பூர் திரும்பும்போது எதிர்காற்றில் விமானம் பறக்க வேண்டும் என்பதால், கூடுதல் எரிபொருள் செலவாகும் என்பதும் கணிக்கப்பட்ட ஒன்றுதான்.
19 மணிநேரம் பயண நேரத்தை கொண்டிருந்தாலும், 20 மணிநேரம் வரை பறப்பதற்கான எரிபொருள் இந்த விமானத்தில் இருக்கும். மேலும், இந்த விமானத்தில் அதிக எரிபொருள் நிரப்பும் வகையில் கலனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் எரிபொருள் கலன் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.
போயிங் விமானங்களைவிட ஏர்பஸ் விமானங்களில் சப்த தடுப்பு அமைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். இதனால், பயணிகளுக்கான கேபினில் அதிர்வுகளும்,சப்தமும் குறைவாக இருக்கும். சிங்கப்பூர் - நியூயார்க் இடையிலான ஏர்பஸ் ஏ350- 9000ULR விமானத்தில் 80 முதல் 85 டெசிபல் அளவு கேபினில் இறைச்சல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், பிசினல் கிளாஸ் இருக்ககைகளில் 70 டெசிபல் அளவும், பிரிமீயம் எக்கானமி வகுப்பு இருக்கை பகுதியில் 80 டெசிபல் அளவுக்கும் இறைச்சல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விமானம் எதிர்பார்த்ததைவிட மிக சொகுசான, மென்மையான பயண உணர்வை அளித்ததாக பயணித்தோர் தெரிவித்துள்ளனர்.
இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட விமானங்களில் இது அகலமான உடற்கூடு அமைப்பு கொண்டது. இதனால், உட்புறத்தில் மிக விசாலமான இடவசதியை அளிக்கிறது. இந்த விமானத்தில் சாதாரண எக்கானமி வகுப்பு இருக்கைகள் கிடையாது. 94 பிரிமீயம் எக்கானமி வகுப்பு இருக்கைகளும் , 67 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளும் உள்ளன. மொத்தம் 161 பேர் பயணித்தனர்.
பிசினஸ் கிளாஸ் என்பது படுக்கை வசதி கொண்டது. வைஃபை இணைய வசதியும், பொழுதுபோக்கு வசதிகளும் இருந்ததால், பெரும்பாலான பயணிகள் இந்த நீண்ட தூர பயணம் சோர்வை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர். இந்த தடத்தில் குறைவான அளவே வைஃபை வசதி தடங்கல் இருந்ததால், பலர் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழித்துள்ளனர்.
சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் சென்ற இந்த விமானம் பாதுகாப்பு கருதி, அருகில் நிலப்பரப்பை ஒட்டிய பசிபிக் கடல் பகுதி வழியாக பயணித்தது. அவசர சமயத்தில் அருகிலுள்ள விமான நிலையத்தை பிடிப்பதற்கான உத்தி இது.
மொத்தம் 4 விதமான தடங்களை விமானிகள் தேர்வு செய்ய முடியும். அதில், சிங்கப்பூரிலிருந்து சீனா, ஜப்பான் மற்றும் கிழக்கு ரஷ்ய நிலப்பகுதிகளுக்கு அருகாமையில் பயணித்து அமெரிக்க கண்டத்திலுள்ள அலாஸ்கா மற்றும் கிழக்கு கனடா வழியாக நியூயார்க் சென்றடைந்துள்ளது.
இந்த விமானம் அதிகபட்சமாக 950 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் வாய்ந்தது. சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட விமானம் நியூயார்க்கை அடைவதற்கு சராசரியாக மணிக்கு 870 கிமீ வேகத்தில் சென்றுள்ளது. இந்த விமானத்தில் இரண்டு ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் XWB எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானத்தை இயக்குவதற்கு இரண்டு விமானிகளே போதும்.
உட்புறத்தில் குறைவான சப்தம், விசாலமான இடவசதி, அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு உமிழ்வு, பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் ஏர்பஸ் ஏ350-900ULR சிறப்பானதாக இருப்பதே இந்த தடத்தில் இயக்கப்படுவதற்கு முக்கிய காரணம்.
முன்னதாக தோஹா- ஆக்லாந்து இடையே இயக்கப்பட்டு வரும் கத்தார் ஏர்வேஸ் விமானம்தான் உலகின் நீண்ட தொலைவு இடைநில்லாமல் பயணிக்கும் விமான சேவையாக இருந்தது. இந்த விமானம் 14,535 கிமீ தூரம் பயணிக்கிறது. ஆனால், சிங்கப்பூர்- நியூயார்க் இடையிலான இந்த புதிய விமானம் 15,344 கிமீ தூரம் பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டு முதல்முதலாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் மூலமாக இந்த ஏர்பஸ் ஏ350 விமானம் பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 21 விமான நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை 204 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம்தான் இந்த சேவைக்கான ஏ-350-900 விமானங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் டெலிவிரி எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Source: Airbus
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்