Just In
- 41 min ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 1 hr ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 4 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விஷமாக மாறும் மர்மம் இதுதான்... காருக்குள் உணவை விட்டு செல்ல கூடாது... இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க...
காரின் கேபினுக்குள் ஏன் உணவு பொருட்களை ஒருபோதும் விட்டு செல்ல கூடாது? என்பதற்கான முக்கிய காரணங்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.
இன்றைய அதிநவீன உலகில் நாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, அனைத்திற்கும் முழுமையாக தயாராகி இருக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. உதாரணத்திற்கு மார்க்கெட்டிற்கோ, அலுவலகத்திற்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லும்போது பயணத்தின்போது தேவைப்படும் அனைத்து பொருட்களும் நம்மிடம் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகிறது.
இதன்படி காரில் தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும்போது, ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை கொண்டு செல்வதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவது என்பது சிறப்பான ஒரு முடிவுதான். ஆனால் அந்த உணவை காரில் விட்டு செல்வது என்பது நல்ல நடவடிக்கை கிடையாது.
ஆம், காரில் உணவை விட்டு செல்வதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஆனால் ஒரு சிலர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ காரில் உணவை விட்டு செல்கின்றனர். இது எவ்வளவு அபாயகரமானது? என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே காரில் ஏன் உணவு பொருட்களை விட்டு செல்லக்கூடாது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.
உணவு பொருட்கள் கெட்டு போகாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், பாக்டீரியாக்கள் வளர்வதற்கான சூழலை நாம் தவிர்க்க வேண்டும். 4 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலைகளில் பாக்டீரியாக்கள் மிகவும் வேகமாக வளரும். கோடை காலங்களின்போது காருடைய இன்டீரியரின் வெப்ப நிலை மிக எளிதாக 60 டிகிரி செல்சியஸை அடையும்.
பொதுவாக காருக்கு வெளியே இருக்கும் வெப்ப நிலையை காட்டிலும், காருக்கு உள்ளே அதிக வெப்பம் நிலவும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். பாக்டீரியாக்களுக்கு உகந்த வெதுவெதுப்பான நிலை, ஈரப்பதம் மற்றும் ஊட்ட சத்துக்களை தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் வழங்கினால், அவை நிச்சயமாக வளரும்.
கண்ணுக்கு புலப்படாத ஒரு சிறிய பாக்டீரியா வெறும் 12 மணி நேரத்தில் 17 மில்லியன் சந்ததிகளை உருவாக்கும். அதாவது அரை நாளில் 1.70 கோடியாக உருவெடுக்கும். விரைவில் கெட்டு போகக்கூடிய உணவுகள் குளிரூட்டப்படாத நிலையில் இருந்தால், 32 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கீழான வெப்ப நிலையில் வெறும் 2 மணி நேரங்களுக்கு மட்டுமே பாதுகாப்பாக இருக்கும்.
அதுவே வெப்ப நிலை 32 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் மேலாக இருந்தால் வெறும் 1 மணி நேரத்திற்கு மட்டும்தான் பாதுகாப்பாக இருக்கும். காரில் உணவு பொருட்களை விட்டு செல்லக்கூடாது என்பதற்கு இதுவே முக்கியமான காரணம். பாக்டீரியாக்கள் பரவுவதால் ஏற்படக்கூடிய பின் விளைவு ஃபுட் பாய்சனாக (Food Poisoning) இருக்கலாம்.
பாக்டீரியாக்கள் உணவில் இருந்து பரவ தொடங்கும். அந்த உணவை சாப்பிடும் நபர்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே காரின் கேபினில் உண்ணக்கூடிய பொருட்களை ஒருபோதும் விட்டு செல்லாதீர்கள். நீங்கள் காரின் கேபினில் இருந்து வெளியே வரும்போது இதனை உறுதி செய்து கொள்வது நல்லது.
காரில் உணவு பொருட்களை விட்டு செல்லக்கூடாது என்பதற்கு மற்றொரு காரணம் எலிகள். கார்களுக்கு மிகவும் ஆபத்தான விலங்குகளில் எலிகள்தான் முக்கியமானது. எலிகளை கார்களுக்கு எதிரிகள் என்றும் சொல்லலாம். காரில் கிடக்கும் உணவு பொருட்கள் எலிகளை அழையா விருந்தாளிகளாக வரவேற்கும் என்பதை பலர் உணர்வதில்லை.
எலிகள் கார்களுக்குள் நுழைந்து விட்டால், வயர்கள், இருக்கைகள், ஏசி, இன்ஜின் என பல்வேறு பாகங்களை சேதப்படுத்தி விடும். அவற்றை சரி செய்ய நீங்கள் பெரும் தொகையை செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். கார்களுக்குள் எலிகள் நுழைவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. எனவே எலிகளிடம் இருந்து உங்கள் காரை பாதுகாக்க வேண்டுமென்றால், கேபினில் உணவை விட்டு செல்லாதீர்கள்.
கத்தரி வெயில் தொடங்குறதுக்கு இன்னும் பல நாட்கள் இருக்கின்றன. இருப்பினும், இப்போதே வெயில் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த மாதிரியான சூழ்நிலையில் நமது வாகனங்களை எப்படி இந்த வெயிலில் இருந்து காப்பது என்கிற குறிப்புகளைக் கீழே காணலாம். இது நிச்சயம் உங்களுக்கு பயனளிக்கும்.
சுட்டெரிக்கும் வெயில் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டின் பெரும்பாலான மாநிலங்களைத் தாக்க தொடங்கிவிட்டது. இரவில் பனியும், பகலில் கொளுத்தும் வெயிலும் வாட்டி வதைத்து வருகின்றது. இந்த நிலையில் வாகனங்களை எப்படி எப்போதும் இயக்கத்தில் இருக்கிற மாதிரி (ஒர்க்கிங் கன்டிஷனில்) பராமரிப்பது என்ற டிப்ஸையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
ஏர் கன்டிஷனர்:
சம்மர் நேரத்தில் வீட்டில் மட்டுமில்லைங்க காரிலும் ஏசி நல்ல ஒர்க்கிங் கன்டிஷனில் இருப்பது அவசியம். இது இல்லை எனில் நிச்சயம் நம்மால் ஒரு நிமிஷம்கூட காரில் மதிய வேலையில் பயணிக்க முடியாது. ஆகையால், சம்மர் வருவதற்கு முன்னரே ஏசியின் ஒர்க்கிங் கன்டிஷன் எப்படி இருக்குனு ஒரு முறை பரிசோதிச்சுக்கோங்க. இது வேலை செய்தால் மட்டுமே நம்மால் கூலாக பயணங்களை மேற்கொள்ள முடியும்.
கூலண்ட் சிஸ்டம்:
ஏசி வேலை செய்வதன் மூலம் நம்மைக் கூலாக வைத்திருக்க முடியும் அதேநேரத்தில் காரையும் கூலாக வைத்திருக்க வேண்டும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு கூலண்ட் சிஸ்டம் சிறப்பாக வேலை செய்கிறதா என்பதை அவ்வப்போது கவனிக்க வேண்டும். இதன் மூலம் தங்கு தடையில்லா பயணத்தைப் பெற முடியும். அதாவது, தேவையற்ற பிரேக்டவுன் போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும்.
சன்ஷேட் மற்றும் டேஷ்போர்டு:
கார் உரிமையாளர்கள் பலர் தங்களின் கார்களை நேரடியாக வெயில் படக் கூடிய இடங்களில் பார்க் செய்து விடுகின்றனர். இவ்வாறில்லாமல், நேரடி வெயிலில் இருந்து காக்கும் வகையில் போர்வை (கவர்) மூலம் மூடுவது சிறப்பான பலனை வழங்கும். இதன் மூலம் காரின் கேபினையும் லேசாக கூலாக வைத்திருக்க முடியும். தொடர்ந்து, டேஷ்போர்டையும் பாதுகாக்க முடியும்.
ஏர் ஃபில்டர்:
தூசி மற்றும் சமீபத்திய மழை போன்றவற்றால் ஏர் ஃபில்டருக்கு வரும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு. ஆகையால், இதில் எந்த கோளாரும் இல்லை என்பதை முன்னரே அறிந்துகொள்வது வரும் காக்கும் நடவடிக்கை சமம் என வாகன வல்லுநர்கள் கூறுகின்றனர். இவற்றை சுத்தம் செய்வதன் மூலம் காரில் நெடியற்ற காற்றை சுவாசிக்க முடியும்.
டயர்:
மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஓர் கூறுகளில் டயரும் ஒன்று. அதிகப்படியான வெயில் காலங்களில் அதிகளவில் காற்றை நிரப்புவதன் மூலம் வெடிப்பு போன்ற தேவையற்ற சிக்கலை அனுபவிக்க நேரிடும். அதேநேரத்தில், மிக குறைவான காற்றை நிரப்புவதன் மூலம் மிக எளிதில் பஞ்சர் போன்ற சிக்கலைச் சந்திக்கவும் நேரிடும்.
ஆகையால், இவற்றை காற்று முறையான அளவில் நிரப்பப்பட்டிருக்கின்றதா என்பதை இந்த வெயில் காலம் முடியும் வரை அவ்வப்போது ஆராய்வது மிக சிறந்தது. இதன் பஞ்சர் போன்ற தேவையற்ற இன்னல்களைத் தவிர்க்க முடியும். தொடர்ந்து, தடையில்லா பயணத்தையும் நம்மால் பெற முடியும்.
வைப்பர்:
வெயில், மழை மற்றும் குளிர் என பல காலநிலைகளை இது சந்தித்திருப்பதால் வைப்பரின் ரப்பர்கள் பழுதாகாமல் இருக்கின்றதா என்பதையும் ஒரு முறை பரிசோதித்துக் கொள்வது சிறந்தது. பழுதாகி இருக்கும் வைப்பரை கண்ணாடியைச் சுத்தம் செய்வதாக நினைத்து ஆன் செய்தால், அது விண்ட் ஷீல்டை பாழாக்கிவிடும்.
ஆகையால், இந்த கோடை வெயில் இன்னும் தீவிரமடைவதற்குள் மேலே கூறிய அனைத்தையும் ஒரு முறை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் தங்கு தடையில்லா பயணங்களைப் பெற முடியும். தொடர்ந்து, காரையும் நல்ல இயங்குநிலையில் பராமரிக்க முடியும்.
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்