Just In
- 32 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க
1 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட காரை திருட போய் பெண் ஒருவர் காமெடி செய்துள்ளார். அவர் எப்படி சிக்கினார்? என தெரிந்தால் நீங்கள் வயிறு வலிக்க சிரிப்பது உறுதி.
சொந்தமாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் கார் கொள்ளையர்களிடம் இருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உண்மையில் கொள்ளையர்கள் தற்போது மிகவும் 'ஸ்மார்ட்' ஆக மாறி விட்டனர். புதிய கார்களை கொள்ளையடிக்க அவர்கள் புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.
எனவே உரிமையாளர்கள் கூடுதல் கவனத்துடன் இல்லாவிட்டால் கொள்ளையர்கள் காரை எளிதாக 'ஸ்வாகா' செய்து விடுவார்கள். கொள்ளையர்களின் அபாயத்தில் இருந்து காரை காப்பாற்ற தேவையான பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை கார் உற்பத்தி நிறுவனங்களும் வழங்கி கொண்டுதான் உள்ளன. ஆனால் கார் நிறுவனங்களை விட கொள்ளையர்கள் சில சமயங்களில் ஒரு படி மேலே யோசிக்கின்றனர்.
செய்வது தவறுதான் என்றாலும், காரை மிக எளிதாக அவர்கள் 'அபேஸ்' செய்து விடுகின்றனர். கொள்ளையை கூட அவ்வளவு நேர்த்தியாக செய்து வருகின்றனர். ஆனால் தொழிலில் எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும் கூட ஒரு சில நிறுவனங்களின் கார்கள் மீது கொள்ளையர்கள் கை வைக்க தயங்குவார்கள். அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றுதான் டெஸ்லா.
டெஸ்லா நிறுவனத்தை பற்றி அறிமுகமே தேவையில்லை. எலெக்ட்ரிக் கார்கள் உலகில் தனி சாம்ராஜ்யமே நடத்தி கொண்டிருக்கும் ஒரு நிறுவனம்தான் டெஸ்லா. அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் அதிநவீன எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை உலகம் முழுவதும் கொடி கட்டி பறந்து வருகிறது. டெஸ்லா கார்களில் ஏராளமான அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு வசதிகளாகட்டும் அல்லது சொகுசு வசதிகளாகட்டும் டெஸ்லாவிற்கு நிகர் டெஸ்லாதான். டெஸ்லா கார்களை கொள்ளையடிப்பதும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. டெஸ்லா கார்களின் மீது கை வைப்பது என்பது தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்வதற்கு சமமானது. அப்படிப்பட்ட டெஸ்லா காரை திருட முயன்று பெண் ஒருவர் தோல்வியடைந்திருக்கிறார்.
கேத்தி செயின் (Kathy Sain) என்ற பெண்தான் இந்த விபரீத முயற்சியை செய்து சிக்கி கொண்டுள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பேசன் என்ற நகரில், ஷாப்பிங் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள பார்க்கிங் பகுதியில் டெஸ்லா மாடல் எஸ் (Tesla Model S) எலெக்ட்ரிக் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
இந்திய மதிப்பில் டெஸ்லா மாடல் எஸ் காரின் விலை 1 கோடி ரூபாய்க்கும் மேல் வரும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 335 மைல்களுக்கும் மேல் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சூழலில் ஷாப்பிங் சென்டரின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லா மாடல் எஸ் காரை கேத்தி செயின் பார்த்துள்ளார்.
உடனடியாக அதனை திருடிக்கொண்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு விட்டார். கிழக்கு ஹைவே 260-ல் அவர் காரை திருடி கொண்டு பயணித்தார். இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக அவர்கள் காரை சேஸ் செய்ய தொடங்கினர். அதற்கு முன்னதாக கேத்தி செயின் திருடி சென்ற டெஸ்லா மாடல் எஸ் காரை தொழில்நுட்ப உதவியுடன் அவர்கள் நிறுத்த முயன்றனர்.
ஆம், இந்த கார் திருடி செல்லப்பட்டால், அதனை நிறுத்த முடியும். அத்தகைய தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக கேத்தி செயின் காரை திருடி சென்ற சமயத்தில் அந்த தொழில்நுட்ப வசதி வேலை செய்யவில்லை. இதனை கேத்தி செயினுக்கு கிடைத்த அதிர்ஷடம் என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் போலீசார் காரை துரத்தி சென்று கொண்டே இருந்தனர்.
ஆனால் கேத்தி செயினுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆம், அவர் திருடி சென்ற கார் சார்ஜ் தீர்ந்து திடீரென நின்று விட்டது. அந்த நேரத்தில் போலீசாரும் அங்கு வந்து சேர்ந்தனர். இதனால் கேத்தி செயின் கையும், களவுமாக சிக்கி கொண்டார். ஆனால் அதன்பின் அவர் செய்தது அதை விட மிகப்பெரிய காமெடி.
காரை விட்டு வெளியே வருமாறு கேத்தி செயினிடம் போலீசார் கூறியுள்ளனர். ஆனால் காரை விட்டு இறங்க மாட்டேன் என கேத்தி செயின் அடம் பிடித்துள்ளார். நீண்ட நேரமாக காருக்கு உள்ளேயே இருந்துள்ளார். எனவே வேறு வழியில்லாமல் விண்டோவை உடைத்துதான் போலீசார் அவரை வெளியே வரவழைத்தனர். இதன்பின் கேத்தி செயின் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஆனால் ஒரு முக்கியமான கேள்விக்கு இன்னும் விடை காணப்படவில்லை. இந்த காரை கேத்தி செயினால் எப்படி இயக்க முடிந்தது? அவர் அதனை எப்படி திருடி சென்றார்? என்ற தகவல்கள் தற்போதைக்கு வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டெஸ்லா காரை திருடிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இதனிடையே சீனா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது டெஸ்லா கார்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், இந்தியாவில் இன்னும் களமிறங்கவில்லை. டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகையை இங்குள்ள வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்கும் அவர்களின் எதிர்பார்ப்பு அனேகமாக அடுத்த ஆண்டு நிறைவேறலாம். ஆம், டெஸ்லா நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்